Top posting users this month
No user |
குரங்கினைப் போல நடிக்க வேண்டாம்: பிரதமர் ரணில்
Page 1 of 1
குரங்கினைப் போல நடிக்க வேண்டாம்: பிரதமர் ரணில்
பாராளுமன்றத்தில் இன்று, எதிர்க்கட்சி தலைவர் பதவி, சம்பந்தனுக்கு வழங்கியமை குறித்து, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தனது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.
சபாநாயகர் கரு ஜயசூரிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவரும் மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான, இரா.சம்பந்தன் எதிர்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என அறிவிப்பு வெளியானவுடன் பாராளுமன்றத்தில் சிறிது நேரம் பதட்டமான சூழல் நிலவியுள்ளது.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய விமல் வீரவன்ச, எதிர்க்கட்சி தலைவர் பதவியினை குமார வெல்கம விற்கு வழங்குவது தொடர்பில் ஏற்கனவே ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் போது சுட்டிக்காட்டினார்.
இச்சந்தர்பத்தில் இப்புதிய நியமனம் செல்லுபடியாகும் காலம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதலளித்த சபாநாயகர், அதற்கான கடிதம் இன்னும் பெற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்தார்.
அச்சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவித்த பிரதமர் ரணில், எதிர்க்கட்சி தலைவர் குறித்து சபாநாயகரால் அறிவிக்கப்பட்டுவிட்டது. இதற்கு பிறகு அதனை எவரும் எதிர்ப்பது பொருத்தமில்லை. அதனை ஏற்றுக்கொள்ள வேண்டியது அனைவரது கடைமை என தெரிவித்தார்.
ஆனால் எதிர்ப்பு தொடர்ந்தது.
அப்போது உரையாற்றிய பிரதமர், குரங்கினைப் போல நடிக்க வேண்டாம், முன்னைய பாராளுமன்றத்தில் செயற்பட்டதனைப் போல செயற்படுவதற்கு இப்பாராளுமன்றத்தில் எவ்வித வழிகளும் இல்லை. அதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றார்.
சபாநாயகர் கரு ஜயசூரிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவரும் மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான, இரா.சம்பந்தன் எதிர்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என அறிவிப்பு வெளியானவுடன் பாராளுமன்றத்தில் சிறிது நேரம் பதட்டமான சூழல் நிலவியுள்ளது.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய விமல் வீரவன்ச, எதிர்க்கட்சி தலைவர் பதவியினை குமார வெல்கம விற்கு வழங்குவது தொடர்பில் ஏற்கனவே ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் போது சுட்டிக்காட்டினார்.
இச்சந்தர்பத்தில் இப்புதிய நியமனம் செல்லுபடியாகும் காலம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதலளித்த சபாநாயகர், அதற்கான கடிதம் இன்னும் பெற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்தார்.
அச்சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவித்த பிரதமர் ரணில், எதிர்க்கட்சி தலைவர் குறித்து சபாநாயகரால் அறிவிக்கப்பட்டுவிட்டது. இதற்கு பிறகு அதனை எவரும் எதிர்ப்பது பொருத்தமில்லை. அதனை ஏற்றுக்கொள்ள வேண்டியது அனைவரது கடைமை என தெரிவித்தார்.
ஆனால் எதிர்ப்பு தொடர்ந்தது.
அப்போது உரையாற்றிய பிரதமர், குரங்கினைப் போல நடிக்க வேண்டாம், முன்னைய பாராளுமன்றத்தில் செயற்பட்டதனைப் போல செயற்படுவதற்கு இப்பாராளுமன்றத்தில் எவ்வித வழிகளும் இல்லை. அதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum