Top posting users this month
No user |
வாழைச்சேனை பிரதேசத்தில் 22 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்
Page 1 of 1
வாழைச்சேனை பிரதேசத்தில் 22 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்
வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேசத்தில் ஜனவரி மாதத்தில் மட்டும் 22 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி ஏ.பி.திஸாநாயக்கா தெரிவித்தார்.
வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேசத்தில் நுளம்புப் பெருக்கத்தை தடுக்கும் வகையில் வாழைச்சேனை கோறளைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பிரதேச செயலகம், பிரதேச சபை மற்றும் வேல்விஷன் நிறுவனம் என்பவற்றுடன் இணைந்து புதன்கிழமை தொடக்கம் எதிர்வரும் 04ம் திகதி வரை டெங்கு நுளம்பு பெருக்கத்தை தடுக்கும் வாரமாக பிரகடனப்படுத்தி மக்களை விழிப்பூட்டும் வேலைத்திட்டங்கள் இடம் பெற்று வருகின்றது.
இதன் அடிப்படையில் நேற்று கோறளைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில் விநாயகபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ரீ.தினேஸ், பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.பிரபாகரன், வாழைச்சேனை பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன், வாழைச்சேனை பொலிஸார், பொது சுகாதார பரிசோதகர்கள், வேல்விஷன் நிறுவனத்தின் பிரதி நிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
விநாயகபுரம் பிரதேசத்தில் வீடுகள், வர்த்த நிலையங்கள், பாடசாலை உட்பட 385 இடங்கள் பரிசோதனை செய்யப்பட்டு அதில் 45 இடங்களின் உரிமையாளர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டதுடன், ஏழு வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் கோறளைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஆர்.நிதிராஜ் தெரிவித்தார்.
வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேசத்தில் நுளம்புப் பெருக்கத்தை தடுக்கும் வகையில் வாழைச்சேனை கோறளைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பிரதேச செயலகம், பிரதேச சபை மற்றும் வேல்விஷன் நிறுவனம் என்பவற்றுடன் இணைந்து புதன்கிழமை தொடக்கம் எதிர்வரும் 04ம் திகதி வரை டெங்கு நுளம்பு பெருக்கத்தை தடுக்கும் வாரமாக பிரகடனப்படுத்தி மக்களை விழிப்பூட்டும் வேலைத்திட்டங்கள் இடம் பெற்று வருகின்றது.
இதன் அடிப்படையில் நேற்று கோறளைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில் விநாயகபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ரீ.தினேஸ், பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.பிரபாகரன், வாழைச்சேனை பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன், வாழைச்சேனை பொலிஸார், பொது சுகாதார பரிசோதகர்கள், வேல்விஷன் நிறுவனத்தின் பிரதி நிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
விநாயகபுரம் பிரதேசத்தில் வீடுகள், வர்த்த நிலையங்கள், பாடசாலை உட்பட 385 இடங்கள் பரிசோதனை செய்யப்பட்டு அதில் 45 இடங்களின் உரிமையாளர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டதுடன், ஏழு வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் கோறளைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஆர்.நிதிராஜ் தெரிவித்தார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum