Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பீர், சிகரெட் கொடுத்தால் அதிசயம் நிகழ்த்தும் கல்லறை!

Go down

பீர், சிகரெட் கொடுத்தால் அதிசயம் நிகழ்த்தும் கல்லறை!  Empty பீர், சிகரெட் கொடுத்தால் அதிசயம் நிகழ்த்தும் கல்லறை!

Post by oviya Tue May 05, 2015 2:57 pm

உலகிலிருந்து பிரிந்தவர்களில் பலர் இன்னும் உயிருடன் வாழ்ந்து கொண்டிருப்பதாக ஒரு சிலரால் மட்டுமே நம்பப்படுகிறது.
அந்த வகையில், 1857ம் ஆண்டு இறந்து போன பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி ஒருவரை ஒரு கிராமமே கடவுளாக வழிபட்டு வருகிறது. இவர் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து வைப்பதாக அவர்கள் ஆணித்தரமாக நம்புகின்றனர்.

மேலும், அவருக்கு சிகரெட், பீடி மற்றும் பீர் பாட்டில்களை வைத்து வினோத வழிபாடுகளையும் நடத்துகின்றனர்.

பிரிட்டன் ராணுவ வீரரான Frederick Wale, or Kaptan Shah Baba, 1857ம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஒரு போரின்போது கொல்லப்பட்டார். அதன் பிறகு, லக்னோவில் அவருக்கு சிமெண்டில் ஒரு கல்லறை எழுப்பப்பட்டது.

இதை அவரது நண்பரும், சிப்பாயுமான Captain LB Jones என்பவர் தனது நண்பனுக்காக எழுப்பினார். இதைத் தான் அந்த ஊரில் உள்ள மக்களும், வெளியூரில் இருந்து வரும் மக்களும் கடவுளாக வழிபடுகின்றனர்.

Captain Frederick Wale, சார்லஸ் வாலுடைய 8வது மகன் ஆவார். இவருடைய குடும்பம் Little Shelford என்ற பகுதியிலிருந்து வந்தது. இவருடையை நினைவு கல் அனைத்து புனித சர்ச்சிலும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இவருடைய குடும்பத்தினர் உடல்கள் முக்கிய புனித சர்ச்சில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இவருக்கு சிகரெட், மதுபானங்கள் என்றால் கொள்ளை பிரியம். அதனாலே இந்த பொருட்களை வைத்து அவருக்கு வழிபாடு செய்யப்படுகிறது.

அதுமட்டுமல்லாது அந்த சிகரெட், மதுவையும் அவர் குடிப்பதாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவு உண்மை என்பது பற்றி தெரியவில்லை.

இவரை இடைவிடாமல் வணங்கும் பக்தர் ஒருவர் கூறுகையில், நாங்கள் அவருக்கு உணவையும், சிகரெட்டையும் படைத்து விட்டுச் செல்வோம். ஆனால் அவற்றில் சில பயன்படுத்தப்பட்டிருக்கும்.

யாரும் இங்கு வந்து சிகரெட்டை பயன்படுத்த முடியாது. இந்த கேள்விக்கு ஒரே பதில் Captain Frederick Wale தான் அதை பயன்படுத்தியுள்ளார் என்றார்.

இவருக்கு கீழே இருந்த படைப்பகுதித் தலைவர் ஒருவர் தனது குறிப்பில், Captain Frederick Wale சிறந்த வழிநடத்தலால், எதிரிகளுக்கு அச்சத்தை உண்டாக்குவார் என்றும், அவர் கொல்லப்படும் வரை சிறந்த வீரராக இருந்தார் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த கல்லறையை பராமரிக்கும் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்திய மக்கள் ஒரு வெளிநாட்டவரை வணங்குவது ஆச்சரியமாக இருக்கிறது.

பிரிட்டிஷ் காலத்திய, அதுவும் வரலாற்றில் இடம்பெற்ற ஒரு மனிதரை வணங்குகின்றனர். அவரை வணங்கும் மக்களுக்கு தான் அவர் என்ன அதிசயம் நிகழ்த்துகிறார் என்பது தெரியும். இதில் ஒரு தவறும் இல்லை என்றார்.

மேலும், Captain Frederick Wale காதலர்களையும் அதிகம் சேர்த்து வைப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இவரது சமாதியில் சிகரெட்டுகளும், மதுபானங்களும் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

Captain Frederick Wale, ஒரு கிறிஸ்டியனாகவே வாழ்ந்து கிறிஸ்டியனாகவே இறந்து போனது குறிப்பிடத்தக்கது.

எண்ணற்ற கடவுள்கள் வாழும் இந்தியாவில் மக்களின் நம்பிக்கை தெய்வமாக இந்த Captain Frederick Wale இன்னும் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum