Top posting users this month
No user |
Similar topics
காவிரி ஆற்றின் குறுக்கே அணை: தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு!
Page 1 of 1
காவிரி ஆற்றின் குறுக்கே அணை: தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு!
காவிரி ஆற்றில் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு, ராசிமணம் ஆகிய இடங்களில் அணை கட்டும் முயற்சியில் கர்நாடகா ஈடுபட்டு வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று(மார்ச் 28ம் திகதி) முழு அடைப்பு போராட்டம் நடத்த தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு அழைப்பு விடுத்தது.
இதனையடுத்து மாநிலம் முழுவதும் 60 லட்சம் கடைகள் இன்று அடைக்கப்பட்டிருக்கும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் கூறியுள்ளார்.
முழு அடைப்புப் போராட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் உறுப்பினர்களும் பங்கேற்பார்கள் என்று அதன் தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார்.
மேலும் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள் இயக்கப்படாது என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் நல்லதம்பி அறிவித்துள்ளார்.
இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு திமுக, காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், பாமக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், வணிகர் சங்கங்களும் தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஆனால், அரசு பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்படும் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்று ரயில்களை வழக்கம்போல இயக்கவும் தென்னக ரயில்வே அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
இதற்கிடையே முழு அடைப்புப் போராட்டத்தின் போது அசம்பாவிதங்கள் நடைபெறாத வகையில் மாநிலம் முழுவதும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு, ராசிமணம் ஆகிய இடங்களில் அணை கட்டும் முயற்சியில் கர்நாடகா ஈடுபட்டு வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று(மார்ச் 28ம் திகதி) முழு அடைப்பு போராட்டம் நடத்த தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு அழைப்பு விடுத்தது.
இதனையடுத்து மாநிலம் முழுவதும் 60 லட்சம் கடைகள் இன்று அடைக்கப்பட்டிருக்கும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் கூறியுள்ளார்.
முழு அடைப்புப் போராட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் உறுப்பினர்களும் பங்கேற்பார்கள் என்று அதன் தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார்.
மேலும் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள் இயக்கப்படாது என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் நல்லதம்பி அறிவித்துள்ளார்.
இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு திமுக, காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், பாமக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், வணிகர் சங்கங்களும் தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஆனால், அரசு பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்படும் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்று ரயில்களை வழக்கம்போல இயக்கவும் தென்னக ரயில்வே அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
இதற்கிடையே முழு அடைப்புப் போராட்டத்தின் போது அசம்பாவிதங்கள் நடைபெறாத வகையில் மாநிலம் முழுவதும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை
» குறுக்கே வந்த நாய்: திடீர் பிரேக்....பரிதாபமாய் பலியான பெண்
» காவிரி வடகரைத்தலங்கள்
» குறுக்கே வந்த நாய்: திடீர் பிரேக்....பரிதாபமாய் பலியான பெண்
» காவிரி வடகரைத்தலங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum