Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அ.தி.மு.க. அலுவலகத்தில் மண்டை ஓடு: பில்லி சூனியம் வைத்ததாக பரபரப்பு

Go down

அ.தி.மு.க. அலுவலகத்தில் மண்டை ஓடு: பில்லி சூனியம் வைத்ததாக பரபரப்பு Empty அ.தி.மு.க. அலுவலகத்தில் மண்டை ஓடு: பில்லி சூனியம் வைத்ததாக பரபரப்பு

Post by oviya Sun Jun 07, 2015 12:54 pm

ஈரோடு மாவட்டம் சிவகிரி புதிய பஸ் நிலையம் அருகே அ.தி.மு.க. அலுவலகம் முன்னாள் மனித மண்டையோடு வைக்கப்பட்டமையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிவகிரி அலுவலகத்தில் எப்போதும் கட்சி பிரமுகர்கள் கூடுவார்கள். கட்சி குறித்து கலந்துரையாடுவார்கள்.

இன்று காலை 6 மணிக்கு சிவகிரி அ.தி.மு.க. பேரூர் செயலாளர் ராமலிங்கம் வழக்கம் போல் கட்சி அலுவலகத்தை திறக்க வந்தார். அப்போது அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

அலுவலகம் முன் ஒரு மனித மண்டை ஓடு இருந்தது. அ.தி.மு.க. அலுவலகம் முன் சந்தனம் தெளித்து பூஜை செய்து மண்டை ஓடு முழுவதும் சிவப்பு வர்ணம் பூசி வாயில் சந்தனம் தடவிய எலுமிச்சம் பழமும் வைக்கப்பட்டிருந்தது.

பஸ் நிலையம் அருகே மார்க்கெட் உள்ளதால் காலை நேரத்தில் பொது மக்கள் அங்கு வரு வார்கள். சந்தை அருகே உள்ள அ.தி.மு.க. அலுவலகம் முன் மனித மண்டை ஓடு வைக்கப்பட்டிருப்பதை கண்டு பொதுமக்களும் அங்கு திரண்டனர்.

இதனால் சிவகிரியில் இன்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அ.தி.மு.க. பிரமுகர்களும், தொண்டர்களும் அங்கு குவிந்தனர்.

அ.தி.மு.க. அலுவலகம் முன் யாரோ விஷமிகள் பில்லி – சூனியம் வைத்திருப்பதாக பரபரப்பாக கூறப்பட்டது.

சிவகிரி பேரூர் செயலாளர் ராமலிங்கம் மற்றும் அ.தி.மு.க.வினர் மனித மண்டை ஓட்டை அகற்றி அங்கு மஞ்சள் தடவி வேப்பில்லை வைத்து சிறப்பு பூஜை நடந்தது. பிறகே ஆட்சி அலுவலகத்தை திறந்தனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum