Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


20 நிறைவேறிய கணப்பொழுதில் பாராளுமன்ற கலைப்பு: மனோ கணேசன்

Go down

20 நிறைவேறிய கணப்பொழுதில் பாராளுமன்ற கலைப்பு: மனோ கணேசன் Empty 20 நிறைவேறிய கணப்பொழுதில் பாராளுமன்ற கலைப்பு: மனோ கணேசன்

Post by oviya Wed May 06, 2015 2:33 pm

20வது அரசியலமைப்பு திருத்த சட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் பாராளுமன்றம் கலைக்கப்படும் என மேல்மாகாண சபை உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எமது நாட்டில் வாழும் தமிழ்,முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடத்த கூடிய பாரிய அட்டூழியங்கள், அடக்குமுறைகள் கொடுமைகள் எல்லாம் ஒழிய வேண்டும் என தெரிவித்தே நாங்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலை நடத்தி வெற்றியடைந்தோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது மைத்திரியா, மகிந்தவா, ரணிலா என தனிப்பட்ட ஒருவர் சார்பில் பேசப்படவில்லை, நாங்கள் இதனை கொள்கை அடிப்படையிலேயே கண்ணோக்கினோம் எனவும், அதே அடிப்படையிலேயே எப்பொழுதும் பார்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

எனவே மைத்திரியும், மகிந்தவும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் என்றால், அதன் பின்னணியில் மீண்டும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமேயானால், அதனை ஒருவரும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என இறுதியும், அறுதியுமாக தெரிவிப்பதாக மனே கணேசன் குறிப்பிட்டார்.

20வது அரசியலமைப்பின் ஊடாக தேர்தல் முறைமை மாற்றம் கொண்டு வரப்பட்டு சிறுபான்மை மக்களுக்கு தீங்கு விளைவிக்கலாம் என நாடு முழுவதிலுமுள்ள தமிழ், முஸ்லிம் மத்தியில் சந்தேகங்கள் எழுந்துள்ளன.

சிறுபான்மை மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் 20வது அரசியலமைப்பு காணப்பட்டால் அதற்கு நாங்கள் ஆதரவு வழங்க மாட்டோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் சிறுபான்மை கட்சிகள் 20வது அரசியலமைப்பு திருத்தத்தை ஏற்று கொண்டு அது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் அன்றைய இரவே பாராளுமன்றம் கலைக்கப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

உடனடியாக நடைபெறவுள்ள தேர்தல் தற்போது அமுலிலுள்ள விகிதாசார முறைமை தேர்தலின் அடிப்படையிலேயே நடக்கும் என்பதுவே இதற்கான காரணமாகும்.

புதிதாக கொண்டு வரப்படவுள்ள தேர்தல் முறைமை நாடு முழுவதிலுமுள்ள தமிழ், முஸ்லிம் மக்களுக்கு நியாயத்தை ஏற்படுத்த கூடியதாக இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.


oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum