Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளம் பெற்றுக்கொடுப்பேன்: ஆறுமுகன் தொண்டமான்

Go down

தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளம் பெற்றுக்கொடுப்பேன்: ஆறுமுகன் தொண்டமான் Empty தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளம் பெற்றுக்கொடுப்பேன்: ஆறுமுகன் தொண்டமான்

Post by oviya Mon Jun 15, 2015 2:18 pm

கஸ்டப்பட்டு உழைக்கும் தோட்ட தொழிலாளர்களுக்கு ஒரு நாளுக்கான சம்பளத்தொகையாக 1000 ரூபாவினை கட்டாயம் பெற்று தருவேன் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் சம்பள பேச்சு வார்த்தைகளின் போது காலங்கள் கூடுதலாக எடுத்த போதும் அக்காலத்தின் நிலுவை சம்பளத்தொகையினை குறையின்றி சம்பள உயர்வு தொகையுடன் பெற்று கொடுத்தோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

டிக்கோயா, தலவாகலை, நுவரேலியா மற்றும் இராகலை ஆகிய இடங்களில் இடம்பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தோட்ட தலைவர் மற்றும் தலைவிகளுக்கான கூட்டத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அதேவேலை சம்பள உயர்வினை பெற்றுக்கொள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு பலவழிகள் இருக்கும் போது சில மலையகத்தின் அரசியல்வாதிகள் தமது அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்டிக்கொள்ள தொழிலாளர்களை பகடக்காய்களாக பயன்படுத்தி அவர்களின் அரசியல் சுயலாபத்தை தேடுகிறார்கள்.

இதற்கு தொழிலாளர்கள் பலிகடா ஆகாமல் எதிர் காலத்தில் சிந்தித்து செயற்படுமாறு தொழிலாளர்களை அவர் கேட்டுகொண்டார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவை அமைச்சர்கள் தற்போது நடைமுறை படுத்த இருக்கும் 20 வது சீர்த்திருத்தத்தின் ஊடாக சிறுப்பான்மையினருக்கு 16 பிரதிநிதித்துவத்தை பெற்று கொடுக்க வேண்டியதும் உறுதிபடுத்துவதும் அவர்களின் கடமை என்று கூறியதோடு 16 பிரதிநிதித்துவத்தை பெற்று கொடுக்க தவறுமிடத்து அவர்கள் அமைச்சரவை அமைச்சர்களாக இருப்பதற்கு அறுகதை அற்றவர்களாக கருதப்படுவர்.

16 பிரதிநிதித்துவத்தை பெற்று கொடுக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முழு ஆதரவையும் வழங்குவதாகவும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம், இ .தோ .கா வின் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான எ. பி . சக்திவேல் , எம்.ரமேஷ். கணபதி கனகராஜ். இ .தோ .கா வின் உப தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum