Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


புதுவைக்கு பெருமை சேர்க்கும் மணக்குள விநாயகர் கோவில்

Go down

புதுவைக்கு பெருமை சேர்க்கும் மணக்குள விநாயகர் கோவில் Empty புதுவைக்கு பெருமை சேர்க்கும் மணக்குள விநாயகர் கோவில்

Post by oviya Sat Apr 18, 2015 3:39 pm

முக்கிய ஊர்களுக்கு அந்த ஊரில் உள்ள கோவில்தான் அடையாளம் காட்டும். அதேபோல் புதுவையை அடையாளம் காட்டுவது மணக்குள விநாயகர் கோவில்தான். இந்த ஊர் பிரபலம் ஆகும் முன்னரே இந்த விநாயகர் இங்கு குடியேறிவிட்டார். அந்த விநாயகர் எப்போது இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டார் என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை.

ஆனால் கடந்த 600-ஆண்டுகளில் மணக்குள விநாயகர் எப்படி இருந்தார் என்பதற்கு ஆதாரமான குறிப்புகள் அதிகம் உள்ளன. இந்த மணக்குள விநாயகர் கோவில் பற்றி வரலாறு பலராலும் எழுதப்பட்டுள்ளது. அந்த வரலாறு சற்று ஆய்வு செய்தால் நம்மை சிலிர்க்க வைக்கிறது. புதுச்சேரியில் கி.பி. 1666-ம் ஆண்டுக்கு பின்னர் பிரெஞ்சு ஆதிக்கம் ஏற்பட்டது.

அதற்கு 250 ஆண்டுகளுக்கு முன்பே இந்த விநாயகரை மக்கள் வழிபட்டுள்ளனர். அந்த காலத்தில் தற்போது மணக்குள விநாயகர் கோவில் உள்ள இடத்தில் பெரியகுளம் ஒன்று இருந்தது. அந்த குளத்தில் நல்ல மணல் இருந்தது. இதனால் மணல்குளம் என்று புதுச்சேரி மக்கள் அழைத்தனர். அப்போது புதுச்சேரி பணக்காரர்கள் அதிகம் வாழ்ந்து வந்த ஊராக இருந்தது.

மணல் குளம் பகுதியில் செங்குந்த முதலியார்கள், சேட செட்டியார் என்ற தேவாங்கச் செட்டியார்கள் அதிக அளவில் வசித்து வந்தனர். அவர் களின் முக்கிய தொழில் நெசவு தொழிலாக இருந்தது. அவர்கள் இந்த விநாயகரை வணங்கி விட்டு, தொழிலை தொடங்குவதை வழக்கமாக வைத்திருந்தனர். விநாயகர் சிலை இருந்த இடத்தில் ஒரு நாகச்சிலையும் இருந்தது.

அதையும் மக்கள் வழிபட்டனர். மணல்குளத்தில் இருந்து தண்ணீரை எடுத்து வந்துதான் அபிஷேகம் செய்தனர். இதனால் அந்த விநாயகருக்கு, மணல் குளத்து விநாயகர் என்று பெயர் ஏற்பட்டது. பிறகு அந்த பெயர் மணற்குளத்து விநாயகர் என்று மாறியது. கால ஓட்டத்தில் அந்த பெயர் மருவி மணக்குள விநாயகர் என்ற உருவெடுத்து அதுவே நிலைத்து விட்டது.

நாளடைவில் மணல் குளம் தூர்ந்து போனது. மெல்ல, மெல்ல குளம் மறைந்து நந்தவனமாக மாறியது. நெசவாளர்கள் மணக்குள விநாயகருக்கு கருவறை, அர்த்த மண்டபம் கட்டி சிறிய கோவிலாக மாற்றி வழிபட்டு வந்தனர். பிரெஞ்சுக்காரர்கள் வருகைக்குப்பிறகு அந்த நந்தவனம் பகுதி கட்டிடங்களாக மாறியது.

அறிவியல் மாற்றங்களுக்கு ஏற்ப புதுச்சேரி மாறினாலும் மணக்குள விநாயகர் மட்டும் மாறவே இல்லை. இன்று உலக அளவில் பெயர் பெற்று விளங்கும் இந்த கோவில் பல்வேறு சோதனை கடந்துதான் வந்துள்ளது. புதுச்சேரியில் பிரெஞ்சுக்காரர்கள் காலூன்றிய பின்னர் புதுச்சேரி நடுவே ஓடிய உப்பனாறு கால்வாய்க்கு கிழக்கே உள்ள பகுதியை வெள்ளை நகரம் என்றும், உப்பனாறுக்கு மேற்கே இருந்த பகுதியை கருப்பர் நகரம் என்றும் பிரித்து இருந்தனர்.

அவர்கள் கடற்கரையோரம் வசித்து வந்த தமிழர்கள், தெலுங்கர்கள், இஸ்லாமியர்களை அடித்து விரட்டினர். பின்னர் கடற்கரையோரம் பெரிய, பெரிய பங்களாக்களை கட்டிக் கொண்டனர். அதன்பின்னர் 1988-ம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்கள் கடற்கரையோரம் பெரிய கோட்டை ஒன்றை உருவாக்கினார்கள். அந்த கோட்டைக்குட்பட்ட ஒரு பகுதியாக மணக்குள விநாயகர் கோவில் இருந்தது.

இந்த கோவிலுக்கு தினமும் கூட்டம், கூட்டமாக பக்தர்கள் வந்து விநாயகரை வழிபட்டு சென்றனர். மேலும் விழாக்காலங்களில் மேள, தாளங்கள் முழங்க விசேஷ பூஜைகள் செய்து விநாயகரை வழிபட்டு சென்றனர். இது பிரெஞ்சுக்காரர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. எனவே அவர்களால் பக்தர்களின் கொண்டாட்டங்களை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. மேலும் தங்களிடம் அடிமையாக இருப்பவர்கள் தங்கள் பகுதிக்குள் வந்து விநாயகரை வழிபடுவதை கண்டு ஆவேசம் அடைந்தனர்.

கடலில் வீசினர் :

அப்போது கவர்னரின் உதவியாளராக ஓர்லையான் என்பவர் இருந்தார். அவர் விநாயகர் கோவில் இருந்த நெசவாளர் தெரு பெயரை மாற்றி ஓர்லையான் தெரு என்று தனது பெயரை வைத்தார். அவர் தனது அடியாட்கள் உதவியுடன் விநாயகர் சிலையை பெயர்த்து கடலில் தூக்கி வீசினார். மறுநாள் காலை ஓர்லையானுக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

கடலில் வீசப்பட்ட மணக்குள விநாயகர் மீண்டும் கரை திரும்பி, மீண்டும் அதே இடத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருந்தார். ஆனால் பிரெஞ்சுக்காரர்கள் மறுபடியும் விடவில்லை. மீண்டும் ஒருதடவை மணக்குள விநாயகரை பெயர்த்து எடுத்துச்சென்று கடலில் வீசி எறிந்தனர். இந்த முறையும் நம்ம விநாயகர் கரை திரும்பி விட்டார்.

உடனே பிரெஞ்சுக்காரர்கள் இதில் ஏதே சதி நடப்பதாக நினைத்தனர். 3-வது தடவை பிரெஞ்சு உயர் அதிகாரி ஒருவர் முன்னிலையில் விநாயகர் சிலை பெயர்த்து எடுக்கப்பட்டு யாருக்கும் தெரியாமல் மிக, மிக ரகசியமாக சிலையை நடுக்கடலுக்கு கொண்டு சென்று போட்டனர். ஆனால் வழக்கம்போல் மணக்குள விநாயகர் கரைக்கு திரும்பி தன் இடத்தில் கம்பீரமாக வீற்றிருந்தார்.

அவருக்கு பூஜைகள் வழக்கம் போல் நடைபெற்றது. வழக்கத்திற்கு மாறாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பிரெஞ்சுக்காரர்களுக்கு தாங்க முடியாத ஆவேசம் ஏற்பட்டது. எப்படி விநாயகர் கரை திரும்பினார், எவ்வாறு இந்த அதிசயம் நிகழ்ந்தது என்று யோசித்து, யோசித்து தவித்து போனார்கள்.

தொந்தரவு செய்யவில்லை :
பின்னர் மணக்குள விநாயகர் ஒரு சக்தி வாய்ந்த கடவுள் என்பதை பிரெஞ்சுக்காரர்கள் உணர்ந்து கொண்டார்கள். அதன்பிறகு மணக்குளவிநாயகர் மீது பிரெஞ்சுக்காரர்களுக்கு பயம் வந்து விட்டது. எனவே மணக்குள விநாயகரை தொந்தரவு எதுவும் செய்யவில்லை.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum