Top posting users this month
No user |
19வது அரசியலமைப்புக்கு எதிராக 8 மனுக்கள் தாக்கல்
Page 1 of 1
19வது அரசியலமைப்புக்கு எதிராக 8 மனுக்கள் தாக்கல்
அரசியலமைப்பின் 19வது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 8 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள் நேற்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
19வது அரசியலமைப்பை அமுல்படுத்துவதற்கு பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள அல்லது சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்த வேண்டும் என உத்தரவிடுமாறு வலியுறுத்தியே இம்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
பிரபல சட்டவுரைஞர் கொமின் தயாசிரி, பிவிதுரு ஹெல உறுமய செயலாளர் உதய கம்பன்பில மற்றும் நுகேகொடையைச்சேர்ந்த எல்.பி.ஐ பெரேரா, தலவத்து கொடையைச் சேர்ந்த தர்ஷன வீரசேகர, சங்கைக்குரிய பெங்கமுவே நாலக்க தேரர், கோட்டை வீதியைச் சேர்ந்த வணிகசேகர, சங்கைக்குரிய மாத்தறை ஆனந்த சங்கர தேரர் மற்றும் அத்துருகிரியவைச் சேர்ந்த வீரதுவ ஆகியோரே இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளார்கள்.
குறித்த மனு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 19வது திருத்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி கொள்வதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டியதில்லை என ஜனாதிபதி அரசியல் விவகாரங்களுக்கான ஆலோசகர் ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த மனுக்கள் நேற்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
19வது அரசியலமைப்பை அமுல்படுத்துவதற்கு பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள அல்லது சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்த வேண்டும் என உத்தரவிடுமாறு வலியுறுத்தியே இம்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
பிரபல சட்டவுரைஞர் கொமின் தயாசிரி, பிவிதுரு ஹெல உறுமய செயலாளர் உதய கம்பன்பில மற்றும் நுகேகொடையைச்சேர்ந்த எல்.பி.ஐ பெரேரா, தலவத்து கொடையைச் சேர்ந்த தர்ஷன வீரசேகர, சங்கைக்குரிய பெங்கமுவே நாலக்க தேரர், கோட்டை வீதியைச் சேர்ந்த வணிகசேகர, சங்கைக்குரிய மாத்தறை ஆனந்த சங்கர தேரர் மற்றும் அத்துருகிரியவைச் சேர்ந்த வீரதுவ ஆகியோரே இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளார்கள்.
குறித்த மனு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 19வது திருத்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி கொள்வதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டியதில்லை என ஜனாதிபதி அரசியல் விவகாரங்களுக்கான ஆலோசகர் ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum