Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பாகற்காய் சனீஸ்வரர்

Go down

பாகற்காய் சனீஸ்வரர்            Empty பாகற்காய் சனீஸ்வரர்

Post by oviya Sat Apr 11, 2015 2:14 pm

வாழ்வில் நடந்த கசப்பான சம்பவங்களின் தாக்கத்தை குறைத்து, இனிய வாழ்வு தரும் பாகற்காய் சனீஸ்வரர் வேலூர் மாவட்டம் வன்னிவேடு அகஸ்தீஸ்வரர் கோயிலில் அருளுகிறார்.
தல வரலாறு: ஒருமுறை அகத்தியர் வன்னி மரங்கள் நிறைந்த இத்தலத்தில் தங்கினார். மணலால் லிங்கம் அமைத்து சிவபூஜை செய்தார். தன்னை பூஜித்த அகத்தியரின் பெயரால் இத்தலத்து சிவன் "அகஸ்தீஸ்வரர்' என்று பெயர் பெற்றார். பிற்காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர் ஒருவர் இவ்விடத்தில் கோயில் எழுப்பினார்.
குள்ள லிங்கம்: பாலாற்றின் வடகரையில் அமைந்த கோயில் இது. அகத்தியர் ஸ்தாபித்த லிங்கம் என்பதால், சிவலிங்கம் குள்ளமாக இருக்கிறது. பாணத்தில் கைரேகைகள் தெரிகின்றன. கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்கள் திங்களன்று சந்திரஹோரை நேரத்தில், சிவனுக்கு பச்சைக் கற்பூர அபிஷேகம் செய்கிறார்கள். சிவன் சந்நிதி எதிரில் அகத்தியர் இருக்கிறார். சதயம் நட்சத்திர நாட்களில் இவருக்கு பூஜை நடக்கிறது. ஆவணி வளர்பிறை பஞ்சமியன்று இவருக்கு ரிஷி பூஜை நடத்தப்படுகிறது.
ஆவுடை அம்பிகை: அம்பாள் புவனேஸ்வரி ஆவுடையார் (பீடம்) மீது நின்று தவக்கோலத்தில் காட்சி தருகிறாள். பவுர்ணமியன்று சப்தரிஷிகளும் இவளை பூஜிப்பதாக ஐதீகம். இதற்காக அன்றிரவில் அம்பாள் சன்னதி முன்பு, "லகுசண்டி ஹோமம்' நடத்துகின்றனர்.
பாகற்காய் மாலை: கோயில் பிரகாரத்தில் அஷ்டதிக் பாலகர்கள் தங்களுக்குரிய திசையில் தனித்தனி சந்நிதிகளில் காட்சி தருகின்றனர். செல்வ விருத்திக்காக வெள்ளிக்கிழமைகளில் குபேரருக்கு நெய்தீபம் ஏற்றியும், திருமணத்தடை நீங்க அக்னி பகவானுக்கு சிவப்பு
வஸ்திரத்துடன் தக்காளி சாதம் படைத்தும், விபத்தைத் தவிர்க்க எமனுக்கு பாலபிஷேகம் செய்தும் வேண்டிக் கொள்கிறார்கள்.
ஒரு வன்னி மரத்தின் கீழ் விநாயகர், சனீஸ்வரர் இருவரும் அடுத்தடுத்த சந்நிதிகளில் காட்சி தருகின்றனர். வீடு, கட்டடம் கட்டும் பணியைத் துவக்குவோர் அது தடங்கலின்றி நடக்க சனிக்கிழமைகளில், சனீஸ்வரருக்கு 17 பாகற்காய்களை மாலையாகத் தொடுத்து அணிவித்து எள் தீபமேற்றி வழிபடுகின்றனர். தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை சனிபகவானிடமே அர்ப்பணித்து விடுவதாகவும், இனி அவ்வாறு நடக்கக்கூடாது என்றும் இந்த வேண்டுதலைச் செய்பவர்களும் உண்டு. செவ்வாய் தோஷ நிவர்த்திக்கு இங்குள்ள முருகனுக்கு பீட்ரூட் சாதம் படைக்கிறார்கள்.
இருப்பிடம்: வேலூரிலிருந்து 35 கி.மீ., தூரத்தில் வாலாஜாபேட்டை. இங்கிருந்து பிரியும் ரோட்டில் 5 கி.மீ., தூரத்தில் கோயில்
திறக்கும் நேரம்: காலை 8- 11மணி, மாலை 5- இரவு 8 மணி.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum