Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பெண்களின் அந்தரங்கத்தை ரகசியமாய் படம்பிடித்த இந்தியர்

Go down

பெண்களின் அந்தரங்கத்தை ரகசியமாய் படம்பிடித்த இந்தியர் Empty பெண்களின் அந்தரங்கத்தை ரகசியமாய் படம்பிடித்த இந்தியர்

Post by oviya Wed Mar 25, 2015 12:55 pm

பெண்களுக்கு தெரியாமல் அவர்களின் அந்தரங்கத்தை ரகசியமாக படம் பிடித்த இந்தியாவை சேர்ந்த வங்கி உயரதிகாரிக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
இந்தியாவை சேர்ந்த மஹா விக்னேஷ் வேலிப்பன்(32) என்பவர் சிங்கப்பூரில் உள்ள பிரபல வங்கியின் இந்திய கிளையில் செயல் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

கடந்த 2011ம் ஆண்டு சிங்கப்பூரின் மத்திய வணிக மாவட்டத்தில் உள்ள மற்றொரு வங்கி கட்டிடத்துக்கு பணி நிமித்தமாக சென்ற அவர், கையில் ஒரு காகித கவருடன் லிப்டில் இறங்கி கீழே வந்து கொண்டிருந்தார்.

அவருடன் அதே வங்கியில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றிவந்த சுமார் 27 வயது மதிக்கத்தக்க பெண் மட்டும் லிப்டினுள் இருந்தார்.

அமைதியான அந்த வினாடிகளில் தன்னுடன் தனிமையில் இருக்கும் அந்த ஆணின் பார்வையும், நடத்தையும் தப்பாக இருந்ததை கண்ட அந்தப் பெண், அவரை விட்டு சற்று எட்டியே நின்றார்.

அப்போது அந்ந நபர் தன் கையில் இருந்த கவரில் கைப்பேசியை மறைத்தபடி அப்பெண்ணின் குட்டை பாவாடை பகுதியை குறிவைப்பதை அவர் கண்டுபிடித்துள்ளார்.

கைப்பேசியை பரிசோதித்து பார்த்தபோது, தனது உடலின் அந்தரங்கத்தை அந்த நபர் ரகசியமாக படம் பிடித்திருப்பதை அறிந்த அந்தப் பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்நிலையில் பொலிசார் அவரது கைப்பேசியை முழுமையாக சோதனையிட்டபோது, கடந்த 2008ம் ஆண்டிலிருந்து சுமார் மூன்றாண்டு காலமாக இதைப்போன்ற இழிவான செயல்களில் அவர் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.

அவரது 596 பெண்களின் விதவிதமான வீடியோ படங்கள் இருந்ததை பார்த்த பொலிசார், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது, ஆபாச காட்சிகளையும், பெண்களுக்கு தெரியாமல் அவர்களின் அந்தரங்கத்தை பதிவு செய்து, தனிமையில் அந்த காட்சிகளை கண்டுகளிக்கும் ‘வாயரிஸம்’(voyeurism) என்ற மனவியாதியால் மஹா விக்னேஷ் வேலிப்பன் பாதிக்கப்பட்டுள்ளார்.

சில ஆண்டுகளாக அதற்காக சிகிச்சை பெற்றுவரும் அவர் விரைவில் குணமடைந்து விடுவார் என வாதாடிய அவரது வழக்கறிஞர் அதிக பட்ச தண்டனை வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த கோரிக்கையை பரிவுடன் பரிசீலித்த நீதிபதி, மஹா விக்னேஷ் வேலிப்பனுக்கு 8 வாரங்கள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum