Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


காளானால் காலனிடம் சென்று திரும்பிய பெண்: அவுஸ்திரேலியாவில் நடந்த சோகம்

Go down

காளானால் காலனிடம் சென்று திரும்பிய பெண்: அவுஸ்திரேலியாவில் நடந்த சோகம் Empty காளானால் காலனிடம் சென்று திரும்பிய பெண்: அவுஸ்திரேலியாவில் நடந்த சோகம்

Post by oviya Mon Jun 15, 2015 2:39 pm

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய பெண் ஒருவர் கெட்டுப்போன காளானை உட்கொண்டதால் உயிர் போகும் அபாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் வுல்வொர்த் சூப்பர் மார்க்கெட் நிறுவனத்தில் நியூகேசில் பகுதியில் வாழந்துவரும் ராஜ்வீர் கவுர் எனும் இந்திய பெண் சென்ற 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் காளான் வாங்கியுள்ளார்.

அந்த காளானை சமைத்து சாப்பிட்ட கவுர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கடுமையான உடல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஒரு வாரம் கோமா நிலையில் இருந்த கவுர் 4 மாதங்களுக்கு பிறகு வீடு திரும்பியுள்ளார்.

மருத்துவர்கள் அந்த கடுமையான பாதிப்புக்கு காரணம், காளான் உணவு விஷமாக மாறியது தான் என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து கவுர் கூறுகையில், நான் உயிரோடு இருப்பதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன்.

எனது கல்லீரலை எடுத்துவிட்டு வேறு ஒருவரது கல்லீரலை தானம் பெற்று எனக்கு பொருத்தியுள்ளனர்.

மாற்றுக் கல்லீரலை தாங்கிக்கொள்ளும் சக்தி எனக்கு இருந்ததை மருத்துவர்கள் பாராட்டியுள்ளனர்.

காளானை சாப்பிட்ட எனது அம்மா, வீட்டு வேலைக்காரி ஆகியோருக்கும் பாதிப்பு ஏற்பட்டது.

ஆகவே, கெட்டுப் போன உணவை பாக்கெட்டில் அடைத்து வைத்து விற்ற வுல்வொர்த் சூப்பர் மார்கெட் நிறுவனம் மீது வழக்கு தொடுக்கப் போகிறேன் என்று கூறியுள்ளார்.

ஆனால், அந்த பல்பொருள் அங்காடி தாங்கள் விற்பனை செய்த காளானில் விஷகாளான் கலக்கப்படவில்லை என்று கூறி உள்ளது.

அந்நாட்டு பொலிசாரும், சுகாதார துறையினரும் கடந்த ஆண்டில் இது குறித்து விசாரணை நடத்தியதில் அந்த பல்பொருள் அங்காடியில், கவுர் காளான் வாங்கியதற்கான ஆதராங்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கவுர் திருமண விசாவில் சென்றுள்ளதால், அந்த நாட்டில் தங்கி இருப்பதற்கான விசா காலம் முடிந்து விட்டதாகவும் அதனால் உடனே இந்தியாவுக்கு திரும்ப வேண்டும் எனவும் அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.

கவுர் இதுபற்றி கூறுகையில், என்னை கட்டாய மாக வெளியேற்றம் செய்தால் இறந்து விடுவேன்.

இங்குதான் என உணவு விஷமாகியது என்பதால் தீர்வு காணும் வரை நான் இந்தியா திரும்ப மாட்டேன்.

வுல்வொர்த் கடையில் காளான் வாங்கியதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், எனவே வழக்கு தொடர்வதில் உறுதியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum