Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

Go down

வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்  Empty வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

Post by oviya Tue Mar 17, 2015 1:30 pm

வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்கள் தங்களது கடந்த பல மாதங்களுக்கான சம்பளப் பணத்தை வழங்குமாறு கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தின் இரண்டாவது நாளான இன்று மேற்கொண்டுள்ளனர்.
திங்கட்கிழமை காலை மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் பின்னர் சாலை மறியல் போராட்டமாக மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வாழைச்சேனை கொழும்பு வீதியின் ஓட்டமாவடி பாலத்தின் அருகாமையில் பந்தல் ஒன்றை அமைத்து 200ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அமர்ந்திருந்து மௌனமான முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

தங்களது போராட்டத்திற்கு சாதகமான பதில் சம்பந்தப்பட்ட கைத்தொழில் துறை அமைச்சிடம் இருந்து கிடைக்கும் பட்சத்திலேயே தமது உண்ணாவிரதப் போராட்டத்தினை கைவிடப்போவதாக காகித ஆலை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது எதுவும் அற்ற அரசியல் அனாதைகளாக வீதியில் வந்து போராட்டம் நடத்துவதற்குரிய சூழ்நிலையினை ஆலை முகாமைத்துவம் மற்றும் இது தொடர்பான அமைச்சும் ஏற்படுத்தியுள்ளமையினை நினைத்து தாங்கள் கவலையடைவதாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

நிதி அமைச்சரே தடைப்பட்டுள்ள 4 மாத சம்பளப்பணத்தை உடன் வழங்க ஆணையிடுங்கள்.

கைத்தொழில் அமைச்சரே காகித ஆலை சீராக இயங்க முடியாவிட்டால் எம்மை கட்டாய ஒப்பந்த திட்டத்தில் அனுப்ப முடிவெடு.

கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களே காகித ஆலையில் கடமையாற்றும் 300 தொழிலாளர்களின் நிலைமையை பற்றி சற்று சிந்தியுங்கள்.

ஊழியர் சேமலாப நிதி ஊழியர் நம்பிக்கை நிதி ஊழியர் பனிக்கொடை போன்றவற்றை வழங்க அரசே நடவடிக்கை எடு.

துண்டிக்கப்பட்ட மின்சாரத்தினை வழங்க நடவடிக்கை எடு. என்பன போன்ற பல வாசகங்களை கையில் ஏந்தியவாறும் பந்தலில் காட்சிப்படுத்தி உண்ணாவிரதத்தில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் வாழைச்சேனை ஸ்ரீ மாஹாபோதி விகாராதிபதி நாவன்ன அபேயலங்கார தேரரும் கலந்து கொண்டுள்ளார்.

தங்களுக்கு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் அனைவரும் ஆலை தொடர்பான விடயங்கள் பற்றி நடவடிக்கை எடுப்பதாக கூறி ஏமாற்றி வருவதாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கவலை தெரிவித்தனர்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா சம்பவ இடத்திற்கு சென்று தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

தங்களது நீண்ட கால பிரச்சினையை தீர்க்கும் முகமாக இது தொடர்பாக அமைச்சுடன் பேசி தீர்வை பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.

எனினும் இவ்விடயத்திற்கு ஒழுங்கான தீர்வு ஒன்று கிடைக்கும் வரை தங்களது போராட்டத்தினை கைவிடப்போவதில்லையெனவும் குறித்த இடத்தில் இருந்து அசையப்போவதில்லையெனவும் பாராளுமன்ற உறுப்பினரிடம் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்தும் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum