Top posting users this month
No user |
Similar topics
புத்திஜீவிகள் விமர்சனம் செய்யலாம்! சாதாரண மக்களே ஆட்சியைத் தீர்மானிக்கின்றனர்
Page 1 of 1
புத்திஜீவிகள் விமர்சனம் செய்யலாம்! சாதாரண மக்களே ஆட்சியைத் தீர்மானிக்கின்றனர்
இவ்வாறான நிலைமைக்கு பயம் ஒரு காரணம் என்றால், தேர்தல் ஒழுங்கான முறையில் நடக்குமோ என்ற சந்தேகம் மறுகாரணம் எனலாம்.
எதுவாயினும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் நின்றவர்கள் மைத்திரியின் பக்கம் தாவிச் செல்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தேர்தலுக்கு முதல்நாள் மிக நெருக்கமானவர்களும் போய் விடுவார்களோ என்று நினைக்கும் அளவில் நிலைமை மோசமாகி வருவதைக் காண முடிகிறது.
இத்தகைய மாற்றங்கள் தென்பகுதிப் புத்திஜீவிகளின் கடுமையான விமர்சனங்களால் ஏற்பட்டதாகும்.
ஆட்சி மாற்றம் தேவையெனத் தென்பகுதி புத்திஜீவிகள் கருதுகின்றனர். இனியும் சேர்ந்திருக்க முடியாதென்பது தாவிச் செல்லும் அரசியல்வாதிகளின் நிலைப்பாடு.
ஆக, தென்பகுதியைச் சேர்ந்த புத்திஜீவிகளும், அரசியல்வாதிகளும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என விரும்புகின்றனர் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
எனினும் இலங்கையில் புத்திஜீவிகள் விமர்சனம் செய்யக் கூடியவர்களாகவும் கருத்துரைக்கக் கூடியவர்களாகவும் இருக்கின்றனரே தவிர, ஆட்சியைத் தீர்மானிக்கும் பெரும்பலத்தை தென்பகுதியைச் சேர்ந்த சாதாரண மக்களே கொண்டுள்ளனர் என்ற உண்மை மறப்பதற்குரியதல்ல.
எனவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி யாருக்கு என்பதைத் தீர்மானிக்கப் போகின்றவர்கள் சாதாரண மக்கள் என்பதால், அவர்களின் எண்ணம் எப்படியாக உள்ளது என்று ஆராய்வது அவசியம்.
பொதுவாக புத்திஜீவிகளின் கருத்துக்களையும், விமர்சனங்களையும் கொண்டு ஒரு முடிவுக்கு வருவது தவறு என்பது நம் தாழ்மையான கருத்து.
ஆக, தென்பகுதியில் ஆட்சியை, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய சாதாரண மக்கள் இன்னமும் விடுதலைப் புலிகளை வென்ற மகிழ்வில் இருக்கிறார்களா? அல்லது சாதாரண வாழ்வு நாளுக்கு நாள் கடினமாகி வருகிறது என்று உணர்கிறார்களா? என்பதை அறிவது அவசியம்.
இவை ஒருபுறம் இருக்க, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் நாளுக்கு நாள் மைத்திரியின் பக்கம் நகர்ந்து செல்வதைப் பார்க்கும் போது மகிந்த ராஜபக்வின் ஆட்சியில் இவர்கள் கடுமையான பாதிப்புக்கு அல்லது வெறுப்புக்கு ஆளாகி உள்ளனர் என்பதை உணர முடியும்.
அதேநேரம் மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் தமக்கு என்ன நடக்கும்? என்பது கட்சி மாறும் அரசியல்வாதிகளுக்குத் தெரியாததல்ல.
நிலைமையைத் தெரிந்திருந்தும் மைத்திரியின் பக்கம் ஓடுகின்ற அரசியல் வாதிகளின் ஓட்ட வேகத்தைப் பார்க்கும் போது கயிறு இழுத்தல் போட்டியில், மைத்திரியே வெல்ல வேண்டும் என்பதில் தென்பகுதி அரசியல்வாதிகள் அதிதீவிரமாக உள்ளனர் என்பது புரிகிறது.
இவை எல்லாம் நடந்து கொண்டிருக்கும் போது, வடக்கு கிழக்கு தமிழர்கள் அமைதியாகத் தேர்தல் நாளைப் பார்த்துக் காத்திருக்கின்றனர்.
யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவில் மிகத் தெளிவாக இருக்கும் தமிழ் மக்கள் தங்களின் தீர்மானத்தை மிகச் சிறப்பாகச் செய்வார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
எதுவாயினும் சாதாரண மக்களின் வாக்குகள் குறித்து மகிந்த கொண்டுள்ள கரிசனை மைத்திரியிடம் இருந்தால் போட்டி கடுமையாக இருக்கும் என்று கூறலாம்.
எதுவாயினும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் நின்றவர்கள் மைத்திரியின் பக்கம் தாவிச் செல்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தேர்தலுக்கு முதல்நாள் மிக நெருக்கமானவர்களும் போய் விடுவார்களோ என்று நினைக்கும் அளவில் நிலைமை மோசமாகி வருவதைக் காண முடிகிறது.
இத்தகைய மாற்றங்கள் தென்பகுதிப் புத்திஜீவிகளின் கடுமையான விமர்சனங்களால் ஏற்பட்டதாகும்.
ஆட்சி மாற்றம் தேவையெனத் தென்பகுதி புத்திஜீவிகள் கருதுகின்றனர். இனியும் சேர்ந்திருக்க முடியாதென்பது தாவிச் செல்லும் அரசியல்வாதிகளின் நிலைப்பாடு.
ஆக, தென்பகுதியைச் சேர்ந்த புத்திஜீவிகளும், அரசியல்வாதிகளும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என விரும்புகின்றனர் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
எனினும் இலங்கையில் புத்திஜீவிகள் விமர்சனம் செய்யக் கூடியவர்களாகவும் கருத்துரைக்கக் கூடியவர்களாகவும் இருக்கின்றனரே தவிர, ஆட்சியைத் தீர்மானிக்கும் பெரும்பலத்தை தென்பகுதியைச் சேர்ந்த சாதாரண மக்களே கொண்டுள்ளனர் என்ற உண்மை மறப்பதற்குரியதல்ல.
எனவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி யாருக்கு என்பதைத் தீர்மானிக்கப் போகின்றவர்கள் சாதாரண மக்கள் என்பதால், அவர்களின் எண்ணம் எப்படியாக உள்ளது என்று ஆராய்வது அவசியம்.
பொதுவாக புத்திஜீவிகளின் கருத்துக்களையும், விமர்சனங்களையும் கொண்டு ஒரு முடிவுக்கு வருவது தவறு என்பது நம் தாழ்மையான கருத்து.
ஆக, தென்பகுதியில் ஆட்சியை, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய சாதாரண மக்கள் இன்னமும் விடுதலைப் புலிகளை வென்ற மகிழ்வில் இருக்கிறார்களா? அல்லது சாதாரண வாழ்வு நாளுக்கு நாள் கடினமாகி வருகிறது என்று உணர்கிறார்களா? என்பதை அறிவது அவசியம்.
இவை ஒருபுறம் இருக்க, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் நாளுக்கு நாள் மைத்திரியின் பக்கம் நகர்ந்து செல்வதைப் பார்க்கும் போது மகிந்த ராஜபக்வின் ஆட்சியில் இவர்கள் கடுமையான பாதிப்புக்கு அல்லது வெறுப்புக்கு ஆளாகி உள்ளனர் என்பதை உணர முடியும்.
அதேநேரம் மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் தமக்கு என்ன நடக்கும்? என்பது கட்சி மாறும் அரசியல்வாதிகளுக்குத் தெரியாததல்ல.
நிலைமையைத் தெரிந்திருந்தும் மைத்திரியின் பக்கம் ஓடுகின்ற அரசியல் வாதிகளின் ஓட்ட வேகத்தைப் பார்க்கும் போது கயிறு இழுத்தல் போட்டியில், மைத்திரியே வெல்ல வேண்டும் என்பதில் தென்பகுதி அரசியல்வாதிகள் அதிதீவிரமாக உள்ளனர் என்பது புரிகிறது.
இவை எல்லாம் நடந்து கொண்டிருக்கும் போது, வடக்கு கிழக்கு தமிழர்கள் அமைதியாகத் தேர்தல் நாளைப் பார்த்துக் காத்திருக்கின்றனர்.
யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவில் மிகத் தெளிவாக இருக்கும் தமிழ் மக்கள் தங்களின் தீர்மானத்தை மிகச் சிறப்பாகச் செய்வார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
எதுவாயினும் சாதாரண மக்களின் வாக்குகள் குறித்து மகிந்த கொண்டுள்ள கரிசனை மைத்திரியிடம் இருந்தால் போட்டி கடுமையாக இருக்கும் என்று கூறலாம்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» அரசாங்கம் குறித்து அரசாங்கத்திற்கே நம்பிக்கை இல்லை: புத்திஜீவிகள் சங்கம்
» மக்களே முன்வந்து தேசியக் கொடியினை ஏற்றும் காலம் வந்துள்ளது!- சி.புண்ணியமூர்த்தி
» இந்த நாட்டில் ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தி தமிழ் மக்களே: த.கலையரசன்
» மக்களே முன்வந்து தேசியக் கொடியினை ஏற்றும் காலம் வந்துள்ளது!- சி.புண்ணியமூர்த்தி
» இந்த நாட்டில் ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தி தமிழ் மக்களே: த.கலையரசன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum