Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கனடாவில் இந்திய வம்சாவளி இளைஞர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை

Go down

கனடாவில் இந்திய வம்சாவளி இளைஞர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை Empty கனடாவில் இந்திய வம்சாவளி இளைஞர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை

Post by oviya Mon Jul 20, 2015 2:54 pm

கனடாவில் இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் உள்ள கால்கெரி நகரில் கடந்த 11ம் திகதி, சாலையோரம் கார் ஒன்று நீண்ட நேரமாக கேட்பாரற்று நின்றுள்ளது.

இதையடுத்து அப்பகுதி மக்கள், அந்த கார் குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பின்னர் வந்த பொலிசார் அந்த காரின் கதவை திறந்து பார்த்தபோது உள்ளே 2 இளைஞர்கள் காயத்துடன் இருந்துள்ளனர்.

உடனடியாக அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மருத்துவர்கள் இளைஞர்களில் ஒருவர் இறந்து விட்டதாகவும், மற்றொருவர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

விசாரணையில் இறந்தவர் பெயர் ஸ்டீவன் ஷார்தா என்றும், அவர் கனடாவில் வசிக்கும் இந்திய வம்சாவளி இளைஞர் எனவும் தெரியவந்துள்ளது.

மற்றொருவர் நிலை கவலைக்கிடமாக இருப்பதாலும், அவருக்கு இன்னும் நினைவு திரும்பாததாலும் அவர் யார் என்பதும், இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பதும் கண்டுபிடிக்கப்படவில்லை.

பொலிஸ் அதிகாரி டஹ் அன்ட்ரூஸ் கூறுகையில், இந்த சம்பவத்தை பார்க்கும் போது அவர்கள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளனர் என்று நம்புகிறோம்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளை வைத்தும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கமெராக்களில் பதிவான காட்சிகளை வைத்தும் தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum