Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


செம்மரம் வெட்டியதாக கைது செய்யப்பட்ட 5 தமிழர்கள்: துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு

Go down

செம்மரம் வெட்டியதாக கைது செய்யப்பட்ட 5 தமிழர்கள்: துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு Empty செம்மரம் வெட்டியதாக கைது செய்யப்பட்ட 5 தமிழர்கள்: துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு

Post by oviya Sun Jun 21, 2015 2:09 pm

செம்மரம் வெட்டியதாக சந்திரகிரி அருகே உள்ள வனப்பகுதியில் 5 தமிழர்களை ஆந்திர பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
மேலும் அந்த பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மூங்கில்பட்டு என்னும் இடத்தில் ஒரு கும்பல் செம்மரங்களை வெட்டியதாக சிறப்பு அதிரடிப்படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, டிஐஜி காந்தாராவ் தலைமையிலான சிறப்பு அதிரடிப்படை அங்கு ஆய்வு மேற்கொண்டது.

இதனையடுத்து அந்த பகுதியில் இருந்த 20 பேர் கொண்ட கும்பலில் 5 பேரை செம்மரம் வெட்டியதாக பொலிசார் கைது செய்தனர்.

இவர்களை கைது செய்ய சென்ற போது, இந்த கும்பல் காவலர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், இதில், 5 சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் காயமடைந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், வானத்தை நோக்கி அதிரடிப்படையினர் துப்பாக்கியால் சுட்டதாகவும், இதனையடுத்து சிலர் தப்பி ஓடி விட்டதாகவும் கூறியுள்ளனர்.

அவர்கள் அனைவரும் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என திருப்பதி வன அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே கடப்பாவில் செம்மரம் கடத்தியதாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 8 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரங்கள் மற்றும் 4 கார், ஒரு லாரியை பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum