Top posting users this month
No user |
Similar topics
மருந்து சாப்பிட இங்கே வாங்க!
Page 1 of 1
மருந்து சாப்பிட இங்கே வாங்க!
ஆரோக்கியத்தை அருளும் பகவதியம்மன், எர்ணாகுளம் அருகிலுள்ள நெல்லியக்காட்டில் வீற்றிருக்கிறாள். இங்கு ஆடிமாத ஒளஷத சேவை திருவிழா (மருந்து தருதல்) ஆக., 16 வரை நடக்கிறது.
தல வரலாறு: தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது ஆலகால விஷம் எங்கும் பரவியது. விஷத் தாக்கத்தால் எங்கும் கொடிய நோய் பரவத் தொடங்கியது. இதிலிருந்து காப்பாற்றும்படி தேவர்கள், தேவமருத்துவர்களான அஸ்வினி குமாரர்களின் உதவியை நாடினர். தேவர்கள் செய்த தீவினையின் காரணமாகவே இந்நிலை உண்டானதாகவும், இதிலிருந்து உங்களைக் காக்க அம்பாளின் அம்சமான பகவதியம்மனின் உதவியைப் பெற வேண்டும் என்றும் அவர்கள் கூறினர். இதையடுத்து தேவர், அசுரர்களும், அஸ்வினி குமாரர்களும் பகவதியம்மனைச் சரணடைந்தனர்.
மனமிரங்கிய அன்னை நேரில் தோன்றி, மருத்துவர்களான அஸ்வினி குமாரர்களிடம், தன் முன்னிலையில் மருந்து தயாரிக்க உத்தரவிட்டாள். அவர்கள் அமிர்தத்திற்கு நிகரான மருந்தினை தயாரித்து தேவ அசுரர்களுக்கு அளித்தனர். அனைவரும் குணமடைந்தனர். இவளை வணங்குவோருக்கு முன்வினைப் பாவமும் நீங்கும். பிரம்மா அஸ்வினி குமாரர்களிடம், அவர்கள் மருந்து தயாரித்த இடத்தில் பகவதிக்கு கோயில் கட்ட ஆணையிட்டார். அந்தக் கோயிலே நெல்லியக்காட்டு பகவதியம்மன் கோயிலாகும். இங்கு பகவதி வேதாளத்துடன் காட்சி தருவது சிறப்பானது.
41 நாள் விரதம்: பலவித நோய்களாலும் அவதிப்படுபவர்கள் இங்கு வந்து பகவதியை வழிபட்டு மருந்து சாப்பிட்டு செல்ல வேண்டும். பின், வீட்டில் 41 நாட்கள் விரதம் இருக்க வேண்டும். கடந்த 17ம் தேதி இங்கு ஒளஷத சேவை திருவிழா துவங்கியது. ஆக., 16 வரை இங்கு மருந்து தரப்படும். இந்த மருந்தைப் பெறுவதன் மூலம் நாள்பட்ட நோய்கள் நீங்குவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
முக்கிய வழிபாடுகள்: இந்தக் கோயிலில் தன்வந்திரி சந்நிதி உள்ளது. இங்கு பாலும், வெண்ணெயும் சமர்ப்பித்தல், பால்பாயசம் படைத்தல் தாமரைப்பூ சமர்ப்பணம், ரோக சமன புஷ்பாஞ்சலி ஆகியவை சிறப்பானவை. பத்ரகாளி கோயிலில் தட்டு சமர்ப்பணம், ஒளஷத சேவை, சுற்றி விளக்கில் திரி சமர்ப்பணம்,
பட்டும், தாலியும் சமர்ப்பணம், ரோக சமண பூஜை ஆகியவை முக்கியமான பிரார்த்தனைகள்.
திருவிழா: இந்த ஆண்டு ஜூலை 17 முதல் ஆக.16 வரை நெல்லியக்காட்டு பகவதிக்கு திருவிழா நடக்கிறது.
இருப்பிடம்: கோட்டயத்தில் இருந்து 37 கி.மீ., தூரத்தில் கூத்தாட்டுக்குளம். இங்கிருந்து 1.5 கி.மீ தூரத்தில் கோயில்.
நேரம்: காலை 5.00- 11.00, மாலை 5.00- இரவு 7.30.
தல வரலாறு: தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது ஆலகால விஷம் எங்கும் பரவியது. விஷத் தாக்கத்தால் எங்கும் கொடிய நோய் பரவத் தொடங்கியது. இதிலிருந்து காப்பாற்றும்படி தேவர்கள், தேவமருத்துவர்களான அஸ்வினி குமாரர்களின் உதவியை நாடினர். தேவர்கள் செய்த தீவினையின் காரணமாகவே இந்நிலை உண்டானதாகவும், இதிலிருந்து உங்களைக் காக்க அம்பாளின் அம்சமான பகவதியம்மனின் உதவியைப் பெற வேண்டும் என்றும் அவர்கள் கூறினர். இதையடுத்து தேவர், அசுரர்களும், அஸ்வினி குமாரர்களும் பகவதியம்மனைச் சரணடைந்தனர்.
மனமிரங்கிய அன்னை நேரில் தோன்றி, மருத்துவர்களான அஸ்வினி குமாரர்களிடம், தன் முன்னிலையில் மருந்து தயாரிக்க உத்தரவிட்டாள். அவர்கள் அமிர்தத்திற்கு நிகரான மருந்தினை தயாரித்து தேவ அசுரர்களுக்கு அளித்தனர். அனைவரும் குணமடைந்தனர். இவளை வணங்குவோருக்கு முன்வினைப் பாவமும் நீங்கும். பிரம்மா அஸ்வினி குமாரர்களிடம், அவர்கள் மருந்து தயாரித்த இடத்தில் பகவதிக்கு கோயில் கட்ட ஆணையிட்டார். அந்தக் கோயிலே நெல்லியக்காட்டு பகவதியம்மன் கோயிலாகும். இங்கு பகவதி வேதாளத்துடன் காட்சி தருவது சிறப்பானது.
41 நாள் விரதம்: பலவித நோய்களாலும் அவதிப்படுபவர்கள் இங்கு வந்து பகவதியை வழிபட்டு மருந்து சாப்பிட்டு செல்ல வேண்டும். பின், வீட்டில் 41 நாட்கள் விரதம் இருக்க வேண்டும். கடந்த 17ம் தேதி இங்கு ஒளஷத சேவை திருவிழா துவங்கியது. ஆக., 16 வரை இங்கு மருந்து தரப்படும். இந்த மருந்தைப் பெறுவதன் மூலம் நாள்பட்ட நோய்கள் நீங்குவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
முக்கிய வழிபாடுகள்: இந்தக் கோயிலில் தன்வந்திரி சந்நிதி உள்ளது. இங்கு பாலும், வெண்ணெயும் சமர்ப்பித்தல், பால்பாயசம் படைத்தல் தாமரைப்பூ சமர்ப்பணம், ரோக சமன புஷ்பாஞ்சலி ஆகியவை சிறப்பானவை. பத்ரகாளி கோயிலில் தட்டு சமர்ப்பணம், ஒளஷத சேவை, சுற்றி விளக்கில் திரி சமர்ப்பணம்,
பட்டும், தாலியும் சமர்ப்பணம், ரோக சமண பூஜை ஆகியவை முக்கியமான பிரார்த்தனைகள்.
திருவிழா: இந்த ஆண்டு ஜூலை 17 முதல் ஆக.16 வரை நெல்லியக்காட்டு பகவதிக்கு திருவிழா நடக்கிறது.
இருப்பிடம்: கோட்டயத்தில் இருந்து 37 கி.மீ., தூரத்தில் கூத்தாட்டுக்குளம். இங்கிருந்து 1.5 கி.மீ தூரத்தில் கோயில்.
நேரம்: காலை 5.00- 11.00, மாலை 5.00- இரவு 7.30.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வாழப்போன மகளுக்கு பிரச்னையா? மாமனார்களே! இங்கே வாங்க!
» தாத்தா பாட்டி வாங்க! வாங்க!
» இன்றே! இங்கே! இப்பொழுதே!(ஒலி புத்தகம்)
» தாத்தா பாட்டி வாங்க! வாங்க!
» இன்றே! இங்கே! இப்பொழுதே!(ஒலி புத்தகம்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum