Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நடிகை நயன்தாரா பெயரில் அரங்கேறிய மோசடி

Go down

நடிகை நயன்தாரா பெயரில் அரங்கேறிய மோசடி Empty நடிகை நயன்தாரா பெயரில் அரங்கேறிய மோசடி

Post by oviya Sat Mar 21, 2015 1:20 pm

நடிகை நயன்தாராவின் பெயரில் நடந்த நூதன மோசடியில் ஐந்து பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கோவை, சுந்தராபுரத்தை அடுத்த நாகராஜபுரத்தைச் சேர்ந்தவர், சிவா (எ) சிவானந்தம். இவர் கோழி கறிக்கடை நடத்தி வருகிறார்.

இவரும், கேரள மாநிலம், திருச்சூரை சேர்ந்த, பாபு (எ) அப்துல் அகது லியாகு (34) என்பவரும் சேர்ந்து, சினிமா படம் எடுக்க முடிவு செய்தனர்.

இதற்காக, குனியமுத்தூரில், அலுவலகம் ஒன்றை திறந்தனர். சிவானந்தம், தன் நண்பர்களான பாலமுருகன், காந்திராஜன் மற்றும் மோகனசுந்தரம் ஆகியோரை, பாபுவுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

இதன்பின் அனைவரும் சென்னை சென்று, இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜாவை சந்தித்தனர்.

படத்தில், நடிகர் ஆர்யா, நடிகை நயன்தாரா ஆகியோரை நடிக்க வைக்க முடிவு செய்தனர்.

இந்நிலையில், படம் எடுப்பதற்காக, தான் கொடுத்த தொகையை திரும்ப பெற்றுக்கொண்டு, சிவானந்தம் விலக முடிவு செய்தார்.

இதற்காக, நேற்று முன்தினம் இரவு சிவானந்தம், மூன்று பேருடன் சென்று பாபுவிடம், தான் கொடுத்த, 2 லட்சம் ரூபாயை திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.

இதனால், இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதுடன், அங்கிருந்த மோகனசுந்தரம் சிவானந்தத்தை தாக்கியுள்ளார்.

மேலும் சிவானந்தத்துடன் வந்த பாண்டியன், மோகனசுந்தரத்தை தாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இரு தரப்பினரும் கொடுத்த புகாரின்படி போத்தனூர் பொலிசார் வழக்கு பதிவு செய்து, சிவானந்தம், பாபு, பாலமுருகன், காந்திராஜன், மோகனசுந்தரம் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

தற்போது தப்பியோடிய பாண்டியன் உள்ளிட்ட மூவரை தீவிரமாய் தேடி வருகின்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum