Top posting users this month
No user |
Similar topics
மாயமான விமானிகளின் எலும்பு துண்டுகள் கண்டெடுப்பு: விரைவில் டிஎன்ஏ பரிசோதனை
Page 1 of 1
மாயமான விமானிகளின் எலும்பு துண்டுகள் கண்டெடுப்பு: விரைவில் டிஎன்ஏ பரிசோதனை
டார்னியர் விமானத்தில் பயணித்த விமானிகள் குறித்து எந்த தகவலும் கிடைக்காத நிலையில், தற்போது எலும்பு துண்டுகள் கண்டெடுக்கப்பட்டதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
ஆபரேஷன் ஆம்லா ஆயத்த பணிக்காக சென்ற கடலோர காவல் படைக்கு சொந்தமான டார்னியர் விமானம் கடந்த மாதம் மாயமானது.
இந்நிலையில், கடந்த 10ம் திகதி கடலுக்கடியில் 950 மீற்றர் ஆழத்தில் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் அதில் சென்ற விமானிகள் சோனி, வித்யாசாகர் மற்றும் துணை கமோண்டர் சுபாஷ்சுரேஷ் ஆகியோரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, விமானம் பாகங்கள் கிடைத்த இடத்தில் விமானிகள் பயன்படுத்தக் கூடிய லைப் ஜாக்கெட், கைக் கடிகாரம் மற்றும் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கிழக்கு மண்டல கடலோர காவல்படை ஐ.ஜி எஸ்.பி.சர்மா நிருபர்களிடம் கூறுகையில், விமானத்தை தேடும் பணி 35 நாட்கள் நடந்தது.
நேற்று முன்தினம் இரவு தேடுதல் பணியின்போது, கடலுக்கடியில் சுமார் 950 மீற்றர் ஆழத்தில் கைக்கடிகாரம், விமானிகள் பயன்படுத்தக்கூடிய 3 லைப்ஜாக்கெட், மனித எலும்பு துண்டுகள் மற்றும் சோனி நிறுவனத்தின் கமெரா ஆகியவை மீட்கப்பட்டது.
இவை அனைத்தும் மீனம்பாக்கம் விமான தளத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட வாட்ச், விமானிகள் பயன்படுத்தியதா என்பதை உறுதிசெய்ய அவர்களின் பெற்றோர்கள் உதவியை நாடியுள்ளோம்.
எலும்பு துண்டுகள் கண்டெடுக்கப்பட்டது குறித்து விமானிகளின் பெற்றோர்களுக்கு உடனடியாக தகவல் அனுப்பினோம்.
தற்போது எலும்பு துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் தேடுதல் பணி நேற்று இரவுடன் நிறுத்தப்பட்டது.
கண்டெடுத்த எலும்பு மாதிரிகளை டிஎன்ஏ ஆய்வுக்கு உட்படுத்தி, அது விமானிகளின் உடல் தானா என்பது குறித்து இறுதி முடிவு அறிவிக்கப்படும்.
தமிழ்நாடு தடய அறிவியில் பரிசோதனை துறையிடம் டிஎன்ஏ மாதிரியை அனுப்பி ஆய்வு செய்யப்படும்.
மேலும், ஆய்வின் முடிவை பொறுத்தே விமானிகள் என்ன ஆனார்கள் என எங்களால் பதில் கூறமுடியும் என்று தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் ஆம்லா ஆயத்த பணிக்காக சென்ற கடலோர காவல் படைக்கு சொந்தமான டார்னியர் விமானம் கடந்த மாதம் மாயமானது.
இந்நிலையில், கடந்த 10ம் திகதி கடலுக்கடியில் 950 மீற்றர் ஆழத்தில் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் அதில் சென்ற விமானிகள் சோனி, வித்யாசாகர் மற்றும் துணை கமோண்டர் சுபாஷ்சுரேஷ் ஆகியோரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, விமானம் பாகங்கள் கிடைத்த இடத்தில் விமானிகள் பயன்படுத்தக் கூடிய லைப் ஜாக்கெட், கைக் கடிகாரம் மற்றும் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கிழக்கு மண்டல கடலோர காவல்படை ஐ.ஜி எஸ்.பி.சர்மா நிருபர்களிடம் கூறுகையில், விமானத்தை தேடும் பணி 35 நாட்கள் நடந்தது.
நேற்று முன்தினம் இரவு தேடுதல் பணியின்போது, கடலுக்கடியில் சுமார் 950 மீற்றர் ஆழத்தில் கைக்கடிகாரம், விமானிகள் பயன்படுத்தக்கூடிய 3 லைப்ஜாக்கெட், மனித எலும்பு துண்டுகள் மற்றும் சோனி நிறுவனத்தின் கமெரா ஆகியவை மீட்கப்பட்டது.
இவை அனைத்தும் மீனம்பாக்கம் விமான தளத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட வாட்ச், விமானிகள் பயன்படுத்தியதா என்பதை உறுதிசெய்ய அவர்களின் பெற்றோர்கள் உதவியை நாடியுள்ளோம்.
எலும்பு துண்டுகள் கண்டெடுக்கப்பட்டது குறித்து விமானிகளின் பெற்றோர்களுக்கு உடனடியாக தகவல் அனுப்பினோம்.
தற்போது எலும்பு துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் தேடுதல் பணி நேற்று இரவுடன் நிறுத்தப்பட்டது.
கண்டெடுத்த எலும்பு மாதிரிகளை டிஎன்ஏ ஆய்வுக்கு உட்படுத்தி, அது விமானிகளின் உடல் தானா என்பது குறித்து இறுதி முடிவு அறிவிக்கப்படும்.
தமிழ்நாடு தடய அறிவியில் பரிசோதனை துறையிடம் டிஎன்ஏ மாதிரியை அனுப்பி ஆய்வு செய்யப்படும்.
மேலும், ஆய்வின் முடிவை பொறுத்தே விமானிகள் என்ன ஆனார்கள் என எங்களால் பதில் கூறமுடியும் என்று தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மாயமான கடலோர காவல்படை விமானம்..3 விமானிகளின் கதி என்ன? தீவிர தேடுதல் வேட்டை!
» கீழே விழுந்து நொறுங்கிய விமானப்படை விமானம்: விமானிகளின் கதி என்ன?
» மாயமான கடற்படை விமானத்தின் கதி என்ன?
» கீழே விழுந்து நொறுங்கிய விமானப்படை விமானம்: விமானிகளின் கதி என்ன?
» மாயமான கடற்படை விமானத்தின் கதி என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum