Top posting users this month
No user |
வெண்ணெய் திரண்டு வரும் வேளையில் தாழியை உடைக்கிறார் ரணில்: ராமதாஸ்,வேல்முருகன்
Page 1 of 1
வெண்ணெய் திரண்டு வரும் வேளையில் தாழியை உடைக்கிறார் ரணில்: ராமதாஸ்,வேல்முருகன்
இலங்கை கடற்பரப்பிற்குள் தமிழக மீனவர்கள் நுழைந்தால் அவர்களை சுட்டுத் தள்ளுவதற்கு உரிமையுள்ளது எனும் இல்கை பிரதமரின் கருத்து மனிததன்மையற்றது என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று இந்திய ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய ஊடகமொன்றுக்கு அண்மையில் வழங்கிய செவ்வியின் போதே இரண்டாவது முறையாகவும் இதுமாதிரியான கருத்தொன்றை தெரிவித்துள்ளார்.
அவர் முதலாவது தடவையாக இவ்வாறானதொரு கருத்தை தெரிவித்த போது தன்னிடம் மன்னிப்பு கேட்டு கொண்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு தெரிவித்து ஒரு வாரத்திற்குள் இந்திய பிரதமரின் இலங்கை விஜயம் நிறைவு பெற்று நாடு திரும்பிய நிலையில் இலங்கை பிரதமர் மீண்டும் இவ்வாறானதொரு கருத்தை தெரிவித்திருப்பது வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறுகிறதோ என எண்ண தோன்றுவதாக தெரிவித்துள்ளார்.
இலங்கை, இந்திய கடற்பரப்பு மிகவும் குறுகியது என்பதால் இப்பிரச்சினையை துப்பாக்கி முனையில் தீர்ப்பதற்கு முனைதல் தவறு என அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன்,
ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு அப்பால்தான் விசைபடகுகள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் எனும் பட்சத்தில் பெரும்பாலும் இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லையிலும், இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லையிலும் நுழைவது தவிரக்க முடியாத ஒரு விடயம்.
இலங்கை கடற்படையினரால் எந்தளவு தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்களோ அதில் பாதிக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இலங்கை மீனவர்கள் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்படுகிறார்கள்.
இந்தளவு சிக்கல் நிலையை தோற்றுவித்துள்ள இரு நாட்டு மீனவர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்வு காணமுடியும் என்பதை உணர்ந்தமையினாலேயே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில் இலங்கை பிரதமர் முன்வைத்துள்ள கருத்து வெண்ணெய் திரண்டு வரும் வேளையில் தாழியை உடைப்பதற்கு சமமாகும் என ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
டில்லியில் கடந்த 2013ம் ஆண்டு இடம்பெற்ற இந்திய-இலங்கை கூட்டு ஆணையத்தின் 8வது கூட்டத்தில் சர்வதேச எல்லைபகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதை குறைத்து கொள்ளல், எல்லை மீறும் மீனவர்கள் மீது தாக்குதல் மேற்கொள் கூடாது, அனைத்து மீனவர்களையும் மனிதாபிமானத்துடன் வேண்டும் என இரு நாடுகளும் உறுதி பூண்டுள்ளன.
இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் இலங்கை பிரதமருக்கிடையில் அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதும் கூட இவ்வாறான தீர்மானம் எட்டப்பட்டது.
இந்நிலையில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு நடந்து கொள்வது இனப்படுகொலைகளத்ததின் எல்லையை வங்கக்கடலுக்கும் விரிவுபடுத்துவதாக அமைந்து விடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மீனவர்கள் மாத்திரம் எல்லை தாண்டுவதில்லை, இலங்கை மீனவர்களும் இதனை செய்கிறார்கள் இதற்காக மீனவர்களை சுட்டு கொள்வதே தீர்வு என்றால் வங்கக்கடல் செங்கடலாக மாறிவிடும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதை உணர்ந்து இது போன்று பொறுப்பில்லாத கருத்துக்களை முன்வைக்காமல் இருதரப்பு மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண முனைய வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் தெரிவித்துள்ளதுடன்,
இது போன்ற சீண்டல்களை தொடர்ந்தால் இலங்கை பிரதமர் போன்று கருத்துக்களை முன்வைக்கும் தலைவர்களை கட்டுப்படுத்த எவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமோ அவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசு ஒருபோதும் பின்னோக்கி செல்லாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ள கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பிரதமர் ரணிலின் கருத்தை கண்டிக்கும் வகையில் இந்தியாவுக்கான இலங்கை தூதுவரை அழைத்து மத்திய அரசு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழக மீனவர்களை படுகொலை செய்த இலங்கை அரசாங்கத்தின் மீது வழக்கு தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதியை பெற்றுத்தர வேண்டும் எனவும்,
இலங்கையின் இத்தகைய இனவெறி போக்குக்கு சரியான பாடம் புகட்ட தமிழ்நாட்டு சட்டபேரவையில் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட பொருளாதார தடை விதிக்க வேண்டும் எனும் தீர்மானத்தை மத்திய அரசு இனியாவது நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், தி.வேல்முருகன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
அவர் இன்று இந்திய ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய ஊடகமொன்றுக்கு அண்மையில் வழங்கிய செவ்வியின் போதே இரண்டாவது முறையாகவும் இதுமாதிரியான கருத்தொன்றை தெரிவித்துள்ளார்.
அவர் முதலாவது தடவையாக இவ்வாறானதொரு கருத்தை தெரிவித்த போது தன்னிடம் மன்னிப்பு கேட்டு கொண்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு தெரிவித்து ஒரு வாரத்திற்குள் இந்திய பிரதமரின் இலங்கை விஜயம் நிறைவு பெற்று நாடு திரும்பிய நிலையில் இலங்கை பிரதமர் மீண்டும் இவ்வாறானதொரு கருத்தை தெரிவித்திருப்பது வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறுகிறதோ என எண்ண தோன்றுவதாக தெரிவித்துள்ளார்.
இலங்கை, இந்திய கடற்பரப்பு மிகவும் குறுகியது என்பதால் இப்பிரச்சினையை துப்பாக்கி முனையில் தீர்ப்பதற்கு முனைதல் தவறு என அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன்,
ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு அப்பால்தான் விசைபடகுகள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் எனும் பட்சத்தில் பெரும்பாலும் இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லையிலும், இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லையிலும் நுழைவது தவிரக்க முடியாத ஒரு விடயம்.
இலங்கை கடற்படையினரால் எந்தளவு தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்களோ அதில் பாதிக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இலங்கை மீனவர்கள் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்படுகிறார்கள்.
இந்தளவு சிக்கல் நிலையை தோற்றுவித்துள்ள இரு நாட்டு மீனவர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்வு காணமுடியும் என்பதை உணர்ந்தமையினாலேயே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில் இலங்கை பிரதமர் முன்வைத்துள்ள கருத்து வெண்ணெய் திரண்டு வரும் வேளையில் தாழியை உடைப்பதற்கு சமமாகும் என ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
டில்லியில் கடந்த 2013ம் ஆண்டு இடம்பெற்ற இந்திய-இலங்கை கூட்டு ஆணையத்தின் 8வது கூட்டத்தில் சர்வதேச எல்லைபகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதை குறைத்து கொள்ளல், எல்லை மீறும் மீனவர்கள் மீது தாக்குதல் மேற்கொள் கூடாது, அனைத்து மீனவர்களையும் மனிதாபிமானத்துடன் வேண்டும் என இரு நாடுகளும் உறுதி பூண்டுள்ளன.
இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் இலங்கை பிரதமருக்கிடையில் அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதும் கூட இவ்வாறான தீர்மானம் எட்டப்பட்டது.
இந்நிலையில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு நடந்து கொள்வது இனப்படுகொலைகளத்ததின் எல்லையை வங்கக்கடலுக்கும் விரிவுபடுத்துவதாக அமைந்து விடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மீனவர்கள் மாத்திரம் எல்லை தாண்டுவதில்லை, இலங்கை மீனவர்களும் இதனை செய்கிறார்கள் இதற்காக மீனவர்களை சுட்டு கொள்வதே தீர்வு என்றால் வங்கக்கடல் செங்கடலாக மாறிவிடும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதை உணர்ந்து இது போன்று பொறுப்பில்லாத கருத்துக்களை முன்வைக்காமல் இருதரப்பு மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண முனைய வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் தெரிவித்துள்ளதுடன்,
இது போன்ற சீண்டல்களை தொடர்ந்தால் இலங்கை பிரதமர் போன்று கருத்துக்களை முன்வைக்கும் தலைவர்களை கட்டுப்படுத்த எவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமோ அவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசு ஒருபோதும் பின்னோக்கி செல்லாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ள கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பிரதமர் ரணிலின் கருத்தை கண்டிக்கும் வகையில் இந்தியாவுக்கான இலங்கை தூதுவரை அழைத்து மத்திய அரசு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழக மீனவர்களை படுகொலை செய்த இலங்கை அரசாங்கத்தின் மீது வழக்கு தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதியை பெற்றுத்தர வேண்டும் எனவும்,
இலங்கையின் இத்தகைய இனவெறி போக்குக்கு சரியான பாடம் புகட்ட தமிழ்நாட்டு சட்டபேரவையில் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட பொருளாதார தடை விதிக்க வேண்டும் எனும் தீர்மானத்தை மத்திய அரசு இனியாவது நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், தி.வேல்முருகன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum