Top posting users this month
No user |
மீராவோடை தமிழ் கிராம மக்கள் 3வது தடவையாக ஆர்ப்பாட்டம்: அரசாங்க அதிபரின் உறுதிமொழியை அடுத்து கலைந்து சென்றனர்
Page 1 of 1
மீராவோடை தமிழ் கிராம மக்கள் 3வது தடவையாக ஆர்ப்பாட்டம்: அரசாங்க அதிபரின் உறுதிமொழியை அடுத்து கலைந்து சென்றனர்
வாழைச்சேனை, மீராவோடை தமிழ் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இன்று காலை மட்டக்களப்பு அரசாங்க அதிபர் காரியாலயத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களது காணிகளை தொடர்ந்தும் முஸ்லிம்கள் அத்துமீறி பிடிப்பதாகவும் இதனை உடனடியாக தடுத்து நிறுத்தி தங்களது காணிகளை பெற்றுத்தருமாறு அரசாங்க அதிபரிடம் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்,
நாங்கள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். எங்களுக்கு எல்லா அதிகாரிகளும் வாக்குறுதிகளை வழங்குகின்றார்கள். ஆனால் எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை.
இதனால் நாங்கள் இன்று சுமார் 30 கிலோமீற்றர் தாண்டிவந்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்திற்கு முன்னால் மூன்றாவது தடவையாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். ஆனால் இதிலும் எங்களுக்கு நீதி கிடைப்பதாக தெரியவில்லை.
இங்குள்ள சகல அதிகாரிகளும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு பயந்து எமது காணிப் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வைப் பெற்றுக்கொடுக்க தயங்குகின்றனர்.
பொலிசார் உட்பட நீதிமன்றம் வரைக்கும் முஸ்லிம் அதிகாரிகளின் தலையீடு உள்ளதால் அவர்களை இடமாற்றம் செய்து எமது காணி பிரச்சினைகளுக்கு ஒரு நீதியான விசாரணையை மேற்கொள்ளவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
தங்களது காணிகளை தொடர்ந்தும் முஸ்லிம்கள் அத்துமீறி பிடிப்பதாகவும் இதனை உடனடியாக தடுத்து நிறுத்தி தங்களது காணிகளை பெற்றுத்தருமாறு அரசாங்க அதிபரிடம் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்,
நாங்கள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். எங்களுக்கு எல்லா அதிகாரிகளும் வாக்குறுதிகளை வழங்குகின்றார்கள். ஆனால் எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை.
இதனால் நாங்கள் இன்று சுமார் 30 கிலோமீற்றர் தாண்டிவந்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்திற்கு முன்னால் மூன்றாவது தடவையாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். ஆனால் இதிலும் எங்களுக்கு நீதி கிடைப்பதாக தெரியவில்லை.
இங்குள்ள சகல அதிகாரிகளும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு பயந்து எமது காணிப் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வைப் பெற்றுக்கொடுக்க தயங்குகின்றனர்.
பொலிசார் உட்பட நீதிமன்றம் வரைக்கும் முஸ்லிம் அதிகாரிகளின் தலையீடு உள்ளதால் அவர்களை இடமாற்றம் செய்து எமது காணி பிரச்சினைகளுக்கு ஒரு நீதியான விசாரணையை மேற்கொள்ளவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum