Top posting users this month
No user |
திண்மக் கழிவுகள் மூலம் மின்சார தயாரிப்பு: கல்முனை முதல்வருடன் ரஷ்யா முதலீட்டாளர்கள் கலந்துரையாடல்
Page 1 of 1
திண்மக் கழிவுகள் மூலம் மின்சார தயாரிப்பு: கல்முனை முதல்வருடன் ரஷ்யா முதலீட்டாளர்கள் கலந்துரையாடல்
அம்பாறை மாவட்டத்தில் திண்மக் கழிவுகளைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் நவீன திட்டம் தொடர்பில் ரஷ்யா நாட்டை சேர்ந்த முதலீட்டாளர்கள், கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
கல்முனை மாநகர முதல்வர் செயலகத்தில் இன்று இடம்பெற்ற இச்சந்திப்பில் ரஷ்யாவை சேர்ந்த முன்னணி முதலீட்டாளர்களான டெபியா ஒலாசன், பேராசிரியர் பெல் ஆகியோருடன் தென்கிழக்குப் பல்கலைக்கழக் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எம்.ரஷ்மி, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர், கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது அம்பாறை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களினால் அன்றாடம் சேகரிக்கப்படும் திண்மக் கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதற்கான உத்தேசம் திட்டம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இத்திட்டம் நடைமுறைக்கு வருமாயின் கல்முனை மாநகர சபை பிரதேசங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பெரும் பிரச்சினையாக இருந்து வருகின்ற திண்மக் கழிவகற்றல் நெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்பதுடன் மக்களுக்கு மிகக் குறைந்த செலவில் மின்சாரத்தை பயன்படுத்துவதற்கான வாய்ப்பும் கிடைக்கும் என முதல்வர் நிஸாம் காரியப்பர் சுட்டிக்காட்டினார்.
ஆகையினால் ரஷ்யா முதலீட்டாளர்களின் உத்தேச திட்டத்திற்கு கல்முனை மாநகர சபை முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என அவர்களிடம் முதல்வர் உறுதியளித்தார்.
கல்முனை மாநகர முதல்வர் செயலகத்தில் இன்று இடம்பெற்ற இச்சந்திப்பில் ரஷ்யாவை சேர்ந்த முன்னணி முதலீட்டாளர்களான டெபியா ஒலாசன், பேராசிரியர் பெல் ஆகியோருடன் தென்கிழக்குப் பல்கலைக்கழக் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எம்.ரஷ்மி, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர், கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது அம்பாறை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களினால் அன்றாடம் சேகரிக்கப்படும் திண்மக் கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதற்கான உத்தேசம் திட்டம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இத்திட்டம் நடைமுறைக்கு வருமாயின் கல்முனை மாநகர சபை பிரதேசங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பெரும் பிரச்சினையாக இருந்து வருகின்ற திண்மக் கழிவகற்றல் நெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்பதுடன் மக்களுக்கு மிகக் குறைந்த செலவில் மின்சாரத்தை பயன்படுத்துவதற்கான வாய்ப்பும் கிடைக்கும் என முதல்வர் நிஸாம் காரியப்பர் சுட்டிக்காட்டினார்.
ஆகையினால் ரஷ்யா முதலீட்டாளர்களின் உத்தேச திட்டத்திற்கு கல்முனை மாநகர சபை முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என அவர்களிடம் முதல்வர் உறுதியளித்தார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum