Top posting users this month
No user |
கதறி அழுத சல்மான் கான்: ஆதரவு தெரிவித்த நடிகைகள்!
Page 1 of 1
கதறி அழுத சல்மான் கான்: ஆதரவு தெரிவித்த நடிகைகள்!
கார் விபத்து வழக்கி்ல் நடிகர் சல்மான் கான் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கார் விபத்து வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வெளியானவுடன், நடிகர் சல்மான் கான் கதறி அழுததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் 5 வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பால் அவரது ரசிகர்கள் உட்பட பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிரபல நடிகை சோனாக்ஷி, மிகவும் அதிர்ச்சிகரமான செய்தி. சல்மான் கானுக்கு ஆதரவாக இருப்போம் என்று சொல்வதைத் தவிர வேறு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை.
சல்மான் கான் நல்ல மனிதர், அந்த குணத்தை அவரிடமிருந்து யாரும் எடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
கடவுளை வேண்டிக் கொள்கிறேன்: ஹேமமாலினி
இதுகுறித்து கருத்து தெரிவித்த ஹேமமாலினி, நடிகர் சல்மான் கானுக்காக நான் அனுதாபப்படுகிறேன். அவரது குடும்பத்தினருக்கு நான் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்களுக்கு ஆதரவாக எனது மனம் இருக்கிறது. சல்மான் கானுக்குப் பெரிய தண்டனை கிடைக்கக் கூடாது என்று கடவுளை நான் வேண்டிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதயமே நொறுங்கியது: ஹன்சிகா
நடிகை ஹன்சிகா தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இதயமே நொறுங்கியது போல உள்ளது. பேச வார்த்தை இல்லை. சல்மான் கான் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
கடவுள் ஆசிர்வதிக்கட்டும்: ரிஷி கபூர்
நடிகர் ரிஷி கபூர் வெளியிட்டுள்ள டிவிட்டில், இந்த கடினமான நேரத்தில் கான்களுடன் கபூர் குடும்பம் இருக்கிறது. காலம்தான் மிகச் சிறந்த நிவாரணி. கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்று கூறியுள்ளார்.
கார் விபத்து வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வெளியானவுடன், நடிகர் சல்மான் கான் கதறி அழுததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் 5 வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பால் அவரது ரசிகர்கள் உட்பட பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிரபல நடிகை சோனாக்ஷி, மிகவும் அதிர்ச்சிகரமான செய்தி. சல்மான் கானுக்கு ஆதரவாக இருப்போம் என்று சொல்வதைத் தவிர வேறு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை.
சல்மான் கான் நல்ல மனிதர், அந்த குணத்தை அவரிடமிருந்து யாரும் எடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
கடவுளை வேண்டிக் கொள்கிறேன்: ஹேமமாலினி
இதுகுறித்து கருத்து தெரிவித்த ஹேமமாலினி, நடிகர் சல்மான் கானுக்காக நான் அனுதாபப்படுகிறேன். அவரது குடும்பத்தினருக்கு நான் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்களுக்கு ஆதரவாக எனது மனம் இருக்கிறது. சல்மான் கானுக்குப் பெரிய தண்டனை கிடைக்கக் கூடாது என்று கடவுளை நான் வேண்டிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதயமே நொறுங்கியது: ஹன்சிகா
நடிகை ஹன்சிகா தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இதயமே நொறுங்கியது போல உள்ளது. பேச வார்த்தை இல்லை. சல்மான் கான் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
கடவுள் ஆசிர்வதிக்கட்டும்: ரிஷி கபூர்
நடிகர் ரிஷி கபூர் வெளியிட்டுள்ள டிவிட்டில், இந்த கடினமான நேரத்தில் கான்களுடன் கபூர் குடும்பம் இருக்கிறது. காலம்தான் மிகச் சிறந்த நிவாரணி. கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்று கூறியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum