Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறு: பொலிஸ் அதிகாரியின் மகனை சுட்டு கொன்ற 7 வாலிபர்கள்

Go down

திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறு: பொலிஸ் அதிகாரியின் மகனை சுட்டு கொன்ற 7 வாலிபர்கள் Empty திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறு: பொலிஸ் அதிகாரியின் மகனை சுட்டு கொன்ற 7 வாலிபர்கள்

Post by oviya Sat Apr 25, 2015 3:12 pm

திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறில், மத்திய ரிசர்வ் பொலிஸ் படை அதிகாரியின் மகனை 7 வாலிபர்கள் சுட்டு கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் விஜய் நகர் மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் பொலிஸ் அதிகாரியாக உள்ள திலீப் சிங், தனது மகன் மகன் விக்ரம் மற்றும் குடும்பத்தினருடன் சி.ஆர்.பி.எப். காலனியில் உள்ள திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுள்ளார்.

அங்கு சில வாலிபர்கள் அங்கு வந்து நடனமாடியதால் ஏற்பட்ட தகராறை அடுத்து, தகராறு பேசி தீர்க்கப்பட்டுள்ளது.

விக்ரம் மற்றும் அவரது பிற நண்பர்கள் கடந்த வியாழ கிழமை இரவு நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு திரும்புகையில், அந்த வாலிபர்கள் பின் தொடர்ந்து வந்துள்ளனர்.

பின்னர் அவர்கள் விக்ரமை துப்பாக்கியால் சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

இதையடுத்து அந்த வாலிபர்களில் அனில், விஜய், கிருஷ்ண சிங் மற்றும் யோகேஷ் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

ராகுல், அனில் மற்றும் அப்துல் மாலிக் ஆகிய 3 குற்றவாளிகளும் தப்பியுள்ளனர்.

விக்ரமை சுடுவதற்கு பயன்படுத்திய கை துப்பாக்கி குற்றவாளி ராகுலின் தந்தையும், ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதி சி.ஆர்.பி.எப். அதிகாரியுமான ராஜீவ் குமாருக்கு சொந்தமானது என பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும், பிடிபட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து, அவர்களை சிறையில் தள்ள தலைமை நீதிமன்ற நீதிபதி ராம் பிரகாஷ் பாண்டே உத்தரவிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum