Top posting users this month
No user |
Similar topics
சல்மானுடன் காரில் பாதுகாப்புக்குச் சென்ற கான்ஸ்டபிள்: புகார் அளித்ததால் உயிரை இழந்த கொடூரம்
Page 1 of 1
சல்மானுடன் காரில் பாதுகாப்புக்குச் சென்ற கான்ஸ்டபிள்: புகார் அளித்ததால் உயிரை இழந்த கொடூரம்
சல்மான் கான் குடிபோதையில் கார் ஓட்டி விபத்துக்குள்ளாக்கிய போதுகாரில் பாதுகாப்புக்குச் சென்ற பொலிசார் ஒருவர் சாகும் வரை பல கொடூரங்களை சந்தித்ததாக அவரது நண்பர் தெரிவித்துள்ளார்.
சல்மான் கான் உயிருக்கு, மும்பை நிழல் உலக தாதாக்களால் ஆபத்து இருப்பதாக கூறப்பட்டதால், அவருக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இதையடுத்து சல்மானுக்கு கடந்த 1998-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ரவீந்திர பாட்டீலை, பாதுகாப்புப் பணிக்கு அனுப்பியுள்ளனர்.
சல்மான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் பாட்டீல் அவருடன் காரில் சென்றுவந்துள்ளார்.
இந்நிலையில் தான் கடந்த 2002-ம் ஆண்டு ஒரு நாள் இரவு, சல்மான் அதிகமாக மது குடித்துவிட்டு காரை தானே ஓட்டியுள்ளார்.
அப்போது அவருக்குப் அருகில் அமர்ந்து வந்த பாட்டீல், சல்மானை எச்சரித்த போதும், அதை அலட்சியப்படுத்திய சல்மான், காரை தாறுமாறாக ஓட்டி நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏற்றியுள்ளார்.
அதன்பிறகு, சல்மான் கானுக்கு எதிராக கான்ஸ்டபிள் பாட்டீல்தான் புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து தான் அவர் பல பிரச்சினைகளையும், மிரட்டல்களையும், நெருக்கடிகளையும் சந்திக்க தொடங்கியுள்ளார்.
முதலில் கார் விபத்து குறித்த வழக்கை, மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விசாரித்தபோது, பாட்டீல், குடி மயக்கத்தில் இருந்ததால், காரை மெதுவாக ஓட்டும்படி சல்மானை எச்சரித்தேன். அதை அவர் கேட்கவில்லை என்று துணிச்சலாக சாட்சியம் அளித்துள்ளார்.
இந்த வாக்குமூலத்தை மாற்றி சொல்லும்படி, பாட்டீலுக்கு பல தரப்பில் இருந்து நெருக்கடிகள் வந்துள்ளன. நெருக்கடி முற்றியதால், பாட்டீல் திடீரென காணாமல் போனார்.
சல்மான் கானின் வழக்கறிஞர்களின் நெருக்கடியைத் தாங்க முடியாமல் அவர் தலைமறைவானதாக அப்போது கூறப்பட்டுள்ளது.
பின்னர், நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்று கூறி கடந்த 2006-ம் ஆண்டு பொலிஸார் பாட்டீலை கைது செய்ததோடு, கான்ஸ்டபிள் பணியில் இருந்தும் அவரை நீக்கியுள்ளனர்.
அதன்பிறகு கடந்த 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீவ்ரி பகுதியில் உள்ள ஒரு தெருவில் அநாதையாக கிடந்த பாட்டீலை, அவரது நண்பர் சுஷாந்த் சாவந்த் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
அப்போது தான் அவர் காசநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததும், அதனால், அவரது குடும்பத்தினரும் அவரை அநாதையாக விரட்டியதும் தெரியவந்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 2007 அக்டோபர் மாதம் பரிதாபமாக பாட்டீல் இறந்துள்ளார்.
சுஷாந்த் சாவந்த் இதுபற்றி கூறுகையில், பாட்டீல் இறப்பதற்கு 2 நாட்களுக்கு முன்னர், என்னிடம் மனம் திறந்து பேசினார். அப்போது, சல்மான் கான் மீது தான் கூறிய புகாரில் கடைசி வரை உறுதியாக இருந்தேன். ஆனால், என்னுடைய காவல் துறையினரே எனக்கு ஆதரவாக இல்லை.
எனக்கு மீண்டும் கான்ஸ்டபிள் வேலை வேண்டும். நான் வாழ வேண்டும்.
மேலும், ஒரு முறை காவல் துறை ஆணையரை சந்தித்துவிட வேண்டும் என்று கூறினார், ஆனால், பரிதாபமாக உயிரிழந்து விட்டார் என்று தெரிவித்துள்ளார்.
சல்மான் கான் உயிருக்கு, மும்பை நிழல் உலக தாதாக்களால் ஆபத்து இருப்பதாக கூறப்பட்டதால், அவருக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இதையடுத்து சல்மானுக்கு கடந்த 1998-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ரவீந்திர பாட்டீலை, பாதுகாப்புப் பணிக்கு அனுப்பியுள்ளனர்.
சல்மான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் பாட்டீல் அவருடன் காரில் சென்றுவந்துள்ளார்.
இந்நிலையில் தான் கடந்த 2002-ம் ஆண்டு ஒரு நாள் இரவு, சல்மான் அதிகமாக மது குடித்துவிட்டு காரை தானே ஓட்டியுள்ளார்.
அப்போது அவருக்குப் அருகில் அமர்ந்து வந்த பாட்டீல், சல்மானை எச்சரித்த போதும், அதை அலட்சியப்படுத்திய சல்மான், காரை தாறுமாறாக ஓட்டி நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏற்றியுள்ளார்.
அதன்பிறகு, சல்மான் கானுக்கு எதிராக கான்ஸ்டபிள் பாட்டீல்தான் புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து தான் அவர் பல பிரச்சினைகளையும், மிரட்டல்களையும், நெருக்கடிகளையும் சந்திக்க தொடங்கியுள்ளார்.
முதலில் கார் விபத்து குறித்த வழக்கை, மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விசாரித்தபோது, பாட்டீல், குடி மயக்கத்தில் இருந்ததால், காரை மெதுவாக ஓட்டும்படி சல்மானை எச்சரித்தேன். அதை அவர் கேட்கவில்லை என்று துணிச்சலாக சாட்சியம் அளித்துள்ளார்.
இந்த வாக்குமூலத்தை மாற்றி சொல்லும்படி, பாட்டீலுக்கு பல தரப்பில் இருந்து நெருக்கடிகள் வந்துள்ளன. நெருக்கடி முற்றியதால், பாட்டீல் திடீரென காணாமல் போனார்.
சல்மான் கானின் வழக்கறிஞர்களின் நெருக்கடியைத் தாங்க முடியாமல் அவர் தலைமறைவானதாக அப்போது கூறப்பட்டுள்ளது.
பின்னர், நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்று கூறி கடந்த 2006-ம் ஆண்டு பொலிஸார் பாட்டீலை கைது செய்ததோடு, கான்ஸ்டபிள் பணியில் இருந்தும் அவரை நீக்கியுள்ளனர்.
அதன்பிறகு கடந்த 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீவ்ரி பகுதியில் உள்ள ஒரு தெருவில் அநாதையாக கிடந்த பாட்டீலை, அவரது நண்பர் சுஷாந்த் சாவந்த் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
அப்போது தான் அவர் காசநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததும், அதனால், அவரது குடும்பத்தினரும் அவரை அநாதையாக விரட்டியதும் தெரியவந்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 2007 அக்டோபர் மாதம் பரிதாபமாக பாட்டீல் இறந்துள்ளார்.
சுஷாந்த் சாவந்த் இதுபற்றி கூறுகையில், பாட்டீல் இறப்பதற்கு 2 நாட்களுக்கு முன்னர், என்னிடம் மனம் திறந்து பேசினார். அப்போது, சல்மான் கான் மீது தான் கூறிய புகாரில் கடைசி வரை உறுதியாக இருந்தேன். ஆனால், என்னுடைய காவல் துறையினரே எனக்கு ஆதரவாக இல்லை.
எனக்கு மீண்டும் கான்ஸ்டபிள் வேலை வேண்டும். நான் வாழ வேண்டும்.
மேலும், ஒரு முறை காவல் துறை ஆணையரை சந்தித்துவிட வேண்டும் என்று கூறினார், ஆனால், பரிதாபமாக உயிரிழந்து விட்டார் என்று தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» எம்.எல்.ஏ-வை தோளில் சுமந்து சென்ற கான்ஸ்டபிள்: வைரலாக பரவும் புகைப்படம்
» தேர்வு எழுத சென்ற மாணவிக்கு நேர்ந்த கொடூரம்
» கஞ்சாவுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
» தேர்வு எழுத சென்ற மாணவிக்கு நேர்ந்த கொடூரம்
» கஞ்சாவுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum