Top posting users this month
No user |
Similar topics
வாழப்போன மகளுக்கு பிரச்னையா? மாமனார்களே! இங்கே வாங்க!
Page 1 of 1
வாழப்போன மகளுக்கு பிரச்னையா? மாமனார்களே! இங்கே வாங்க!
பெண்ணைக் கட்டிக் கொடுத்துவிட்டு, மருமகனின் போக்கு பிடிக்காமல் மனக்கசப்புடன் வாழும் மாமனார்கள் இருக்கிறார்கள். இவ்வாறான மருமகன்கள் திருந்த பெண்ணின் தந்தை வழிபட வேண்டிய தலம் மேலத்திருமணஞ்சேரி என்னும் எதிர்கொள்பாடி ஐராவதேஸ்வரர் கோயில்.
தல வரலாறு: பரத்வாஜ மகரிஷி தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினார். அவருக்கு பார்வதியே குழந்தையாகப் பிறந்தாள். மணப்பருவம் அடைந்த போது, சிவனிடம் அவளை மணந்து கொள்ளும்படி வேண்டினார் மகரிஷி. சிவனும் அம்பிகையை மணக்க பூலோகம் வந்தார். வீட்டிற்கு வரும் விருந்தினர்களை வெளியே வந்து வரவேற்பது நம் கலாசாரம். பரத்வாஜரும் மாப்பிள்ளையாக வந்த சிவனை பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்றார். பரத்வாஜரின் மரியாதையை ஏற்ற சிவன், அவரது வேண்டுதலுக்காக இங்கே எழுந்தருளினார்.
பரத்வாஜர் எதிர்கொண்டு அழைத்ததால் தலத்திற்கு "எதிர்கொள்பாடி' என்றும், சுவாமிக்கு திருஎதிர் கொள்பாடி உடையார் என்றும் பெயர் உண்டானது. ஐராவதம் என்னும் இந்திரனின் யானை வழிபட்டதால் ஐராவதேஸ்வரர் என்ற பெயர் பிற்காலத்தில் உண்டானது.
மகளுக்காக பிரார்த்தனை: பெண்ணைப் பெற்றவர்கள் வரன் பார்க்கும் முன்பு, நல்ல மாப்பிள்ளை அமைய இங்கு மகளை அழைத்து வருகிறார்கள். சிவனுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து பூஜை செய்கிறார்கள். மாப்பிள்ளை மற்றும் அவரது வீட்டாருடன் மனக்கசப்பு உள்ளவர்களும் இங்கு பூஜை நடத்துகின்றனர். மகளின் வாழ்க்கை நன்றாக அமைய பெற்றோர் வழிபட வேண்டிய தலம் இது.
மருமகனுக்கு வரவேற்பு: இக் கோயிலில் பிரம்மோற்ஸவம் கிடையாது. இங்கிருந்து 2 கி.மீ., தூரத்தில் உள்ள திருமணத்தலமான திருமணஞ்சேரியில் கல்யாண சுந்தரருக்கு சித்திரை மாதம் திருக்கல்யாணம் நடக்கும். மாப்பிள்ளை கோலத்தில் அவர் எதிர்கொள்பாடி கோயிலுக்கு எழுந்தருள்வார். அவரை கோயில் அர்ச்சகர் தன்னை அம்பாளின் தந்தையாகப் பாவித்து, பூர்ணகும்ப மரியாதை கொடுத்து வரவேற்பார். மருமகனுக்குரிய நியாயமான சீரும் தருவார். இந்த உபசரிப்பை ஏற்றபின்பு, சுவாமி திருமணஞ்சேரிக்கு மீண்டும் சென்று, அம்பிகையை மணந்து கொள்வார்.
கருணை அம்பிகை: காவிரியின் வடகரையில் அமைந்த இக்கோயிலில்,சிவன் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். இத்தலத்து அம்பாள் மலர்க்குழல்நாயகிக்கு "பெருங்கருணை பிராட்டியார்' என்றும் பெயருண்டு. நீண்ட நாட்களாக வரன் அமையாமல் இருப்பவர்கள் மீது கருணை கொண்டு, நல்ல வரன் அமைய அருளுபவள் என்பதால் இவளுக்கு இப்பெயர்.
சிறப்பம்சம்: பரத முனிவர் வழிபட்ட பரதலிங்கம் பிரகாரத்தில் இருக்கிறது. சுவாமி சன்னதி கோஷ்டத்தில் தாமரை பீடத்தின் மீது துர்க்கை காட்சி தருகிறாள். விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், மகாலட்சுமி, ஞானசரஸ்வதி, பைரவர், சனீஸ்வரர், துணைவந்த விநாயகர் சந்நிதிகளும் உள்ளன.
இருப்பிடம்: கும்பகோணம்- மயிலாடுதுறை வழியில் 27 கி.மீ., தூரத்தில் திருமணஞ்சேரி. இங்கிருந்து 2 கி.மீ., தூரத்தில் எதிர்கொள்பாடி.
திறக்கும் நேரம்: காலை 7.00- 11.00, மாலை 5.00- இரவு 8.00.
தல வரலாறு: பரத்வாஜ மகரிஷி தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினார். அவருக்கு பார்வதியே குழந்தையாகப் பிறந்தாள். மணப்பருவம் அடைந்த போது, சிவனிடம் அவளை மணந்து கொள்ளும்படி வேண்டினார் மகரிஷி. சிவனும் அம்பிகையை மணக்க பூலோகம் வந்தார். வீட்டிற்கு வரும் விருந்தினர்களை வெளியே வந்து வரவேற்பது நம் கலாசாரம். பரத்வாஜரும் மாப்பிள்ளையாக வந்த சிவனை பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்றார். பரத்வாஜரின் மரியாதையை ஏற்ற சிவன், அவரது வேண்டுதலுக்காக இங்கே எழுந்தருளினார்.
பரத்வாஜர் எதிர்கொண்டு அழைத்ததால் தலத்திற்கு "எதிர்கொள்பாடி' என்றும், சுவாமிக்கு திருஎதிர் கொள்பாடி உடையார் என்றும் பெயர் உண்டானது. ஐராவதம் என்னும் இந்திரனின் யானை வழிபட்டதால் ஐராவதேஸ்வரர் என்ற பெயர் பிற்காலத்தில் உண்டானது.
மகளுக்காக பிரார்த்தனை: பெண்ணைப் பெற்றவர்கள் வரன் பார்க்கும் முன்பு, நல்ல மாப்பிள்ளை அமைய இங்கு மகளை அழைத்து வருகிறார்கள். சிவனுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து பூஜை செய்கிறார்கள். மாப்பிள்ளை மற்றும் அவரது வீட்டாருடன் மனக்கசப்பு உள்ளவர்களும் இங்கு பூஜை நடத்துகின்றனர். மகளின் வாழ்க்கை நன்றாக அமைய பெற்றோர் வழிபட வேண்டிய தலம் இது.
மருமகனுக்கு வரவேற்பு: இக் கோயிலில் பிரம்மோற்ஸவம் கிடையாது. இங்கிருந்து 2 கி.மீ., தூரத்தில் உள்ள திருமணத்தலமான திருமணஞ்சேரியில் கல்யாண சுந்தரருக்கு சித்திரை மாதம் திருக்கல்யாணம் நடக்கும். மாப்பிள்ளை கோலத்தில் அவர் எதிர்கொள்பாடி கோயிலுக்கு எழுந்தருள்வார். அவரை கோயில் அர்ச்சகர் தன்னை அம்பாளின் தந்தையாகப் பாவித்து, பூர்ணகும்ப மரியாதை கொடுத்து வரவேற்பார். மருமகனுக்குரிய நியாயமான சீரும் தருவார். இந்த உபசரிப்பை ஏற்றபின்பு, சுவாமி திருமணஞ்சேரிக்கு மீண்டும் சென்று, அம்பிகையை மணந்து கொள்வார்.
கருணை அம்பிகை: காவிரியின் வடகரையில் அமைந்த இக்கோயிலில்,சிவன் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். இத்தலத்து அம்பாள் மலர்க்குழல்நாயகிக்கு "பெருங்கருணை பிராட்டியார்' என்றும் பெயருண்டு. நீண்ட நாட்களாக வரன் அமையாமல் இருப்பவர்கள் மீது கருணை கொண்டு, நல்ல வரன் அமைய அருளுபவள் என்பதால் இவளுக்கு இப்பெயர்.
சிறப்பம்சம்: பரத முனிவர் வழிபட்ட பரதலிங்கம் பிரகாரத்தில் இருக்கிறது. சுவாமி சன்னதி கோஷ்டத்தில் தாமரை பீடத்தின் மீது துர்க்கை காட்சி தருகிறாள். விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், மகாலட்சுமி, ஞானசரஸ்வதி, பைரவர், சனீஸ்வரர், துணைவந்த விநாயகர் சந்நிதிகளும் உள்ளன.
இருப்பிடம்: கும்பகோணம்- மயிலாடுதுறை வழியில் 27 கி.மீ., தூரத்தில் திருமணஞ்சேரி. இங்கிருந்து 2 கி.மீ., தூரத்தில் எதிர்கொள்பாடி.
திறக்கும் நேரம்: காலை 7.00- 11.00, மாலை 5.00- இரவு 8.00.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum