Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பதுளை மண் சரிவு! உயிரிழப்பு 10ஆக அதிகரிப்பு: பலரைக் காணவில்லை- அம்பேவெல ரயில் பாதை சேதம்

Go down

பதுளை மண் சரிவு! உயிரிழப்பு 10ஆக அதிகரிப்பு: பலரைக் காணவில்லை- அம்பேவெல ரயில் பாதை சேதம்  Empty பதுளை மண் சரிவு! உயிரிழப்பு 10ஆக அதிகரிப்பு: பலரைக் காணவில்லை- அம்பேவெல ரயில் பாதை சேதம்

Post by oviya Fri Dec 26, 2014 2:15 pm

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பதுளை மக்கள் மீண்டுமொரு மண்சரிவு அனர்த்தத்தில் தங்களது உறவுகளை இழந்துள்ளனர்.

இன்று பதுளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

கல்கந்த பகுதியில் வீடொன்றின் மீது, மற்றுமொரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



ஹெகொட பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில், இருவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், பஹலகம பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் மற்றுமொரு பெண் உயிரிழந்துள்ளார்.

பதுளை – மகியங்கனை வீதியின், சிறிகெத்த பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் மற்றுமொரு பெண் உயிரிழந்துள்ளதாக அப்பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, வேவல்ஹிண்ண ரில்பொல – மெதகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் வீடுகள் சிலவற்றுக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த அனர்த்தத்தில் சிலர் காணாமற் போயுள்ளதாகவும் பதுளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், மண்சரிவில் சிக்கி காணாமற்போனவர்களை மீட்கும் நடவடிக்கைகள் ஈடுபட்டிருக்கின்றனர்.

























மண்சரிவினால் அம்பேவெல ரயில் பாதை சேதம்

மலையக ரயில் பாதையுடான அனைத்து ரயில் சேவைகளும் சீரற்ற காலநிலை காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிடுகின்றது.

மண்சரிவு மற்றும் வௌ்ளநிலை காரணமாக மலையக ரயில் பாதைகள் சில பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




அந்தவகையில் அம்பேவெல புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் பாதை மண்சரிவினால் முற்றாக சேதமடைந்துள்ளது.

இதனால் இன்று காலை கொழும்பு கோட்டையில் இருந்து பயணத்தை மேற்கொள்ளத் தயாராக இருந்த பொடிமெனிக்கே மற்றும் கடுகதி ரயில்களும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

மேலும் கண்டியிலிருந்து கொழும்பு பயணத்தை மேற்கொள்ள தயாராக இருந்த ரயிலும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிடுகின்றது.

இதன் காரணமாக கொழும்பிலிருந்து பதுளை, கண்டி மற்றும் மாத்தளை ஊடாக பயணிக்கும் அனைத்து ரயில் சேவையும் இரத்து செய்யப்பட்டுள்ளன.


oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum