Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


காங்கிரஸ் எம்.பி ரேணுகா சவுத்ரி மீது 1 கோடி பண மோசடி புகார்: பொலிசார் விசாரணை

Go down

காங்கிரஸ் எம்.பி ரேணுகா சவுத்ரி மீது 1 கோடி பண மோசடி புகார்: பொலிசார் விசாரணை Empty காங்கிரஸ் எம்.பி ரேணுகா சவுத்ரி மீது 1 கோடி பண மோசடி புகார்: பொலிசார் விசாரணை

Post by oviya Sat Mar 21, 2015 1:18 pm

ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட் வாங்கித் தருவதாக கூறி லஞ்சம் வாங்கி ஏமாற்றியதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ரேணுகா சவுத்ரி மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் ராஜ்யசபை எம்பியுமான ரேணுகா சவுத்திரி மீது, கம்மம் மாவட்டத்தை சேர்ந்த ராம்ஜி நாயக் என்பவரின் மனைவி கலாவதி ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில், எனது கணவர் ராம்ஜிநாயக்குக்கு கம்மம் மாவட்டத்தில் உள்ள வைரா சட்டமன்ற தனி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் டிக்கெட் பெற்றுத் தருவதாக ரேணுகா சவுத்திரி ரூ.1.10 கோடி வாங்கினார்.

ஆனால் தேர்தலில் போட்டியிட எனது கணவருக்கு டிக்கெட் பெற்றுத் தரவுமில்லை, வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.

தற்போது இந்த மனவேதனையிலே எனது கணவர் மரணம் அடைந்து விட்டார்.

மேலும், அந்த பணத்தை திருப்பிக் கேட்ட என்னை ரேணுகா சவுத்திரியும், அவரது ஆட்களும் சாதி பெயரை சொல்லி திட்டினர்.

இதுகுறித்து கம்மம் நான் நகர பொலிசில் புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த மனுவோடு, ரேணுகா சவுத்திரிக்கு எந்தெந்த திகதியில் பணம் கொடுக்கப்பட்டது என்ற பட்டியலையும் அதிகாரப்பூர்வமாக கோர்ட்டில் தாக்கல் செய்ததால், நிதிமன்றம் ரேணுகா சவுத்திரி மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அடுத்து அவர் மீது, மோசடி, சாதி பெயரை சொல்லி திட்டுதல் ஆகிய பிரிவின் கீழ் கம்மம் நகர பொலிசார் வழக்குப்பதிவு செய்ததோடு, அவரது ஆதரவாளர்கள் 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ரேணுகா, என் மீதான குற்றச்சாட்டுகளால் பெரிதும் கவலையடைந்துள்ளேன். இது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடரப்பட்ட வழக்கு என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் கலாவதியிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளதால் ரேணுகா சவுத்ரிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum