Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க இடமில்லை: கரு ஜயசூரிய

Go down

நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க இடமில்லை: கரு ஜயசூரிய Empty நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க இடமில்லை: கரு ஜயசூரிய

Post by oviya Thu May 14, 2015 1:51 pm

தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவு கூர்ந்து நிகழ்வுகளை நடத்துவதற்கு ஒருபோதும் அனுமதியளிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது புத்தசாசன மற்றும் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் கரு ஜயசூரிய இவ்வாறு தெரிவித்தார்.

யுத்தத்தில் உயிர் நீத்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலான நிகழ்வுகளுக்கு இடமளிக்கமுடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத அமைப்பு ஒன்றிற்காக அஞ்சலி நிகழ்வுகளை நடத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளதுடன்,

சில தரப்பினர் நாட்டில் நிலவும் ஜனநாயக சுதந்திர சூழ்நிலைகளை துஸ்பிரயோகம் செய்வதுடன், மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது என்பதனை வெளிக்காட்ட முனைவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவதை அரசாங்கம் எதிர்க்கவில்லை எனவும், வட மாகாண மக்களுக்கு அதற்கான உரிமையுண்டு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உரிமை வழங்கப்பட்ட போதிலும் மீண்டும் நாட்டில் பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது என்பதை வெளிக்காட்டும் முயற்சிகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்காது என அவர் தெரிவித்துள்ளார்.

இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவது ஒரு நல்ல சமூகத்தின் கடப்பாடு, அதனை நாம் அனுதிக்கிறோம்.

யுத்தமானது தமிழ் சிங்கள மக்களுக்கு பாரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வடுக்களிலிருந்து மீண்டு இரு இனத்திற்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என தெரிவித்த அமைச்சர்,

தீவிரவாதிகளாக கொண்டு நினைவுகூறல்களை நடத்துவது தேவையில்லாத பிரச்சினைகளையும் இன முரண்பாடுகளையும் தோற்றுவிக்கும் என்பதாலேயே அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என தெளிவுபடுத்தியுள்ளார்
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum