Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


குற்றம்சாட்டப்பட்டவர்களே ஒப்புக்கொண்டதை விட குறைவாக நீதிபதி கணக்கீடு செய்ய காரணம் என்ன?

Go down

குற்றம்சாட்டப்பட்டவர்களே ஒப்புக்கொண்டதை விட குறைவாக நீதிபதி கணக்கீடு செய்ய காரணம் என்ன? Empty குற்றம்சாட்டப்பட்டவர்களே ஒப்புக்கொண்டதை விட குறைவாக நீதிபதி கணக்கீடு செய்ய காரணம் என்ன?

Post by oviya Wed Jun 24, 2015 3:53 pm

ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமணச் செலவை எந்த அடிப்படையில் நீதிபதி குமாரசாமி குறைத்து மதிப்பு செய்தார் என்று மேல்முறையீட்டு மனுவில் கேட்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்ததை எதிர்த்து, கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.

அந்த மனுவில், ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்ட காலத்தில் அவரது வளர்ப்பு மகனுக்கு நடத்தப்பட்ட ஆடம்பர திருமணம்தான் பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால், அந்த திருமணத்திற்கான செலவை மிகவும் கர்நாடக உயர் நீதிமன்றம் இலகுவாக கையாண்டுள்ளது.

பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில், சுதாகரன் திருமணச் செலவாக ஜெயலலிதா வீட்டார் ரூ.6 கோடி செலவிட்டதாக அரசு தரப்பு வாதிட்டது.

ஆனால், சிறப்பு நீதிமன்றமோ, அரசு தரப்பு மிக அதிகமாக செலவு கணக்கு காண்பிக்கிறது என்றும், உண்மையில், ரூ.3 கோடி செலவிடப்பட்டுள்ளது எனவும் தீர்ப்பளித்தது.

சுதாகரன் திருமணச் செலவு குறித்த உயர் நீதிமன்ற மேல்முறையீட்டு, விசாரணையின்போது, ஜெயலலிதா தரப்பு, தாங்கள் ரூ.29 லட்சம் மட்டுமே செலவிட்டதாக கூறிய நிலையில், நீதிபதி குமாரசாமியோ, ரூ.28 லட்சம் தான் செலவிட்டுள்ளதாக கூறி தீர்ப்பு எழுதியுள்ளார்.

குற்றம்சாட்டப்பட்டவர்களே ஒப்புக்கொண்டதை விடவும் குறைவாக நீதிபதி கணக்கீடு செய்ய காரணம் என்ன?

இந்து பாரம்பரியத் திருமணங்களில், திருமணச் செலவுகளை பெண் வீட்டார் ஏற்பது மரபு என்றும், எனவே ஜெயலலிதா மாப்பிள்ளை வீட்டுக்காரர் என்பதால், செலவு செய்திருக்க மாட்டார் எனவும் நீதிபதி கூறியுள்ளார்.

அப்போது ஜெயலலிதா முதல்வர் என்பதாலேயே, திருமணச் செலவுகளை அவரே செய்திருப்பார் என்பதையும் ஏற்க முடியாது என நீதிபதி கூறியுள்ளார்.

அரசு தரப்பு ஆதாரங்களை புறக்கணித்துவிட்டு, நீதிபதியே இப்படி ஒரு முடிவை எடுக்க என்ன முகாந்திரம் உள்ளது?

சுதாகரன் திருமணச் செலவை கணக்கிடுவதில் உயர் நீதிமன்றம் மிகப்பெரிய தவறுகளை செய்துள்ளதோடு, கணக்கு கூட்டல்களிலும் தவறுகள் உள்ளன.

இதையெல்லாம் கணக்கில் கொண்டு கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum