Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மகனை பறிகொடுத்த இடத்தில் விபத்தை தடுக்க பூஜை நடத்திய தந்தை

Go down

மகனை பறிகொடுத்த இடத்தில் விபத்தை தடுக்க பூஜை நடத்திய தந்தை Empty மகனை பறிகொடுத்த இடத்தில் விபத்தை தடுக்க பூஜை நடத்திய தந்தை

Post by oviya Mon Jun 29, 2015 3:07 pm

மும்பையில் தந்தை ஒருவர் தனது மகனை பறிகொடுத்த இடத்தில் விபத்து நடைபெற கூடாது என பூஜை நடத்தியுள்ளார்.
மும்பையில் யோகேஷ் ஷா என்ற கணணி பொறியாளர் தனது மனைவி மற்றும் மகன் ஜீல் (20) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.

சிர்புரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த ஜீல் கடந்த மார்ச் மாதம் 21ம் திகதி விடுமுறைக்காக மும்பை சென்றுள்ளார்.

பின்னர் 22ம் திகதி தன் நண்பர்களுடன் காரில் பிரபாதேவியில் உள்ள சித்தி விநாயகர் கோவிலுக்கு சென்றுள்ளார்.

அப்போது கிழக்கு விரைவு நெடுஞ்சாலையில் கோதரேஜ் கேட் அருகே சென்ற போது நாய் ஒன்று குறுக்கே பாய்ந்ததால், நாயின் மீது மோதாமல் இருக்க ஜீல் காரை திருப்பியுள்ளார்.

இதில் நிலைதடுமாறிய கார் கவிழ்ந்ததில், ஜீல் படுகாயமடைந்துள்ளார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

கோமா நிலையில் இருந்த ஜீல் சிகிச்சை பலனின்றி கடந்த மே 1ம் திகதி தேதி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் ஜீலின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கிழக்கு விரைவு நெடுஞ்சாலையில் உள்ள கோதரேஜ் கேட் பகுதியில் திரண்டு பூஜை செய்தனர்.

இதுகுறித்து ஜீலின் தந்தை கூறுகையில், என் மகன் உயிரிழந்த பின் பலர் என்னிடம் வந்து பேசினர்.

அப்போது பெரும்பாலானவர்கள் ஜீல் விபத்தை சந்தித்த இடத்தில் பல விபத்துக்கள் நடைபெற்றதாக கூறினர்.

இதையடுத்து நான் போக்குவரத்து பொலிசாரிடம் விசாரித்ததில் இந்த ஆண்டு மட்டும் அதே இடத்தில் 53 விபத்துக்கள் நடந்தது தெரியவந்தது.

அந்த விபத்துகளில் 6 பேர் பலி ஆகி உள்ள நிலையில், 47 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த இடத்தில் வேறு விபத்து நடைபெற கூடாது என என் உறவினர்களுடன் இங்கு வந்து பூஜை நடத்தியுள்ளோம்.

மேலும், இந்த பூஜை நடத்துவதன் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு அவர்கள் இந்த பகுதியில் கவனமுடன் செல்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum