Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அன்புமணி வீட்டில் வேலை பார்த்த இளம்பெண் தற்கொலை: காரணம் என்ன?

Go down

அன்புமணி வீட்டில் வேலை பார்த்த இளம்பெண் தற்கொலை: காரணம் என்ன? Empty அன்புமணி வீட்டில் வேலை பார்த்த இளம்பெண் தற்கொலை: காரணம் என்ன?

Post by oviya Tue Aug 11, 2015 3:24 pm

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வீட்டில் வேலை பார்த்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்டது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சென்னை தியாகராயநகர் திலக் தெருவில் உள்ள பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி வீட்டில், மாலினி (19) என்ற இளம்பெண் கடந்த ஓராண்டாக வேலை பார்த்து வந்தார்.

அவருக்கு வீட்டின் பின்புறம் தனி அறை ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று காலை 6.30 மணியாகியும் எழுந்திருக்கவில்லை.

உடன் பணிபுரிபவர்கள் கதவை தட்டியபோது மாலினியிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

இதையடுத்து சிலர் அந்த அறையின் ஜன்னல் கதவினை உடைத்து பார்த்த போது, மின்விசிறியில் துப்பட்டாவினால் மாலினி தூக்கில் தொங்கியது தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் உடலை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறையினர் கூறுகையில், தற்கொலை செய்து கொண்ட மாலினிக்கும், அவரது உறவினரான மேகநாதன் என்பவருக்கும் அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், திருமணத்தை சில மாதங்கள் கழித்து நடத்த மாலினியின் தாய் முடிவு செய்திருந்ததை கேள்விப்பட்ட மாலினிதனது வருங்கால கணவர் மேகநாதனிடம் போனில் கூறி வருத்தம் தெரிவித்துள்ளார்.

இரவு படுக்க செல்லும் முன்னரும் மேகநாதனிடம் போனில் அதிக நேரம் பேசிய பிறகே அவர் தற்கொலை முடிவை எடுத்திருக்கிறார்.

தற்கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum