Top posting users this month
No user |
Similar topics
உச்சம் தொட்டாலும் ஹொட்டல் உரிமையாளரை மறக்காத கலாம்!
Page 1 of 1
உச்சம் தொட்டாலும் ஹொட்டல் உரிமையாளரை மறக்காத கலாம்!
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பற்றி திருவனந்தபுர ஹொட்டல் உரிமையாளர் ஒருவர் மனம் திறந்து பேசியுள்ளார்.
டாக்டர் கலாம் திருவனந்தபுரம் வி.எஸ்.எஸ்.சி.யில் பணியாற்றிக் கொண்டிருந்த போது தம்பானுார் காந்தாரியம்மன் கோயில் பக்கம் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்தார்.
அந்த லாட்ஜின் பக்கத்தில் குருவாயூரப்பன் என்ற பெயர் கொண்ட ஒரு சிறிய ஹொட்டல் உள்ளது.
இதில் தான் கலாம் உணவு உட்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அதை பரமேஸ்வரன் நாயர் என்பவர் இன்னும் நடத்திக்கொண்டிருக்கிறார்.
தன்னுடைய ஹொட்டலுக்கு கலாமின் வருகை தொடர்பாக அவர் கூறுகையில், கலாம் காலையில் எப்போதும் ஹொட்டலுக்கு வருவார். இரண்டு ஆப்பம், ஒரு கப் பால் சாப்பிடுவார்.
மதியம் சாதம், தயிர், கூட்டு எடுத்துக்கொள்வார். இரவு சில நாட்கள் தான் சாப்பிடுவார்.
அதே சமயம் சில நாட்களில் சாப்பிட்டு விட்டு சிந்தனையில் அப்படியே சென்று விடுவார். நாங்களும் எதுவும் கேட்க மாட்டோம்.
பிறகு அடுத்த நாள் வந்து மறக்காமல் அந்த பணத்தை தந்து விடுவார். அவர் அறை முழுவதும் புத்தகங்கள் நிறைந்திருக்கும். யாராவது சென்றால் இருக்க கூட இடம் இருக்காது.
அவர் ஜனாதிபதி ஆன பின்னர் ஒரு முறை திருவனந்தபுரம் வந்தார். அப்போது அவரை பார்க்கும் ஆர்வத்தில் ஒரு பூங்கொத்துடன் சென்றேன்.
ஆனால் பாதுகாப்பு அதிகாரிகள் என்னை அவர் அருகில் செல்லவிடவில்லை. என்னை பார்த்து விட்ட அவர் என்னை அருகில் அழைத்தார். நானும் கையில் வைத்திருந்த பூங்கொத்தை கொடுத்தேன்.
'என்ன குருவாயூரப்பா சவுக்கியமா, சுகமா' என்று அன்போடு கேட்டார்.
என்னை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்தார். நானும் அவரது அழைப்பை ஏற்று மனைவி லலிதாம்பிகையுடன் சென்றேன். எங்களுக்கு அவர் விருந்தளித்தார்.
தற்போது அவர் மறைந்து விட்டார் என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. அவர் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
டாக்டர் கலாம் திருவனந்தபுரம் வி.எஸ்.எஸ்.சி.யில் பணியாற்றிக் கொண்டிருந்த போது தம்பானுார் காந்தாரியம்மன் கோயில் பக்கம் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்தார்.
அந்த லாட்ஜின் பக்கத்தில் குருவாயூரப்பன் என்ற பெயர் கொண்ட ஒரு சிறிய ஹொட்டல் உள்ளது.
இதில் தான் கலாம் உணவு உட்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அதை பரமேஸ்வரன் நாயர் என்பவர் இன்னும் நடத்திக்கொண்டிருக்கிறார்.
தன்னுடைய ஹொட்டலுக்கு கலாமின் வருகை தொடர்பாக அவர் கூறுகையில், கலாம் காலையில் எப்போதும் ஹொட்டலுக்கு வருவார். இரண்டு ஆப்பம், ஒரு கப் பால் சாப்பிடுவார்.
மதியம் சாதம், தயிர், கூட்டு எடுத்துக்கொள்வார். இரவு சில நாட்கள் தான் சாப்பிடுவார்.
அதே சமயம் சில நாட்களில் சாப்பிட்டு விட்டு சிந்தனையில் அப்படியே சென்று விடுவார். நாங்களும் எதுவும் கேட்க மாட்டோம்.
பிறகு அடுத்த நாள் வந்து மறக்காமல் அந்த பணத்தை தந்து விடுவார். அவர் அறை முழுவதும் புத்தகங்கள் நிறைந்திருக்கும். யாராவது சென்றால் இருக்க கூட இடம் இருக்காது.
அவர் ஜனாதிபதி ஆன பின்னர் ஒரு முறை திருவனந்தபுரம் வந்தார். அப்போது அவரை பார்க்கும் ஆர்வத்தில் ஒரு பூங்கொத்துடன் சென்றேன்.
ஆனால் பாதுகாப்பு அதிகாரிகள் என்னை அவர் அருகில் செல்லவிடவில்லை. என்னை பார்த்து விட்ட அவர் என்னை அருகில் அழைத்தார். நானும் கையில் வைத்திருந்த பூங்கொத்தை கொடுத்தேன்.
'என்ன குருவாயூரப்பா சவுக்கியமா, சுகமா' என்று அன்போடு கேட்டார்.
என்னை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்தார். நானும் அவரது அழைப்பை ஏற்று மனைவி லலிதாம்பிகையுடன் சென்றேன். எங்களுக்கு அவர் விருந்தளித்தார்.
தற்போது அவர் மறைந்து விட்டார் என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. அவர் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அரசு மரியாதையுடன் அப்துல் கலாம் உடல் நல்லடக்கம்: கலாம் அண்ணன் காலில் விழுந்து வணங்கிய மோடி
» கிரகம் -நீசம் உச்சம் ஒரு அறிவியல் பார்வை
» ஹொட்டல் முன்னிலையில் திருநங்கைகள் நடனமாட..வசூலிக்கப்படுகிறது வரி: சூப்பர் ஐடியா
» கிரகம் -நீசம் உச்சம் ஒரு அறிவியல் பார்வை
» ஹொட்டல் முன்னிலையில் திருநங்கைகள் நடனமாட..வசூலிக்கப்படுகிறது வரி: சூப்பர் ஐடியா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum