Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கனமான கிரீடம் தலையில் இருக்கலாம். ஆனால், தலைக்குள் கனம் இருக்கக்கூடாது

Go down

கனமான கிரீடம் தலையில் இருக்கலாம். ஆனால், தலைக்குள் கனம் இருக்கக்கூடாது Empty கனமான கிரீடம் தலையில் இருக்கலாம். ஆனால், தலைக்குள் கனம் இருக்கக்கூடாது

Post by oviya Sat Apr 11, 2015 2:52 pm

* நல்ல ஒழுக்கமும், அறிவும் கொண்டவர்கள் காணும் காட்சிகள் அனைத்தும் நல்ல காட்சிகளாகவே திகழும்.
* உறுதியான மனம் உடையவனே துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றவனாக இருப்பான்.
* பொருள் ஈட்டும் ஆர்வத்தில் மக்கள் பிறரை அடித்து நொறுக்கவும் தயங்காமல் இருக்கின்றனர். உலகம் இன்ப கேளிக்கைகளில் மூழ்கிக் கிடக்கிறது.
* அதர்ம வழியில் ஈட்டிய பொருள் அற்பமானது. அது தீயவழிகளில் மனிதனைத் தள்ளி விடும் அபாயம் கொண்டது.
* விரதம் இருப்பது மிகவும் புனிதமானது. அலட்சியம் காட்டாமல் அக்கறையுடன் விரதமிருக்க வேண்டும்.
* தீய செயல்களில் ஒருபோதும் ஈடுபட மாட்டேன் என்கிற மன உறுதி நம் ஒவ்வொருவருக்கும் அவசியமானது.
* இல்லறத்தில் இருந்து கொண்டு பிறருக்குச் செய்யும் சேவை பெரிதும் பாராட்டக் கூடியதாகும்.
* மனம், மொழி மெய்களால் வருந்தி செய்த குற்றத்தைப் போக்க முயல்பவர்களே உயர்ந்தவர்கள்.
* துன்பத்தைப் பொறுக்கும் சக்தி படைத்தவர்களே துறவிகள் என மதிக்கப்பட வேண்டியவர்கள்.
* அதிகாரம், அந்தஸ்து, பணம், பதவி இவற்றால் செய்யும் தீங்கு பல மடங்கு பாவமூட்டையைச் சுமக்க வழிவகுக்கும்.
* தியானத்தை முறையாகச் செய்து வந்தால் மனதில் ஏற்படும் அற்ப எண்ணங்களை அடியோடு ஒழிக்க முடியும்.
* பிறருக்கு உதவி செய்யும் போது தன்னடக்கமும், எளிய தன்மையும் இருக்க வேண்டியது அவசியம். கனமான கிரீடம் தலையில் இருக்கலாம். ஆனால், தலைக்குள் சிறிதும் ஆணவம் இருக்கக் கூடாது.
* பிறப்பால் உயர்வு தாழ்வு கருதுவது கூடாது. பண்பின் அடிப்படையிலேயே மனிதனுக்கு உயர்வும், தாழ்வும் உண்டாகிறது.
* பசித்தவருக்கு உணவிடுவதே தலைசிறந்த அறம். பசி என வந்தவருக்கு புசி என வழங்குவதே நல்ல பண்பின் அடையாளம்.
* இளமையும், அழகும் குறிப்பிட்ட காலத்தோடு காணாமல் போகும். அழகை எண்ணி ஆணவம் கொள்வது அறியாமையின் வெளிப்பாடே.
* தேனீக்கள் சேர்த்த தேன் கொள்ளையடிக்கப்படுவது போல, கருமிகள் சேர்த்த பணமும் கயவர்களால் களவாடப்படும்.
* ஏழ்மையிலும், துன்பத்திலும் வாடுபவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்வதே மேலான தர்மம்.
* நல்லவர்கள் செய்த உதவி சிறியதாக இருந்தாலும், அதனால் உண்டாகும் நன்மை வளர்ந்து கொண்டே செல்லும்.
* மனிதனின் அறிவை எடை போடுவதே ஒருவன் படிக்கும் நல்ல நூல்களால் தான். நல்ல நூல்களைப் படிப்பதால் நல்ல பண்பும், அடக்கமும் உண்டாகிறது.
* எப்போதும் நேர்மையைப் பின்பற்றுங்கள். பொய் பேசவோ, பொய் பேச தூண்டவோ செய்யாதீர்கள். நேர்மை காப்பவனுக்கு தோல்வியே உண்டாகாது.
* அன்பு, ஈகை, நற்பண்பு, இரக்கம் உள்ள மனிதர்கள் மேலானவர்கள். அவர்கள் இருக்கும் இடத்தில் நன்மை அனைத்தும் உண்டாகும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum