Top posting users this month
No user |
பிரதமர் வேட்பாளர் யார் என்பதை சுதந்திரக் கட்சியே தீர்மானிக்க வேண்டும்!- திஸ்ஸ விதாரண
Page 1 of 1
பிரதமர் வேட்பாளர் யார் என்பதை சுதந்திரக் கட்சியே தீர்மானிக்க வேண்டும்!- திஸ்ஸ விதாரண
எதிர்வரும் பொதுத் தேர்தலில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிடும் என அதன் செயலாளரான முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் சிறந்த தொடர்புகளுடன் தமது கட்சி செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கம்யூனிஸ்ட் கட்சி தனித்து போட்டியிட போவதில்லை. சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கூட்டணிக் கட்சியாக போட்டியிடும்.
தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து தனிக்கட்சியை ஆரம்பிக்க போவதாக முன்னெடுக்கப்படும் பிரசாரங்களில் உண்மையில்லை எனவும் திஸ்ஸ விதாரண குறிப்பிட்டுள்ளார்.
வாசுதேவ நாணயக்காரவின் ஜனநாயக இடதுசாரி முன்னணி உட்பட 4 இடதுசாரிகள் கட்சிகளின் கூட்டணியின் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிறுத்தப்பட வேண்டும் என அந்த முன்னணியின் சில கூட்டணிக்கட்சிகள் முன்வைத்துள்ள யோசனை குறித்து கருத்து வெளியிட்ட திஸ்ஸ விதாரண,
பிரதமர் வேட்பாளர் யார் என்பதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே தீர்மானிக்க வேண்டும் எனவும் கூட்டணிக் கட்சிகளுக்கு பிரதமர் வேட்பாளரை தீர்மானிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் சிறந்த தொடர்புகளுடன் தமது கட்சி செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கம்யூனிஸ்ட் கட்சி தனித்து போட்டியிட போவதில்லை. சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கூட்டணிக் கட்சியாக போட்டியிடும்.
தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து தனிக்கட்சியை ஆரம்பிக்க போவதாக முன்னெடுக்கப்படும் பிரசாரங்களில் உண்மையில்லை எனவும் திஸ்ஸ விதாரண குறிப்பிட்டுள்ளார்.
வாசுதேவ நாணயக்காரவின் ஜனநாயக இடதுசாரி முன்னணி உட்பட 4 இடதுசாரிகள் கட்சிகளின் கூட்டணியின் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிறுத்தப்பட வேண்டும் என அந்த முன்னணியின் சில கூட்டணிக்கட்சிகள் முன்வைத்துள்ள யோசனை குறித்து கருத்து வெளியிட்ட திஸ்ஸ விதாரண,
பிரதமர் வேட்பாளர் யார் என்பதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே தீர்மானிக்க வேண்டும் எனவும் கூட்டணிக் கட்சிகளுக்கு பிரதமர் வேட்பாளரை தீர்மானிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum