Top posting users this month
No user |
அரச வங்கியொன்றில் முகமூடிக் கொள்ளையர்கள் அட்டகாசம்! பொலிசார் தீவிர தேடுதல் வேட்டை
Page 1 of 1
அரச வங்கியொன்றில் முகமூடிக் கொள்ளையர்கள் அட்டகாசம்! பொலிசார் தீவிர தேடுதல் வேட்டை
கொழும்பை அண்மித்த ஹங்வெல்ல பிரதேசத்தில் உள்ள அரச வங்கியொன்றில் முகமூடிக் கொள்ளையர்களால் இரண்டு மில்லியன் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளது.
இன்று நண்பகலை அண்மித்த நேரத்தில் நான்கு முகமூடிக் கொள்ளையர்கள் துணிகரமாக வங்கியினுள் புகுந்து பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். கொள்ளையைத் தடுக்க முயன்றி வங்கியின் காவலாளிக்கு தமது கையில் இருந்த டீ56 ரக துப்பாக்கியால் சூடு நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இது குறித்த தகவல் கிடைத்தவுடன் பொலிசார் ஹங்வெல்ல,
அவிசாவளை, கடுவலை, பத்தரமுல்லை உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கி உடனடியாக வீதி சோதனையில் ஈடுபட்டனர். எனினும் கொள்ளையர்கள் தப்பியோடிவிட்டனர்.
இதற்கிடையே கொள்ளையர்கள் ரணால பிரதேசத்தில் உள்ள அடர்வனப் பகுதிக்குள் உட்புகுந்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து இன்று பிற்பகல் தொடக்கம் அப்பிரதேசம் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் சல்லடை போட்டு தேடுதல் வேட்டை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இன்று நண்பகலை அண்மித்த நேரத்தில் நான்கு முகமூடிக் கொள்ளையர்கள் துணிகரமாக வங்கியினுள் புகுந்து பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். கொள்ளையைத் தடுக்க முயன்றி வங்கியின் காவலாளிக்கு தமது கையில் இருந்த டீ56 ரக துப்பாக்கியால் சூடு நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இது குறித்த தகவல் கிடைத்தவுடன் பொலிசார் ஹங்வெல்ல,
அவிசாவளை, கடுவலை, பத்தரமுல்லை உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கி உடனடியாக வீதி சோதனையில் ஈடுபட்டனர். எனினும் கொள்ளையர்கள் தப்பியோடிவிட்டனர்.
இதற்கிடையே கொள்ளையர்கள் ரணால பிரதேசத்தில் உள்ள அடர்வனப் பகுதிக்குள் உட்புகுந்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து இன்று பிற்பகல் தொடக்கம் அப்பிரதேசம் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் சல்லடை போட்டு தேடுதல் வேட்டை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum