Top posting users this month
No user |
Similar topics
ராமேஸ்வரத்தில் பள்ளி கொண்ட பெருமாள்!
Page 1 of 1
ராமேஸ்வரத்தில் பள்ளி கொண்ட பெருமாள்!
ராமேஸ்வரம் கோயிலில், நீங்கள் ராமநாத சுவாமியையும், பர்வதவர்த்தினி அம்பாளையும் தரிசனம் செய்திருப்பீர்கள். தீர்த்தங்களில் நீராடியிருப்பீர்கள். ஆனால், யோக சயனத்தில் பள்ளி கொண்ட பெருமாளை தரிசித்திருக்கிறீர்களா! இதோ! அவரைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
பர்வதவர்த்தினி அம்மன் சந்நிதியின் வலது பின்புறம் <உள்ள சந்நிதியில், எட்டு அடி நீளத்தில், யோக சயனத்தில்(வானத்தை பார்த்து படுத்திருக்கும் நிலை) பள்ளி கொண்ட பெருமாள் அருள்பாலிக்கிறார். மற்ற தலங்களில் அனந்த சயனத்தில் (ஒரு பக்கம் சாய்ந்து படுத்தல்) பெருமாள் காட்சி அளிப்பார். இங்கு யோக சயனத்தில் நேராகப் படுத்த நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்க அம்சம். மேலும், மற்ற தலங்களில் பெருமாளின் நாபி கமலத்தின் (தொப்புள்) மேல் பிரம்மா இருப்பார். ஆனால், இங்கு அந்த நிலை இல்லை. நேபாளம் பசுபதிநாத் கோயிலில் இருந்து 6 கி.மீ. தூரத்தில் உள்ள, புத்தாநீல்கண்ட் எனுமிடத்தில் குளத்தின்
நடுவில், 18 அடி நீள யோகா சயன பெருமாள் காட்சியளிப்பார்.
இலங்கை மன்னன் ராவணன் சீதையைக் கடத்திச் சென்றான். இதை அவனது தம்பி விபீஷணர் கண்டித்தார். தன்னைக் கண்டித்த தம்பியை வெளியே அனுப்பி விட்டான் ராவணன். அவர், ராமரிடம் அடைக்கலம் தேடி தனுஷ்கோடி வந்தார். ராமருக்கு <உதவி செய்தார். சீதாவை மீட்ட பிறகு, ராமருக்கு பட்டாபிஷேகம் நடந்தது. அப்போது , ராமபிரானை பெருமாள் வடிவமாகவே பார்த்தார் விபீஷணர். இதை நிரூபிக்கும் வகையில், இந்த
சந்நிதிக்குள் வணங்கிய நிலையில் நிற்கிறார்.
இந்த பெருமாள் குறித்து கோயில் முன்னாள் தலைமை குருக்கள் வி.விட்டல் பர்வே கூறியதாவது:
இந்தியாவில் வேறு எங்கும் காண முடியாத வகையில், இந்த சிவ தலத்தில் பெருமாள் யோகா சயனத்தில் காட்சியளிப்பார். இந்த பெருமாளை ஒவ்வொரு ஞாயிறும் தரிசித்தால், வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்கள் விலகி, மன அமைதி, மனவலிமை கிடைக்கும். ராமேஸ்வரத்தில் ராமநாதர், பர்வதவர்த்தினி, மூன்றாம் பிரகாரம், பாம்பன் பாலம் படங்கள் கிடைக்கின்றன. இந்தப் பெருமாளும் விசேஷமானவர் என்பதால், இவரது படத்தையும் ஓவியமாக்கி விற்பனை செய்ய அரசும், கோயில் நிர்வாகமும் முன்வர வேண்டும் என்றார்.
இந்த பெருமாளைப் பற்றிய புராணத்தகவல் ஒன்றும் உண்டு.
இவரை பள்ளி கொண்ட ரங்கநாதர் என்பர். ராமர் பூஜித்த ரங்கநாதரை பெற்ற விபீஷணன், சந்தர்ப்பவசத்தால் அந்தச் சிலையை காவிரிக்கரையில் வைத்துவிட்டு, இலங்கை திரும்பினான். அதுவே ஸ்ரீரங்கம் ஆயிற்று. பின், ராமேஸ்வரம் வந்த அவன், தன் திருப்திக்காக, இங்கு வேறொரு ரங்கநாதரை பிரதிஷ்டை செய்தான். ஏழு தலையுடைய ஆதிசேஷன் மீது சயனம் கொண்டுள்ள இந்த ரங்கநாதர், கையில் தண்டத்துடன் (கதாயுதம் போன்ற கருவி) காட்சியளிப்பது சிறப்பான அமைப்பு.
பர்வதவர்த்தினி அம்மன் சந்நிதியின் வலது பின்புறம் <உள்ள சந்நிதியில், எட்டு அடி நீளத்தில், யோக சயனத்தில்(வானத்தை பார்த்து படுத்திருக்கும் நிலை) பள்ளி கொண்ட பெருமாள் அருள்பாலிக்கிறார். மற்ற தலங்களில் அனந்த சயனத்தில் (ஒரு பக்கம் சாய்ந்து படுத்தல்) பெருமாள் காட்சி அளிப்பார். இங்கு யோக சயனத்தில் நேராகப் படுத்த நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்க அம்சம். மேலும், மற்ற தலங்களில் பெருமாளின் நாபி கமலத்தின் (தொப்புள்) மேல் பிரம்மா இருப்பார். ஆனால், இங்கு அந்த நிலை இல்லை. நேபாளம் பசுபதிநாத் கோயிலில் இருந்து 6 கி.மீ. தூரத்தில் உள்ள, புத்தாநீல்கண்ட் எனுமிடத்தில் குளத்தின்
நடுவில், 18 அடி நீள யோகா சயன பெருமாள் காட்சியளிப்பார்.
இலங்கை மன்னன் ராவணன் சீதையைக் கடத்திச் சென்றான். இதை அவனது தம்பி விபீஷணர் கண்டித்தார். தன்னைக் கண்டித்த தம்பியை வெளியே அனுப்பி விட்டான் ராவணன். அவர், ராமரிடம் அடைக்கலம் தேடி தனுஷ்கோடி வந்தார். ராமருக்கு <உதவி செய்தார். சீதாவை மீட்ட பிறகு, ராமருக்கு பட்டாபிஷேகம் நடந்தது. அப்போது , ராமபிரானை பெருமாள் வடிவமாகவே பார்த்தார் விபீஷணர். இதை நிரூபிக்கும் வகையில், இந்த
சந்நிதிக்குள் வணங்கிய நிலையில் நிற்கிறார்.
இந்த பெருமாள் குறித்து கோயில் முன்னாள் தலைமை குருக்கள் வி.விட்டல் பர்வே கூறியதாவது:
இந்தியாவில் வேறு எங்கும் காண முடியாத வகையில், இந்த சிவ தலத்தில் பெருமாள் யோகா சயனத்தில் காட்சியளிப்பார். இந்த பெருமாளை ஒவ்வொரு ஞாயிறும் தரிசித்தால், வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்கள் விலகி, மன அமைதி, மனவலிமை கிடைக்கும். ராமேஸ்வரத்தில் ராமநாதர், பர்வதவர்த்தினி, மூன்றாம் பிரகாரம், பாம்பன் பாலம் படங்கள் கிடைக்கின்றன. இந்தப் பெருமாளும் விசேஷமானவர் என்பதால், இவரது படத்தையும் ஓவியமாக்கி விற்பனை செய்ய அரசும், கோயில் நிர்வாகமும் முன்வர வேண்டும் என்றார்.
இந்த பெருமாளைப் பற்றிய புராணத்தகவல் ஒன்றும் உண்டு.
இவரை பள்ளி கொண்ட ரங்கநாதர் என்பர். ராமர் பூஜித்த ரங்கநாதரை பெற்ற விபீஷணன், சந்தர்ப்பவசத்தால் அந்தச் சிலையை காவிரிக்கரையில் வைத்துவிட்டு, இலங்கை திரும்பினான். அதுவே ஸ்ரீரங்கம் ஆயிற்று. பின், ராமேஸ்வரம் வந்த அவன், தன் திருப்திக்காக, இங்கு வேறொரு ரங்கநாதரை பிரதிஷ்டை செய்தான். ஏழு தலையுடைய ஆதிசேஷன் மீது சயனம் கொண்டுள்ள இந்த ரங்கநாதர், கையில் தண்டத்துடன் (கதாயுதம் போன்ற கருவி) காட்சியளிப்பது சிறப்பான அமைப்பு.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பெருமாள் கோவிலில் பிரதோஷம்
» ஜகந்நாதப் பெருமாள் கோவில்
» அருள்மிகு காரண கரிவரதராஜப் பெருமாள் திருக்கோயில்
» ஜகந்நாதப் பெருமாள் கோவில்
» அருள்மிகு காரண கரிவரதராஜப் பெருமாள் திருக்கோயில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum