Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மருமகளுடன் உல்லாச வாழ்க்கைக்காக 6 வயது பேத்தியை கற்பழித்து கொன்ற தாத்தா: பரபரப்பு வாக்குமூலம்

Go down

மருமகளுடன் உல்லாச வாழ்க்கைக்காக 6 வயது பேத்தியை கற்பழித்து கொன்ற தாத்தா: பரபரப்பு வாக்குமூலம் Empty மருமகளுடன் உல்லாச வாழ்க்கைக்காக 6 வயது பேத்தியை கற்பழித்து கொன்ற தாத்தா: பரபரப்பு வாக்குமூலம்

Post by oviya Fri Feb 06, 2015 1:29 pm

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாத்தா ஒருவர் தனது பேத்தியை கற்பழித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கல்லாவி ஜடையன் பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிகவுண்டர்(63), இவரது மனைவி முத்தம்மாள்(53).

இவர்களது மகன் கோபாலகிருஷ்ணனுக்கும், தீபா என்ற பெண்ணுக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு பூஜா(6) என்ற மகள் உள்ளார். பூஜா 6 மாத குழந்தையாக இருந்த போது தாய் தீபா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து கல்லாவி அருகே உள்ள சின்ன முருங்கம்பட்டியை சேர்ந்த முத்துலட்சுமி(20) என்ற பெண்ணை கோபாலகிருஷ்ணனுக்கு 2–வது திருமணம் செய்து வைத்தனர். அவர் தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

கோபாலகிருஷ்ணன் வெளிமாநிலங்களுக்கு சென்று விட்டு 2 மாதம் கழித்து தான் வீட்டிற்கு வந்து செல்வார். கடந்த முறை வந்த போது தனது குழந்தையை பத்திரமாக பார்த்து கொள்ளும்படி கூறிசென்றுள்ளார்.

சம்பவத்தன்று வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்த சிறுமி பூஜாவை காணவில்லை. இதையடுத்து அக்கம் பக்கத்தில் தேடினர். அப்போது அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் பூஜா பிணமாக கிடந்தது தெரியவந்தது.

சிறுமியின் உடலைப்பார்த்து பாட்டி முத்தம்மாள், தாத்தா பழனி கவுண்டர், சித்தி முத்துலட்சுமி ஆகியோர் கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் தெரியவந்ததும் கல்லாவி பொலிசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது பூஜா கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பொலிசார் விசாரணை நடத்திய போது, சம்பவம் நடைபெற்ற அன்று, சிறுமி தனது தாத்தா பழனி கவுண்டர் அருகில் படுத்து தூங்கியது தெரியவந்தது.

அதன்பேரில் பொலிசார் அவரிடம் எத்தனை மணிக்கு குழந்தையை கடைசியாக பார்த்தீர்கள்? குழந்தை கிணற்றில் பிணமாக மிதந்ததை எப்படி கண்டுபிடித்தீர்கள்? என்று அதிரடி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது பதில் சொல்லி கொண்டு இருந்த பழனி மீதே பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

பொலிசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், பழனி தான் பூஜாவை கற்பழித்து கொலை செய்து பிணத்தை கிணற்றில் வீசிய அதிர்ச்சி தகவல் வெளியானது.

இதையடுத்து பொலிசார் அவரை கைது செய்தனர்.

பின்னர் இந்த கொலை குறித்து அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், எனது மகனின் 2–வது மனைவி முத்துலட்சுமி மீது எனக்கு ஆசை ஏற்பட்டது. எனது மகன் வெளிமாநிலங்களுக்கு வேலைக்குசென்று விட்டதால் தனியாக இருக்கும் முத்துலட்சுமியை எப்படியாவது அடைந்து விடவேண்டும் என்று துடித்தேன்.

ஒருநாள் தனியாக இருந்த முத்துலட்சுமியிடம் எனக்கு சொந்தமான 13 ஏக்கர் விவசாய நிலம், கிணறு ஆகிய சொத்துக்களை எல்லாம் உனக்கு தருகிறேன். நாம் இருவரும் அடிக்கடி ஜாலியாக இருக்கலாம் என்றேன். இதற்கு முத்துலட்சுமி சம்மதித்தார்.

இதையடுத்து நாங்கள் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தோம். மேலும் என் மகன் இல்லாததால் நாங்கள் இருவரும் கணவன்– மனைவி போலவே நடந்து கொண்டோம்.

மாமனார்– மருமகள் என்பதால் எங்கள் மீது யாருக்கும் சந்தேகம் வராத வகையில் நடந்து கொண்டோம்.

இதுபோல் நாங்கள் இருவரும் தனிமையில் இருப்பதை பூஜா அடிக்கடி பார்த்து விட்டாள். இதையடுத்து அவள் தாத்தாவும், சித்தியும் கட்டிப்பிடித்து கொள்கிறார்கள் என்று எனது மனைவியிடம் கூறினாள்.

எனவே பூஜாவால் நானும், முத்துலட்சுமியும் சேர முடியாத நிலை ஏற்பட்டு விடுமோ? என்று பயந்தேன். இதுபற்றி நான் முத்துலட்சுமியுடன் பேசினேன். அவளும் பூஜா இருந்தால் எனக்கு எப்படி சொத்து கிடைக்கும் என்றாள்.

எனவே நான் பூஜாவை கொலை செய்ய முடிவு செய்தேன். அதன்படி சம்பவத்தன்று இரவு 10 மணியளவில் நானும், முத்துலட்சுமியும் உல்லாசமாக இருந்தோம். பின்னர் நான் அங்கிருந்து வெளியேறி வீட்டின் ஒரு இடத்தில் வந்து படுத்து கொண்டேன். அப்போது என் அருகில் பூஜா படுத்து தூங்கினாள்.

அப்போது நான் பூஜாவை அருகில் உள்ள மாட்டு கொட்டகைக்கு தூக்கி சென்று கற்பழித்தேன்.

பூஜாவின் சத்தம் கேட்டு, முத்துலட்சுமி அங்கு வந்தாள். அவளிடம் நீ உள்ளே சென்று படுத்து கொள், நான் கதையை முடித்து விடுகிறேன் என்று கூறினேன்.

இதையடுத்து அவள் உள்ளே சென்றாள். நான் பூஜாவை கற்பழித்து கொலை செய்து பிணத்தை கிணற்றில் வீசிவிட்டு வந்து ஒன்றும் தெரியாதது போல் படுத்துக்கொண்டேன்.

பின்னர் காலையில் எழுந்து பூஜாவை காணவில்லை என்று தேடினேன். என் மீது யாருக்கும் சந்தேகம் வராதப்படி நடந்து கொண்டேன். பொலிசாருக்கு என் மீது சந்தேகம் ஏற்படவே வசமாக நான் சிக்கிக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.

பழனிகவுண்டர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கொலைக்கு உதவியாக இருந்ததாக மருமகள் முத்துலட்சுமியும் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர்கள் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து முத்துலட்சுமி ராசிபுரம் கிளை சிறையிலும், பழனிகவுண்டர் சேலம் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum