Top posting users this month
No user |
Similar topics
சரியான மரியாதை இல்லை: பா.ஜ., தலைவர்களிடம் புலம்பித் தீர்த்த விஜயகாந்த்
Page 1 of 1
சரியான மரியாதை இல்லை: பா.ஜ., தலைவர்களிடம் புலம்பித் தீர்த்த விஜயகாந்த்
கூட்டணியில் தொடர்வது குறித்து யோசிக்க வேண்டியுள்ளது என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தமிழக பா.ஜ., தலைவர்களிடம் கூறிய தகவல் வெளியாகியுள்ளது
இது தொடர்பாக வெளியான தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:-
லோக்சபா தேர்தலின் போது, பா.ஜ.,வுக்கு, தமிழகத்தில் சரியான கூட்டணி அமையவில்லை. அதே நேரம், தே.மு.தி.க.,வுடன், தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், கூட்டணி அமைக்க முயற்சித்தன.
ஆனால், 'ஊழல் இயக்கங்களுடன் கூட்டணி சேர மாட்டேன்' எனக் கூறி, பா.ஜ., கூட்டணியை தேர்வு செய்தார் விஜயகாந்த்.
கட்சியின் துரதிருஷ்டம், போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்து விட்டது. அதனால், தேர்தலுக்குப் பின் பா.ஜ., தலைமையிடத்தில், தே.மு.தி.க.,வை மட்டமாக நினைக்க தொடங்கினர்.
பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் உரிய முறையில் கவனிக்காமல் விட்டதால், பதவியேற்பு விழாவில் பங்கேற்காமல், தமிழகம் திரும்பினார் விஜயகாந்த். அன்று முதல், பா.ஜ., தலைமை மீது, அவர் அதிருப்தியாக உள்ளார்.
மேலும், பா.ஜ., தரப்பில், தொடர்ந்து விஜயகாந்தை எரிச்சலூட்டும் சம்பவங்களே, நடந்து கொண்டிருக்கின்றன. இதனால், பா.ஜ., தலைமை மீது, விஜயகாந்த் உள்ளிட்ட கட்சியினர் அவ்வளவு பேரும், எரிச்சலடைந்து உள்ளனர்.
இதையெல்லாம் வைத்து தான், 2016 சட்டசபைத் தேர்தலில், பா.ஜ., கூட்டணியை தவிர்ப்பது குறித்து, தே.மு.தி.க., தலைமை யோசித்து வருகிறது.
அதுமட்டுமல்லாது முதல்வர் ஜெயலலிதாவை, முழுவீச்சில் எதிர்க்கும் நோக்கில், அவர் தி.மு.க., நோக்கி நகர திட்டமிட்டுள்ளார்.
தன்னுடைய இந்த உள்ளக் குமுறல்கள் அனைத்தையும், சமீபத்தில் தன்னை சந்தித்த, பா.ஜ., தலைவர்களிடம், விஜயகாந்த் கொட்டி தீர்த்தார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக வெளியான தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:-
லோக்சபா தேர்தலின் போது, பா.ஜ.,வுக்கு, தமிழகத்தில் சரியான கூட்டணி அமையவில்லை. அதே நேரம், தே.மு.தி.க.,வுடன், தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், கூட்டணி அமைக்க முயற்சித்தன.
ஆனால், 'ஊழல் இயக்கங்களுடன் கூட்டணி சேர மாட்டேன்' எனக் கூறி, பா.ஜ., கூட்டணியை தேர்வு செய்தார் விஜயகாந்த்.
கட்சியின் துரதிருஷ்டம், போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்து விட்டது. அதனால், தேர்தலுக்குப் பின் பா.ஜ., தலைமையிடத்தில், தே.மு.தி.க.,வை மட்டமாக நினைக்க தொடங்கினர்.
பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் உரிய முறையில் கவனிக்காமல் விட்டதால், பதவியேற்பு விழாவில் பங்கேற்காமல், தமிழகம் திரும்பினார் விஜயகாந்த். அன்று முதல், பா.ஜ., தலைமை மீது, அவர் அதிருப்தியாக உள்ளார்.
மேலும், பா.ஜ., தரப்பில், தொடர்ந்து விஜயகாந்தை எரிச்சலூட்டும் சம்பவங்களே, நடந்து கொண்டிருக்கின்றன. இதனால், பா.ஜ., தலைமை மீது, விஜயகாந்த் உள்ளிட்ட கட்சியினர் அவ்வளவு பேரும், எரிச்சலடைந்து உள்ளனர்.
இதையெல்லாம் வைத்து தான், 2016 சட்டசபைத் தேர்தலில், பா.ஜ., கூட்டணியை தவிர்ப்பது குறித்து, தே.மு.தி.க., தலைமை யோசித்து வருகிறது.
அதுமட்டுமல்லாது முதல்வர் ஜெயலலிதாவை, முழுவீச்சில் எதிர்க்கும் நோக்கில், அவர் தி.மு.க., நோக்கி நகர திட்டமிட்டுள்ளார்.
தன்னுடைய இந்த உள்ளக் குமுறல்கள் அனைத்தையும், சமீபத்தில் தன்னை சந்தித்த, பா.ஜ., தலைவர்களிடம், விஜயகாந்த் கொட்டி தீர்த்தார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பத்திரிக்கை, வாட்ஸ் ஆப் எல்லாம் நான் பார்ப்பது இல்லை: விஜயகாந்த் அதிரடி
» சரியான ஆம்பளையாக இருந்தால் என்னை சுடு: வைகோ அதிரடி
» பேலூர் மடம் தீர்த்த யாத்திரை
» சரியான ஆம்பளையாக இருந்தால் என்னை சுடு: வைகோ அதிரடி
» பேலூர் மடம் தீர்த்த யாத்திரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum