Top posting users this month
No user |
ஆறுமுகன் தொண்டமான் யாருடைய பக்கம்? ரணில் கேள்வி
Page 1 of 1
ஆறுமுகன் தொண்டமான் யாருடைய பக்கம்? ரணில் கேள்வி
ஆறுமுகன் தொண்டமான் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவுடனா அல்லது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடான இருக்கின்றார் என்பதினை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று தலவாக்கலையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேர்தலின் பின்பு பெருந்தோட்ட கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இவர்களுக்கான சாதாரண சம்பளம் ஒன்றை பெற்றுக்கொடுப்பதற்கு புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
இந்த பேச்சுவார்த்தையில் தோட்ட கம்பனிகளுடன், எம்முடன் இணைந்து இருக்கும் தொழிற்சங்கங்களையும் மலையகத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தொழிற்சங்கங்ளையும் ஒன்றிணைத்து இந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படும்.
மலையகத்தை பொறுத்த வரையில் நுவரெலியாவை ஒரு உல்லாச மையமாக மாற்றுவதற்கும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பு ஏற்படுத்துவதற்கும், பண்ணை தொழிலாளர்களுக்கு புதிய தொழில்வாய்ப்பை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் எந்தெந்த காலத்தில் எல்லாம் ஆட்சி செய்ததோ அந்த காலத்தில எல்லாம் பெருந்தோட்ட தொழிலாளர்களின் அவர்களுடைய நலன் சார்ந்த விடயங்ளையும் கருத்தில் கொண்டு செயல்பட்டுள்ளது.
எனவே இந்த தேர்தலில் மலையக மக்கள் ஜக்கிய தேசிய கட்சியையும் அதனுடைய வேட்பாளர்களையும் வெற்றியடைய செய்வதற்கு அனைத்து வழிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றார்
இன்று தலவாக்கலையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேர்தலின் பின்பு பெருந்தோட்ட கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இவர்களுக்கான சாதாரண சம்பளம் ஒன்றை பெற்றுக்கொடுப்பதற்கு புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
இந்த பேச்சுவார்த்தையில் தோட்ட கம்பனிகளுடன், எம்முடன் இணைந்து இருக்கும் தொழிற்சங்கங்களையும் மலையகத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தொழிற்சங்கங்ளையும் ஒன்றிணைத்து இந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படும்.
மலையகத்தை பொறுத்த வரையில் நுவரெலியாவை ஒரு உல்லாச மையமாக மாற்றுவதற்கும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பு ஏற்படுத்துவதற்கும், பண்ணை தொழிலாளர்களுக்கு புதிய தொழில்வாய்ப்பை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் எந்தெந்த காலத்தில் எல்லாம் ஆட்சி செய்ததோ அந்த காலத்தில எல்லாம் பெருந்தோட்ட தொழிலாளர்களின் அவர்களுடைய நலன் சார்ந்த விடயங்ளையும் கருத்தில் கொண்டு செயல்பட்டுள்ளது.
எனவே இந்த தேர்தலில் மலையக மக்கள் ஜக்கிய தேசிய கட்சியையும் அதனுடைய வேட்பாளர்களையும் வெற்றியடைய செய்வதற்கு அனைத்து வழிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றார்
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum