Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


டிக்கோயாவில் வயோதிப பெண் திடீரென உயிரிழப்பு: குளவி கொட்டியதில் 10 பேர் பாதிப்பு

Go down

டிக்கோயாவில் வயோதிப பெண் திடீரென உயிரிழப்பு: குளவி கொட்டியதில் 10 பேர் பாதிப்பு  Empty டிக்கோயாவில் வயோதிப பெண் திடீரென உயிரிழப்பு: குளவி கொட்டியதில் 10 பேர் பாதிப்பு

Post by oviya Thu May 21, 2015 1:44 pm

டிக்கோயா பிரதேசத்தில் பாதையில் சென்று கொண்டிருந்த 73 வயதுடைய பெண் ஒருவர் தீடிரென கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஹற்றன் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் டிக்கோயா கொலனி பகுதியை சேர்ந்த பி.மாரியாயி 73 வயது என இனங்காணப்பட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்க கூடுமா? அல்லது வேறு காரணங்களினால் உயிரிழந்திருக்கலாமா என்பது தொடர்பில் ஹற்றன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







இதேவேளை ஹற்றன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா இன்வெரி தோட்ட பகுதியில் இன்று குளவி கொட்டியதால் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொழுந்து பறித்து கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இவர்கள் குளவி கொட்டிற்கு இலக்காகியுள்ளனர் என தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவத்தில் பெண் தொழிலாளர்கள் அறுவரும் தோட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதுடன், ஆண்கள் நால்வரும் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அடிப்படை வசதிகளின்றி அல்லலுறும் மலையக பாடசாலை

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம் மூன்று தோன்பீல்ட் தமிழ் வித்தியாலயத்தில் அடிப்படை வசதிகள் இன்மையால் மாணவர்கள் கல்வி கற்பதில் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இப்பாடசாலையில் தரம் 1 முதல் 5 வரையான வகுப்புகள் உள்ளன.

அத்துடன், 80ற்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கல்வி பயில்வதுடன், 4 ஆசிரியர்கள் கடமையில் ஈடுபடுகின்றனர்.

1914ம் ஆண்டு கட்டப்பட்ட இக்கட்டிடம் தற்போது நூறு வருடங்களை கடந்து விட்டது.

இந்த பாடசாலையில் குடிநீர் வசதியின்மை, விளையாட்டு மைதானமின்மை, மற்றும் தோட்ட நிர்வாகம் மின்சாரம் வழங்கினாலும் அது மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பாடசாலையின் கூரை தகரம் ஓட்டையாக காணப்படுவதால் மழைக்காலங்களில் மழை நீர் உள்ளே வடிகின்றது.

பாடசாலையை சுற்றி மரங்கள் காணப்படுவதால் காற்று வீசும் காலங்களில் கிளைகள் முறிந்து விழும் அபாய நிலை தோன்றியுள்ளது.

பாடசாலையின் கட்டிடம் வெடிப்புற்று இடிந்து விழும் நிலையில் காணப்படுகின்றதோடு, கதவு யன்னல்கள் உடைந்துள்ளன.

சிறிய கட்டிடம் என்பதினால் மாணவர்கள் இடையூறின்றி கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு போதியளவு இடவசதி இல்லாமல் அல்லலுறுகின்றனர்.

ஏனைய பாடசாலை மாணவர்கள் புதிய தொழில்நுட்பத்தோடு கல்வி கற்ற போதிலும் இப்பாடசாலை மாணவர்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் கற்பது வேதனைமிகு விடயமாகும்.

இப்பாடசாலை ஆசிரியர்களும் பெற்றோர்களும் புதிய கட்டிடம் நிர்மாணிக்குமாறு மலையக அரசியல்வாதிகளிடம் பல முறை உதவி கோரிய போதிலும் இதுவரை எவரும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum