Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்: மனோ கணேசன்

Go down

தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்: மனோ கணேசன் Empty தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்: மனோ கணேசன்

Post by oviya Tue Mar 31, 2015 1:39 pm

பெரும்பான்மை இன மக்கள் மத்தியில் கலந்து வாழும் தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தேசிய நிறைவேற்று சபை உறுப்பினரும், முன்னணி தலைவருமான மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று தேர்தல் ஆணையாளரை நேரில் சந்தித்து தனது ஆவணத்தினை கையளித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தவை,

புதிய தேர்தல் முறையில் பாராளுமன்ற உறுப்பினர் தொகை 250 ஆக உயர்த்தப்படுமானால், மத்திய, மேல், ஊவா மாகாணங்களில் பெரும்பான்மை இனத்து மக்கள் மத்தியில் கலந்து வாழும் தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

இந்த அடிப்படையில் நுவரேலிய மாவட்டத்தில் ஐந்து, கொழும்பில் மூன்று, பதுளையிலும், கண்டியிலும் தலா இரண்டு என்ற குறைந்தபட்ச எண்ணிக்கையில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட இடமிருக்க வேண்டும்.

தமிழ் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை முழுமையாக பயன்படுத்தி தங்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யாவிட்டால் நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், நுவரெலியா, கொழும்பு, கண்டி, பதுளை மாவட்டங்களில் தமது ஜனத்தொகைக்கு ஏற்ப தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்துக்கொள்ள புதிய தேர்தல் முறைமையில் இடமிருக்க வேண்டும்.

இன்றைய தேர்தல் முறைமை மாற்றப்பட்டு, விருப்பு வாக்கு முறைமை ஒழிக்கப்பட வேண்டும், தொகுதிக்கு என்று ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற யோசனைகளை நாம் ஏற்றுக்கொள்கிறோம்.

ஆனால், அந்த மாற்றங்கள் ஒருபோதும் இன்று சிறுபான்மை இனம் அனுபவிக்கும் பிரதிநிதித்துவங்களை குறைத்து கூடாது. விருப்பு வாக்கு முறைமை ஒழிக்கப்பட வேண்டும்.

தொகுதிக்கு என்று ஒரு பிரதிநிதி தெரிவு செய்யப்பட வேண்டும் என்று இன்று குரல் எழுப்பும் பெரும்பான்மை கட்சிகளுக்கு சிறுபான்மை இனம் இன்று அனுபவிக்கும் பிரதிநிதித்துவங்கள் தொடர்பில் அக்கறை இருப்பதாக தெரியவில்லை.

புதிய தேர்தல் முறை மாற்றத்தின் போது, இந்நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் நடைபெற்றுள்ள ஜனத்தொகை வளர்ச்சி, இடம்பெயர்வு, குடியேற்றம் ஆகியவை கணக்கில் எடுக்கப்பட வேண்டும்.

மத்திய, மேல், ஊவா மாகாணங்களில் பெரும்பான்மை இனத்து மக்கள் மத்தியில் கலந்து வாழும் தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்களே உத்தேச தேர்தல் முறை மாற்றங்கள் காரணமாக அதிகம் பாதிப்பு அடையும் அபாயத்தை எதிர்நோக்குகின்றார்கள்.

எனவே தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் நாம் அதிக அச்சம் கொண்டுள்ளோம்.இந்த அச்சம் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இந்நாட்டின் சமீப கால வரலாற்றில் தற்போதைய நடப்பு தேர்தல் முறையே தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்களுக்கு அதிகபட்ச பிரதிநிதித்துவங்களை வழங்கியுள்ளது.

எனவே இந்த தேர்தல் முறையை மாற்றுவதானால் எங்களது குறைந்தபட்ச உரிமை உறுதி செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் புதிய தேர்தல் முறை மாற்றத்துக்கு நாம் உடன்பட முடியாது.

இந்த அடிப்படையில் நுவரேலிய மாவட்டத்தில் ஐந்து, கொழும்பில் மூன்று, பதுளையிலும், கண்டியிலும் தலா இரண்டு என்ற குறைந்தபட்ச எண்ணிக்கையில் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படக்கூடிய ஜனநாயக சூழல் ஏற்பட வேண்டும்.

தமிழ் வாக்காளர்களுக்கு தமது சனத்தொகைக்கு ஏற்ப தமிழ் பிரதிநிதிகளை தெரிவு செய்துக்கொள்ள புதிய தேர்தல் முறைமையில் இடமிருக்க வேண்டும். தமிழ் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை முழுமையாக பயன்படுத்தி தங்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யாவிட்டால் நாம் ஒன்றும் செய்ய முடியாது. அது நமது இனத்தின் தலையெழுத்து. ஆனால், சட்டத்தில் இடமிருக்க வேண்டும்.

என தாம் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவை நேரில் சந்தித்து கையளித்த ஆவணத்தில் கோரியுள்ளதகவும் அவர் தெரிவித்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum