Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கள்ளக்காதலனுடன் சேர்ந்து முன்னாள் காதலனை கொன்ற கல்லூரி மாணவி

Go down

கள்ளக்காதலனுடன் சேர்ந்து முன்னாள் காதலனை கொன்ற கல்லூரி மாணவி Empty கள்ளக்காதலனுடன் சேர்ந்து முன்னாள் காதலனை கொன்ற கல்லூரி மாணவி

Post by oviya Fri Apr 10, 2015 12:42 pm

சென்னையில் இளம்பெண் ஒருவர் கள்ளக்காதலனுடன் சேர்ந்து முன்னாள் காதலனை வெட்டிக்கொலை செய்துள்ளார்.
சென்னையில் ஸ்ரீபெரும்புதூருக்கு அருகே உள்ள அமரம்பேடு கிராமத்தை சேர்ந்த கமலக்கண்ணன் (19) என்பவர், கடந்த 3ம் திகதி அதே பகுதியில் ஏரிக்கரையில் சடலமாக கிடந்துள்ளார்.

இதையடுத்து இது குறித்து சோமங்கலம் காவல்துறை ஆய்வாளர் அய்யனாரப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளார்.

பொலிசாரின் விசாரணையில், கமலக்கண்ணனின் கைப்பேசிக்கு கடைசியாக வேலூர், சத்துவாச்சேரியை சேர்ந்த அவரது காதலி ரேணுகாதேவி பேசியது தெரிந்துள்ளது.

பின்னர் பொலிசார் ரேணுகா தேவியை பிடித்து விசாரித்ததில், தனது கள்ளக்காதலன் மணிகண்டனுடன் சேர்ந்து கமலக்கண்ணனை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.

இதையடுத்து வேலூரில் உறவினர் வீட்டில் தங்கி தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்து வரும் ரேணுகா தேவியை பொலிசார் கைது செய்து விசாரித்துள்ளனர்.

ரேணுகாதேவி பொலிசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், நானும், கமலக்கண்ணனும் பள்ளி படிப்பை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அனாதை விடுதியில் தங்கி படித்தோம்.

அப்போது எங்களுக்குள் காதல் ஏற்பட்டது. இதனால் உடனே எங்களை விடுதியில் இருந்து நீக்கி விட்டனர்.

பின்னர் சொந்த ஊருக்கு சென்ற நாங்கள் அவரவர் உறவினர் வீட்டில் தங்கி இருந்தோம்.

கமலக்கண்ணனுடன் கைப்பேசியில் பேசி காதலை வளர்த்து வந்த நிலையில் திருமணமான உறவினர் மணிகண்டனுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

நாங்கள் இருவரும் குடும்பத்தினருக்கு தெரியாமல் அடிக்கடி சந்தித்து வந்த நிலையில், கமலக்கண்ணன் எனது கைப்பேசிக்கு அடிக்கடி அழைத்த்தோடு என்னை நேரில் பார்க்க வேண்டும் என்று தொந்தரவு கொடுத்தார்.

இதையடுத்து நான் கமலக்கண்ணன் குறித்து மணிகண்டனிடம் கூறியபோது அவர் கமலக்கண்ணனை தீர்த்து கட்டிவிடலாம் என யோசனை தெரிவித்ததால் நானும் சம்மதித்தேன்.

பின்னர் திட்டமிட்டு, கடந்த 3ம் திகதியன்று கமலக்கண்ணனை கைப்பேசியில் பேசி அமரம்பேடு ஏரிக்கரைக்கு வருமாறு கூறினேன்.

கமலக்கண்ணன் அங்கு வந்ததும் மணிகண்டன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அவரை வெட்டி கொலை செய்தனர் என்றும் அவர் இறந்தவுடன் எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த கொலை தொடர்பாக தலைமறைவான மணிகண்டன் மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum