Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தமிழகத்தில் உள்ள அனைத்து சிறப்பு முகாம்களையும் நிரந்தரமாக மூட வேண்டும்: வேல்முருகன்

Go down

தமிழகத்தில் உள்ள அனைத்து சிறப்பு முகாம்களையும் நிரந்தரமாக மூட வேண்டும்: வேல்முருகன் Empty தமிழகத்தில் உள்ள அனைத்து சிறப்பு முகாம்களையும் நிரந்தரமாக மூட வேண்டும்: வேல்முருகன்

Post by oviya Fri Aug 21, 2015 3:32 pm

ஈழத் தமிழ் உறவுகளை அவர்கள் விரும்புகிற வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், தமிழீழத்தில் சிங்களப் பேரினவாதத்தின் இனப் படுகொலை அழித்தொழிப்பில் இருந்து தப்பி தாய் தமிழகத்துக்கு வருகிற ஈழத் தமிழ் உறவுகளில் சிலர் சட்டங்களை மீறியதற்காக கைது செய்யப்பட்டு அடைக்கப்படுகிற இடமாக சிறப்பு முகாம்கள் இருந்து வருகின்றன.

ஆனால் இப்படி கைது செய்யப்பட்டு சிறப்பு முகாம்களில் இருக்கும் ஈழத் தமிழர்கள் மீதான வழக்குகள் விசாரிக்கப்பட்டு அவர்கள் உரிய தண்டனை காலத்துக்குப் பின்னர் விடுவிக்கப்படாமல் தொடர்ந்து கொட்டடி முகாம்களிலேயே அடைத்து வைக்கப்படுகின்றனர்.

செங்கல்பட்டு, பூவிருந்தவல்லி, திருச்சி சிறப்பு முகாம்களில் உள்ள ஈழத் தமிழ் உறவுகள் தங்களை விடுதலை செய்யக் கோரி பல கட்டப் போராட்டங்களை நடத்தியிருக்கின்றனர்.

அண்மையில் கூட திருச்சி சிறப்பு முகாமில் ஈழத் தமிழ் தம்பதியினர் தற்கொலைக்கும் முயன்றிருக்கின்றனர்.

இத்தகைய சிறப்பு முகாம்களை இழுத்து மூடி இதில் உள்ள ஈழத் தமிழ் உறவுகளை பொதுமுகாம்களிலோ அல்லது அவர்கள் விரும்புகிற வெளிநாட்டுக்கு சிறப்பு நேர்வின் அடிப்படையில் அனுப்பி வைக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழகத்தின் கோரிக்கை.

ஆனால் மத்திய அரசு இந்த சிறப்பு முகாம்களை மூடுவதற்கு தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது.

இந்திய தேசத்துடன் தொப்புள் கொடி உறவே இல்லாத திபெத்திய அகதிகள் இந்த மண்ணில் சொர்க்க வாழ்க்கை வாழ்கிற போது எங்கள் தொப்புள் கொடி உறவாகிய ஈழத் தமிழ் உறவுகள் அகதிகளாக வந்த போதும் நரக வாழ்க்கை வாழுகிற அவலம் நீடித்துக் கொண்டிருக்கிறது.

திபெத்திய அகதிகளுக்கு காட்டும் கரிசனையை தமிழீழ உறவுகளுக்கு இந்திய அரசு ஒரு நாளும் காட்டியதும் காட்டப்போவதில்லை.

ஈழத் தமிழ் அகதிகளுக்கு மாநில அரசுதான் அத்தனை உதவிகளையும் செய்து கொண்டிருக்கிறது.

இத்தகைய சூழலில் சிறப்பு முகாம்கள் என்ற போர்வையில் சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அத்தனை ஈழத் தமிழ் உறவுகளையும் உடனே பொதுமுகாம்களுக்கு மாற்ற வேண்டும் அல்லது அவர்கள் விரும்புகிற வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து சிறப்பு முகாம்களையும் நிரந்தரமாக இழுத்து மூட வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி ஆகஸ்ட் 24ம் திகதியன்று திருச்சி சிறப்பு முகாமை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி நடத்த உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்!- டி.எம்.ஜயரட்ன
» மேகதாதுவில் கர்நாடகா புதிய அணை கட்டுவதை தடுக்க வேண்டும் என்று தமிழக அனைத்துக் கட்சிக் குழு பிரதமரிடம் வலியுறுத்தியதாக டெல்லியில் விஜயகாந்த் பேட்டி அளித்துள்ளார். மேகதாது அணை தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களுடன் பிரதமரை நேரில் சந்திக்க டெல்லி புறப்பட்டு செல
» இலங்கை அகதிகளை திருப்பியனுப்ப மாட்டோம்! தமிழக ஆளுனர் உரைக்கு வேல்முருகன் பாராட்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum