Top posting users this month
No user |
மனித உரிமைகள் தொடர்பாக மூன்று விசாரணைக் குழுக்களின் அறிக்கைகள் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!
Page 1 of 1
மனித உரிமைகள் தொடர்பாக மூன்று விசாரணைக் குழுக்களின் அறிக்கைகள் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!
மூன்று விசாரணைக்குழுக்களின் அறிக்கைகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் சமர்த்துள்ளார்.
இலங்கையில், இடம்பெற்றாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த இலங்கையிலும், ஐக்கிய நாடுகள் சபையினாலும் ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன.
இதன்படி, மூன்று முக்கிய விசாரணைக் குழுக்களின் அறிக்கைகளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
ஐ,நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினால் நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட மக்ஸவெல் பரணகம ஆணைக்குழு மற்றும் நிசங்க உடலகம ஆணைக்குழு ஆகியவற்றின் அறிக்கைளே இவ்வாறு இன்று நாடாளுமன்றத்தில் அவரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, ஜெனிவாவில் இலங்கையின் அனுசரணையுடன் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன கோரிக்கை விடுத்தார்.
அதற்கு தீர்மானத்தின் பிரதியை நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக பிரதமர் தெரிவித்தார்.
இதேவேளை, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நிறைவேற்றபப்பட்ட தீர்மானம் தொடர்பாக எதிர்வரும் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படவுள்ள நிலையில் இன்று இந்த மூன்று அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில், இடம்பெற்றாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த இலங்கையிலும், ஐக்கிய நாடுகள் சபையினாலும் ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன.
இதன்படி, மூன்று முக்கிய விசாரணைக் குழுக்களின் அறிக்கைகளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
ஐ,நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினால் நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட மக்ஸவெல் பரணகம ஆணைக்குழு மற்றும் நிசங்க உடலகம ஆணைக்குழு ஆகியவற்றின் அறிக்கைளே இவ்வாறு இன்று நாடாளுமன்றத்தில் அவரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, ஜெனிவாவில் இலங்கையின் அனுசரணையுடன் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன கோரிக்கை விடுத்தார்.
அதற்கு தீர்மானத்தின் பிரதியை நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக பிரதமர் தெரிவித்தார்.
இதேவேளை, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நிறைவேற்றபப்பட்ட தீர்மானம் தொடர்பாக எதிர்வரும் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படவுள்ள நிலையில் இன்று இந்த மூன்று அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum