Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சிறைதண்டனை பெற்றதற்காக தமிழக மக்களை தண்டிக்கும் ஜெயலலிதா: விஜயகாந்த் குற்றச்சாட்டு

Go down

சிறைதண்டனை பெற்றதற்காக தமிழக மக்களை தண்டிக்கும் ஜெயலலிதா: விஜயகாந்த் குற்றச்சாட்டு Empty சிறைதண்டனை பெற்றதற்காக தமிழக மக்களை தண்டிக்கும் ஜெயலலிதா: விஜயகாந்த் குற்றச்சாட்டு

Post by oviya Fri Jun 26, 2015 3:19 pm

தமிழக முதலமைச்சராக இருக்கும் ஜெயலலிதா ஆட்சி நிர்வாகம் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டி உள்ளார்.
தமிழகத்தில் கோவை, வேலூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பால் முகவர்களுக்கு வினியோகம் செய்யப்படும் ஆவின் பால் கடந்த சில மாதங்களாக வினியோகம் செய்த ஒரு சில மணி நேரங்களிலேயே கெட்டுப்போய் விடுகிறது என்று தமிழ்நாடு பால் முகவர்கள் நலச்சங்க மாநில தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமி குற்றம் சாட்டியிருந்தார்.

இது குறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பல திட்டங்களும், திறப்பு விழாக்களும் நிறுத்திவைக்கப்பட்டு, மீண்டும் முதலமைச்சராக ஜெயலலிதா பதவிஏற்ற பின் செயல்படுத்தப்பட்டன.

இது குறித்து கேட்டால், அ.தி.மு.க.வில் பலரும் ஜெயலலிதா வந்த பிறகு செயல்படுத்துவதில் என்ன தவறு, அதற்காக மக்கள் காத்திருப்பதால் என்ன ஆகிவிடப்போகிறது? என, மக்களை துச்சமாக நினைத்து பேசுகின்றனர்.

அ.தி.மு.க. அரசு கடந்த 2011ல் ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்த உடனே பால் விலையை இரு மடங்காக உயர்த்தியது.

ஆனால் உயர்த்தப்பட்ட விலை கொடுத்து ஆவின் நிறுவனத்தில் வாங்கப்படும் பால், ஆவின் நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் கெட்டுப்போவதும், அதை வாங்கிய மக்கள் கீழே கொட்டுவதும் என்ற பரிதாபமான நிலை தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பால் பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பாரா? என பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் காத்திருக்கின்றனர். ஆனால் அவர் ஆட்சி நிர்வாகத்தை பற்றி சிறிதும் கவலைப்படவில்லை.

ஜெயலலிதா சிறை தண்டனை பெற்றதற்காக, அதற்கு சம்பந்தமே இல்லாத தமிழக மக்களை தண்டிப்பது நியாயமா? என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum