Top posting users this month
No user |
போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதாவை நேரில் சந்தித்த பிரதமர் மோடி
Page 1 of 1
போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதாவை நேரில் சந்தித்த பிரதமர் மோடி
சென்னை வந்த பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்தார்.
மூன்றாம் இணைப்பு:
இன்று பிற்பகல் 1.35 மணி அளவில் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்த மோடியிடம் 21 பக்கங்கள் கொண்ட மனு ஒன்றை ஜெயலலிதா அளித்தார்.
அதில் காவிரி பிரச்னை, முல்லைப் பெரியாறு அணை பிரச்னை, மேகேதாட்டு அணை பிரச்னை உள்ளிட்ட தமிழகம் எதிர்கொள்ளும் பிரச்னைகளை தீர்க்கும் கோரிக்கைகள் அதில் இடம்பெற்றிருந்தன.
இரு தலைவர்களும் என்ன பேசிக்கொண்டார்கள் என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.
சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், மோடி ஜெயலலிதாவின் வீடு தேடி சென்று சந்தித்திருப்பது, அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், மாநில முதல்வரை விட அதிகாரம் மிக்க பதவியில் உள்ள பிரதமர், புரட்டோகால் படி அந்தஸ்தில் குறைந்த மாநில முதல்வரை வீடு தேடி சென்று சந்திப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கைத்தறி நெசவாளர் விழா:
சென்னை பல்கலைக்கழக மண்டபத்தில் கைத்தறி நெசவாளர் விழா இன்று தொடங்கியது.
அதில் பங்கேற்ற பிரதமர் மோடி, ஆளுநர் ரோசய்யா உள்ளிட்டோருக்கு கைத்தறி ஆடைகள் அன்பளிப்பாக அளிக்கப்பட்டது.
தரமான கைத்தறி என உத்தரவாதம் அளிக்கும் தேசிய கைத்தறி முத்திரையை பிரதமர் அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர், சிறந்த கைத்தறி நெசவாளர்களுக்கு விருதுகளை, பிரதமர் மோடி வழங்கினார்.
மேலும், ஆகஸ்ட் 7ம் திகதியை தேசிய கைத்தறி தினமாக இன்றைய விழாவில் மோடி அறிவித்துள்ளார்.
மூன்றாம் இணைப்பு:
இன்று பிற்பகல் 1.35 மணி அளவில் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்த மோடியிடம் 21 பக்கங்கள் கொண்ட மனு ஒன்றை ஜெயலலிதா அளித்தார்.
அதில் காவிரி பிரச்னை, முல்லைப் பெரியாறு அணை பிரச்னை, மேகேதாட்டு அணை பிரச்னை உள்ளிட்ட தமிழகம் எதிர்கொள்ளும் பிரச்னைகளை தீர்க்கும் கோரிக்கைகள் அதில் இடம்பெற்றிருந்தன.
இரு தலைவர்களும் என்ன பேசிக்கொண்டார்கள் என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.
சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், மோடி ஜெயலலிதாவின் வீடு தேடி சென்று சந்தித்திருப்பது, அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், மாநில முதல்வரை விட அதிகாரம் மிக்க பதவியில் உள்ள பிரதமர், புரட்டோகால் படி அந்தஸ்தில் குறைந்த மாநில முதல்வரை வீடு தேடி சென்று சந்திப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கைத்தறி நெசவாளர் விழா:
சென்னை பல்கலைக்கழக மண்டபத்தில் கைத்தறி நெசவாளர் விழா இன்று தொடங்கியது.
அதில் பங்கேற்ற பிரதமர் மோடி, ஆளுநர் ரோசய்யா உள்ளிட்டோருக்கு கைத்தறி ஆடைகள் அன்பளிப்பாக அளிக்கப்பட்டது.
தரமான கைத்தறி என உத்தரவாதம் அளிக்கும் தேசிய கைத்தறி முத்திரையை பிரதமர் அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர், சிறந்த கைத்தறி நெசவாளர்களுக்கு விருதுகளை, பிரதமர் மோடி வழங்கினார்.
மேலும், ஆகஸ்ட் 7ம் திகதியை தேசிய கைத்தறி தினமாக இன்றைய விழாவில் மோடி அறிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum