Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


100 நாள் வேலைத்திட்டத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு கைவிடப்பட்டுள்ளதா? மக்கள் கேள்வி

Go down

100 நாள் வேலைத்திட்டத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு கைவிடப்பட்டுள்ளதா? மக்கள் கேள்வி Empty 100 நாள் வேலைத்திட்டத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு கைவிடப்பட்டுள்ளதா? மக்கள் கேள்வி

Post by oviya Wed Mar 25, 2015 12:52 pm

புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு எவ்விதமான நன்மைகளும் கிட்டவில்லை எனவும் மேற்படி இரு மாவட்டங்களிலும் மீள்குடியேற்றம், சிவில் நிர்வாக நடைமுறை இல்லாமை போன்றன மிகப்பெரும் பிரச்சினையாக தொடர்வதாகவும் அம்மாவட்ட மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்டு 100 நாள் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்தது.

இதன் கீழ் வடக்கிலும் கிழக்கிலும் பெரும்பாலான பகுதிகளில் படையினர் கையகப்படுத்தியிருந்த காணிகள் விடுவிக்கப்படுகின்றன.

மேலும் சிவில் நிர்வாகம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆனால் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தினால் எவ்விதமான நன்மைகளும் கிடைக்கவில்லை.

குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் பரவிப்பாஞ்சான் கிராமத்தில் 119 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட வேண்டியுள்ளார்கள், அதேபோன்று கிருஸ்ணபுரம் பகுதியிலும் 18குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட வேண்டியுள்ளார்கள்.

மேலும் பூநகரி பிரதேச செயலர் பிரிவில் இரணைத்தீவு என்ற தீவு முழுமையாக படையினரால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் சுமார் 280ற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தமது சொந்த நிலங்களுக்குச் செல்ல முடியாமல் இருக்கின்றார்கள்.

இதனைவிட கிளிநொச்சி மாவட்டத்தில் 100ற்கும் மேற்பட்ட தனியார் காணிகளை படையினர் கையப்படுத்தியிருக்கின்றார்கள்.

குறிப்பாக பூநகரி பிரதேசத்தில் சுமார் 32ஏக்கர் தனியாருக்குச் சொந்தமான வயல் நிலத்தை படையினர் கையகப்படுத்தியிருக்கின்றார்கள்.

இதனைவிட 5 ஏக்கர் வரையான அரசாங்க திணைக்கள காணிகள் மற்றும் பண்ணைகளை படையினர் கையப்படுத்தியிருக்கின்றார்கள். இவை தொடர்பில் எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பதுடன் இந்த விடயங்கள் தொடர்பாக, அரசியல்வாதிகளும் மௌனமாக இருக்கின்றார்கள்.

மேலும் மீள்குடியேற்றத்தை போன்றே சிவில் நிர்வாக நடைமுறையும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்படுத்தப்படாமல் தொடர்ந்தும் படையினரின் சோதனைச் சாவடிகளும், சோதனை நடவடிக்கைகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

குறிப்பாக வலைப்பாடு, கிராஞ்சி பகுதிகளுக்குச் செல்வதற்கு பிருந்தாவனம் சந்தியில், படையினரின் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு சோதனையின் பின்னர் உள்ளே அனுமதிக்கப்ப டுகின்றார்கள்.

இதேபோன்று ஜெயபுரம் செல்வதற்கு வன்னேரிக்குளம் பகுதியில் சோதனைச் சாவடி உள்ளது. மேலும் முழங்காவில் செல்வதற்கு 19ம் கட்டை பகுதியில் சோதனைச் சாவடி உள்ளது.

எனவே சிவில் நிர்வாகம் இன்னமும் ஏற்படுத்தப்படவில்லை என கிளிநொச்சி மாவட்ட மக்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.

மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் எல்லைக் கிராமங்களில் தொடரும் சிங்கள குடியேற்றங்கள் மற்றும் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை என்பதுடன், கேப்பாப்பிலவு, புதுக்குடியிருப்பு போன்ற பகுதிகளில் படையினர் கையகப்படுத்தியிருக்கும் நிலங்கள் இதுவரை விடுவிக்கப்படாத நிலை
தொடர்கின்றது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக அரசியல்வாதிகள் கூடிய கவனம் எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum