Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நிலையான அபிவிருத்தி இலக்குகள் 2030ஆம் ஆண்டுக்குள் பூர்த்தி செய்யப்படும்: ஜனாதிபதி

Go down

நிலையான அபிவிருத்தி இலக்குகள் 2030ஆம் ஆண்டுக்குள் பூர்த்தி செய்யப்படும்: ஜனாதிபதி Empty நிலையான அபிவிருத்தி இலக்குகள் 2030ஆம் ஆண்டுக்குள் பூர்த்தி செய்யப்படும்: ஜனாதிபதி

Post by oviya Mon Sep 28, 2015 1:19 pm

ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆரம்பம் முதல் உலக வாழ் மனித இனத்தின் வாழ்க்கையை தர்க்க ரீதியானதும், அர்த்தபூர்வமானதும், சுபீட்சமானதுமாக மாற்றி அமைக்க வேண்டுமென்றே முயற்சித்து வருவதாகவும் இதனை பூர்த்தி செய்து கொள்ள உலகத்தலைவர்களாகிய நாம் முயற்சிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றும் போது குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,

இம்முறை முன்வைக்கப்பட்டுள்ள 2015ஆம் ஆண்டுக்கான நிலையான அபிவிருத்தி குறித்து யோசனைகளுக்கு இலங்கை அரசாங்கத்தின் முழுமையான அளவில் ஆதரவு கிடைக்கும் என்பதனை நான் இங்கு மிகவும் மகிழ்ச்சியுடன் கூற விரும்புகின்றேன்.



அதற்கமைய 21ம் நூற்றாண்டில் உலக இயற்கை வள உணர்வுபூர்வமான புதிய பண்பாட்டைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனை உலக மக்கள் மத்தியில் தெளிவாக அறிவிக்கின்றேன்.

நிலையான அபிவிருத்தி என்பது ஒட்டுமொத்த உலக மக்களினதும் பொருளாதார, சமூக மற்றும் சுற்றாடல் பாதுகாப்பின் அடிப்படையிலானதாகும் அதற்கமைய எதிர்வரும் 2030ம் ஆண்டுகளில் அனைத்து இலக்குகளையும் முழுமையாக எட்டும் நோக்கில் இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என நான் மிகவும் தெளிவாக கூறுகின்றேன்.

இதன் போது எங்கள் மக்களின் வறுமையை இல்லாதொழித்து அனைத்து விதமான ஏற்ற இறக்கங்களையும் இல்லாமல் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு நாங்கள் செயற்பட வேண்டும்.

அதற்கு சமமாக இயற்கை வளங்களை உச்சளவில் பாதுகாக்க வேண்டியது அவசியமானதென்பதோடு அதனை பாதுகாப்பதற்காக கொள்கை ஒன்றும் கொண்டுவரப்படும்.

இயற்கை அனர்த்தங்களை எதிர்நோக்கும் வகையிலான 13ம் நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி கொள்கையின் எதிர்வரும் நடவடிக்கையாக சுற்றாடலியல் நல்லாட்சி கொள்கை குறித்து விசேட அவதானம் செலுத்தப்படும் என்பதனை நாங்கள் இங்கு மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கின்றேன்.

இத்திட்டங்களை செயற்படுத்தும் போது அரசாங்கப் பிரிவுகள் மாத்திரமின்றி சிவில் சமூகங்கள் மற்றும் வர்த்தக சமூகம் ஆகிய அனைத்து சமூகங்களையும் ஈடுபடுத்திக்கொள்வது மிகவும் முக்கியமான ஒரு விடயமாகும் என்பது எனது கருத்தாகும்.

நிலையான அபிவிருத்தி என்பது எந்த ஒரு நாட்டிற்கும் தனியாக்கி கொள்ள முடியாது எனவே ஐக்கிய நாடுகள் பிராந்திய அமைப்புக்களுடனும் வேறு நாடுகளின் ஆதரவுடன் செயற்படும் முறைகளும் குறித்த திட்டங்களுக்குள் உள்ளடக்கப்படும்.

இயற்கை அனர்த்தங்களை எதிர்நோக்கும் வகையிலான 13ம் நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கு இலங்கையின் முழுமையான ஆதரவுகள் கிடைக்கும் என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum