Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இறந்து 3 மாதம் ஆன பெண் ஊழியருக்கு பதவி உயர்வு: அரசு அலுவலகத்தில் நடந்த அவலம்

Go down

இறந்து 3 மாதம் ஆன பெண் ஊழியருக்கு பதவி உயர்வு: அரசு அலுவலகத்தில் நடந்த அவலம் Empty இறந்து 3 மாதம் ஆன பெண் ஊழியருக்கு பதவி உயர்வு: அரசு அலுவலகத்தில் நடந்த அவலம்

Post by oviya Sat Mar 21, 2015 1:19 pm

திருநெல்வேலி மாவட்டத்தில் இறந்து 3 மாதம் ஆன போக்குவரத்து பெண் ஊழியருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்த கண்ணம்மாள் (45) நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், அவர் பல அண்டுகளுக்கு முன்பு, மற்ற அரசு ஊழியர்களை போல தனக்கும், உதவியாளராக பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்று துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பல ஆண்டுகளாக அவரது கோரிக்கை நிறைவேற்றப்படாமலேயே இருந்த நிலையில் உடல்நிலை கோளாறு காரணமாக கண்ணம்மாள் கடந்த ஆண்டு டிசம்பர் 17ம் திகதி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது கண்ணம்மாள் இறந்து 3 மாதம் ஆன பிறகு தமிழக அரசின் போக்குவரத்து துறை ஆணையர் சத்யபிரதாசாகு கடந்த 13ம் திகதி ஒரு அரசு உத்தரவு போட்டுள்ளார்.

அதில் நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் கண்ணம்மாளுக்கு 13–3–2015 முதல் தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உதவியாளராக பதவி உயர்வு அளிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அரசு உத்தரவை பார்த்த நெல்லை வட்டார போக்குவரத்து ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் இது குறித்து நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் கண்ணம்மாளையும் சேர்த்து 26 பேருக்கு கடந்த 18ம் திகதி பதவி உயர்வு அளித்ததற்கான அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பதவி உயர்வு பட்டியலில் கண்ணம்மாள் நீண்ட நாட்களாக இடம் பெற்றிருந்தாலும், அதிகாரிகள் காலம் தாழ்த்தி பதவி உயர்வு வழங்கியதால் அதன் பயனை கண்ணம்மாள் அடைய முடியவில்லை.

மேலும், கண்ணம்மாள் இறந்த பின்னர் சம்பந்தப்பட்ட அலுவலக அதிகாரிகள், அவருடைய பெயரை பட்டியலிலிருந்து நீக்கியிருந்தால் இது போன்ற அவலம் ஏற்பட்டிருக்காது என்று தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum